Sunday, April 20, 2025

கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)


துதிபாடல், துதி நாடலால்
துவண்டு கிடக்கிறது
உலகு.

இருப்பின் தன்மை தெரிந்தால்
இதற்கொரு தேவை உண்டா?
இல்லை என்பதை உணரார்
இவர்.

பாதிப்பின் உணர்வுதனை
பரிசுத்தம் கெடாமல் பகர்வீர்.
பண்பாக்கி நடை பயில்வீர்.
பார் போற்றும். ஊர் போற்றும்.
யார்தாம் போற்றார்?வடிகட்டித் தெளிந்தால்
வடித்துத் தெளிந்ததை
உண்மையாக்கித் தொடரின்
உள்ள உண்மை
உறைக்கும். அல்லது
உதிரும் அதில்
உள்ள பொய்மைக் கனத்தால்.

உணர்வீர். உரைப்பீர். எழுத்தில்
வடிப்பீர். வரவேற்பேன் யான்.

துதியைத் துதிப்போரை
மதிப்பேனா? மிதிப்பேனா?

No comments:

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...