'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Monday, December 9, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - உலகக் கவி கணியன் பூங்குன்றனார்
உலகக் கவி கணியன் பூங்குன்றனார்
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்எல்லைகள் அற்ற உலகை வேண்டினான்.
நல்லதை நினைத்தான். நாம் அனைவரும்
பூமித்தாய்ப் புதல்வர் புதல்வியர் என்றே
எண்ணினான் அதை எழுத்தில் வடித்தான்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
உலகத்து மானுடர் நாம் உறவினர்
உள்ளத்தில் வைப்போம் என்றான் நம்பினான்.
உள்ளம் பரந்ததை வெளிப்படுத்தும் கூற்று
உண்மை இதை மனத்தில் வைப்போம்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஓயாது பெருங்குரலில் எடுத்துக் கூறுவோம்.
தீது ஒழியும் நன்று மலரும்
பிரிவு அற்ற உலகு விரியும்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
Subscribe to:
Post Comments (Atom)
த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!
'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான த.பி...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
No comments:
Post a Comment