Sunday, April 20, 2025

கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)


துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.

இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.

பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?வடிகட்டித் தெளிந்தால்
வடித்துத் தெளிந்ததை
உண்மையாக்கித் தொடரின்
உள்ள உண்மை
உறைக்கும். அல்லது
உதிரும் அதில்
உள்ள பொய்மைக் கனத்தால்.

உணர்வீர். உரைப்பீர். எழுத்தில்
வடிப்பீர். வரவேற்பேன் யான்.

துதியைத் துதிப்போரை
மதிப்பேனா? மிதிப்பேனா?

No comments:

அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!

என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள்  ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும். ராணி வாராந...