Sunday, March 29, 2026

மகாகவி பாரதியார் பாடல் - நெஞ்சு பொறுக்குதில்லையே! இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்


எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5..

மகாகவி பாரதியார்  பாடல் - நெஞ்சு பொறுக்குதில்லையே!            
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI  ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன் 


நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

அஞ்சி யஞ்சி சாவார்-இவர் 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே 
வஞ்சனைப் பேய்களென்பார்-இந்த 
மரத்திலென்பார் அந்தக் குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார்-மிக 
துயர்ப்படுவார்  எண்ணி பயப்படுவார் 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

மந்திர வாதி யென்பார்-சொல்ல 
மாத்திரத்தி லே மனக் கிலிபிடிப்பார் 
யந்திர சூனியங்கள் -இன்னும் 
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே- ஜனம் 
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம் 
அந்த அரசியலை -இவர் 
அஞ்சுதரு பேயென்றேண்ணி நெஞ்சமயர்வார்
  
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார் 
துப்பாக்கி கொண்டொருவன் -வெகு 
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார் 
அப்பாலெவனோ செல்வான்-அவன் 
ஆடையைக் கண்டு பயந்தெழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார்-இவர் 
யாரிடத்தும் பூனைகள் போலேங்கிநடப்பார் 
 
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
 
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
கொஞ்சமோ பிரிவினைகள் -ஒரு 
கோடியென்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான்-அப்பன் 
ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால் 
நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு 
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

சாத்திரங்க  லொன்றுங்  காணார் -பொயச் 
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே 
கோத்திரம் ஒன் றாயிருந்தாலும் -ஒரு 
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் 
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் -தமைச் 
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் 
ஆத்திரங்கொண்டேயிவன் சைவன் -இவன் 
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார். 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதில்லையே
கஞ்சி குடிப்பதற்கிலார் -அதன் 
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்   
பஞ்சமோ பஞ்சமென்றே -நிதம் 
பரிதவித் தே உயிர் துடிதுடித்து 
துஞ்சி மடிகின்றாரே -இவர் 
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

எண்ணிலா நோயுடையார்-இவர் 
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் 
கண்ணிலாக் குழ்ந்தைகள்போல்-பிறர் 
காட்டிய வழியிற்சென்று மாட்டிகொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து 
நாலா யிரங் கோடி நயந்துநின்ற 
புண்ணிய நாட்டினிலே -இவர் 
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 

No comments:

மகாகவி பாரதியார் பாடல் - நெஞ்சு பொறுக்குதில்லையே! இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்

எனக்குப் பிடித்த மகாகவி  பாரதியாரின் இன்னுமொரு பாடலிது. எனது குரலைப் பாவித்து , இசையமைத்துப் பாடியிருக்கின்றார் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5....