'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, February 16, 2024
வெள்ளி சிணுங்கி அழ ஏலே ஏலோ
கவிஞர் மஹாகவியின் 'புதியதொரு வீடு' இசை நாடகத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் எழுத்தாளரும், பாடகருமான திவ்வியராஜன். திவ்வியராஜனின் இதயத்தை வருடித் தாலாட்டும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை. என்ன குரல்! நல்ல குரல் வளம் இருந்தால் மட்டும் போதாது. வரிகளை உணர்ந்து, உள் வாங்கித் தன்னை மறந்து , வரிகளுடன் ஒன்றிப்பாடகர் பாடுகையில்தான் அப்பாடல் கேட்பவரின் இதயங்களை வருடிச் சென்று அதனுடன் ஒன்றிட முடியும். திவ்வியராஜனின் குரலைக் கேட்பதும் இன்பம். அவர் பாடும் அழகைப் பார்ப்பதும் இன்பம்.
கவிஞரின் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளன. வெள்ளி சிணுங்கும் கும்மிருட்டு விண். மெல்லச் சுழன்றெழுந்து மேல் விழும் காற்று. வார் கடலின் நீர் கிழிக்கும் வள்ளம். கடற்றொழிலாளர் கரைவலை வள்ளம் வலித்துக் கடலில் செல்லும் காட்சியினை,சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலைச் சிறப்பாக, உணர்வுபூர்வமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர் மஹாகவி.அமரர் பாபு பரதராஜா, பாடகர் திவ்வியராஜன் இணைந்து , அருவி அமைப்பு மூலம் வெளியிட்ட 'புலரும் வேளையிலே'இசைத்தட்டில் இடம் பெற்றுள்ள இப்பாடலுக்கு இசை அமைத்திருப்பவர் எஸ்.வீ.வர்மன். இணைந்து பாடியிருப்பவர்கள் க.ஜெயராஜா , கிருபா . பாடலுக்கு அறிமுகத்தைச் செய்திருப்பவர் கவிஞர் அ.கந்தசாமி ( கந்தசாமி மாஸ்டர்) . இக்காணொளியின் இன்னுமொரு சிறப்பு - இதன் ஒளிப்பதிவு. சொற்களுக்கு உயிரூட்டும் , இயற்கைச் சூழலை எடுத்துக்காட்டும் ஒளிப்பதிவு.
வெள்ளி சிணுங்கி அழ ஏலே ஏலோ
விண்ணிறைந்த கும்மிருட்டில் ஏலே ஏலோ
துள்ளி எழுந்து வந்து ஏலே ஏலோ
தோணியினைத் தள்ளி விட்டோம் ஏலே ஏலோ
மெள்ளச் சுழன் றெழுந்து ஏலே ஏலோ
மேல்விழும் இக்காற்றை எங்கள் ஏலே ஏலோ
வள்ளம் சிரிக்கிறது ஏலே ஏலோ
வார் கடலின் நீர் கிழித்தோம் ஏலே ஏலோ
வீசி எறிந்தவலை
வீழ்ந்தமிழ்ந்து போகிறது
மூசி வியர்வை விழ
முக்கி முக்கி நாம் வலித்தோம்.
பாடலைக் கேட்டுக் களிப்புற - https://www.youtube.com/watch?v=MeH6OeIwhpI
Subscribe to:
Post Comments (Atom)
ஆன்மாவின் இருண்ட இரவு: கனேடிய தமிழ் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலில் இலங்கைத் தமிழ் அகதிகளின் இருத்தலியல் நெருக்கடி பற்றிய ஆய்வு – முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் கல்லூரி பெண்கள் –
ஆங்கில ஆய்விதழான Scholarly International Multidisciplinary Print Journal’ (ஜனவரி - பிப்ரவரி 2017) இதழில் முனைவர் ஆர்.தாரணி எழுதிய வ.ந.கிரித...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment