'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, December 22, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
திருடிய குதிரைகளைத் தந்திரமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய
அல்லது திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நோயால் துவண்டவை அல்ல.
அவை நல்லவை.
அவை வல்லவை
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.
குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
Subscribe to:
Post Comments (Atom)
நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -
[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை. பகிர்ந்துகொள்கின்றேன்.] தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்க...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
No comments:
Post a Comment