Sunday, December 22, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால்  குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.

நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

திருடிய குதிரைகளைத் தந்திரமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய
அல்லது திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நோயால் துவண்டவை அல்ல.
அவை நல்லவை.
அவை வல்லவை
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.

குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.

நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

No comments:

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு!

யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முன்னாள் மாணவரும் , கட்டடக்கலைஞரும் வரலாற்றறிஞருமான இ.மயூரநாதன் எ...