'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, December 8, 2024
வ.ந.கிரிதரன் பாடல்- உண்மை அன்பெனும் ஊற்று!
உண்மை அன்பெனும் ஊற்று!
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
நிதிகொண்டு எதனையும் இங்கு வாங்கலாம்.
நிதிகொண்டு வாங்க முடியாதது அன்பு.
உண்மை அன்பு ஊற்றெடுக்கும் தானாக.
ஊற்று பெருகும் நீர் வீழ்ச்சியாக
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
எம்ஜிஆரின் உணவு, கல்விக்கான பங்களிப்புகள்!
எம்ஜிஆர் தனியார் பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அள...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment