Sunday, December 22, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
திருடிய குதிரைகளைத் தந்திரமாக
உங்கள் மந்தையில் கலந்து
விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய
அல்லது திருடப் போகும் குதிரைகள்
நிச்சயம் நோயால் துவண்டவை அல்ல.
அவை நல்லவை.
அவை வல்லவை
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
முரட்டுக் குதிரைகள்.
குதிரைத் திருடர்களே!
உங்களுக்கொரு செய்தி.
குதிரைத் திருடர்களே கவனம்.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
Subscribe to:
Post Comments (Atom)
அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!
என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள் ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும். ராணி வாராந...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment