'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, April 11, 2025
எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியத்தின் 'அக்கரைகள் பச்சையில்லை'
எழுத்தாளர் க.அருள் சுப்பிரமணியம் அவரது 'அவர்களுக்கு வயது வந்து விட்டது' நாவல் மூலம் நன்கறியப்பட்டவர். மானுட அனுபவங்களைச் சுவையாக , அனுபவபூர்வமாக விபரிப்பதில் வல்லவர். உதாரணத்துக்கு ஒருவர் குடிக்கும் அனுபவத்தை விபரிக்க வேண்டுமானால், அவ்வனுபவத்தை அனுபவ பூர்வமாக, உயிர்த்துடிப்புடன் விபரிப்பார். அதை வாசிக்கையில் அவ்வனுபவம் நமக்கும் வந்து விடும்.
இந்நாவல் பல அக்காலகட்டத்தகவல்களையும் தருகின்றது. உதாரணத்துக்கு ஒன்று - திருகோணமலைத் துறைமுகத்திலுள்ள மாதவன் நாயரின் தேநீர்க் கடை பற்றி வருகின்றது. கதை கற்பனைக் கதையானாலும் அக்காலத்தில் கேரளத்து நாயர்களும் அங்கு தேநீர்க் கடை போன்ற வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால்தான் மாதவன் நாயர் என்னும் பாத்திரமும் நாவலில் வருகின்றது என்றே நான் கருதுகின்றேன். இது தவறென்றால் அறிந்தவர்கள் அறியத் தரவும்.'அக்கரைகள் பச்சையில்லை' என்னும் இந்நாவல் இன்றைய இளைஞர்களுக்கு ஆரோக்கியமான அறிவுரை கூறும் நல்லதொரு நாவல். திருகோணமலைத் துறைமுகத்தை மையமாகக்கொண்ட் நாவலில் , அங்கு பணிபுரியும் ஒருவரது மகன் படித்து விட்டு வேலை வாய்ப்பற்ற நிலையில் கப்பலில் வேலை செய்வதற்காகப் புலம் பெயர்கின்றான். அவனது கசப்பான கப்பல் அனுபவங்கள் காரணமாக , அவன் மீண்டும் நாடு திரும்புகின்றான். வெளிநாட்டுக் கனவுகளுடன் புறப்பட்டவனின் கனவுகள் எவ்விதம் நொருங்குகின்றன என்பதை விபரிக்கும் நாவல்.
இன்று நம் இளைஞர்கள் பலரும் புலம் பெயர வேண்டுமென்ற கனவுகளில் மூழ்கிக்கிடக்கின்றார்கள். அவர்களுக்கும் அக்கரைகள் பச்சையில்லை என்பதை நாட்டை விட்டு நீங்கினால் மட்டுமே புரிந்து கொள்வார்கள்.
இந்தக் கதை விகடன் நடத்திய பொன்விழா நாவல் போட்டியில், 'தூரத்து ஓவியங்கள்' என்னும் பெயரில், முதற் பரிசு பெற்றது. பின்னர் ஏற்கனவே 'அக்கரைகள் பச்சையில்லை' என்னும் பெயரில் வீரகேசரி பிரசுர்மாக வெளியான காரணத்தினால் தகுதியிழந்தது. ஆனால் இவர் பின்னர் அதே ஆனந்த விகடனில் 'சூரசம்ஹாரம்' என்னும் பெயரில் இன்னுமொரு தொடர்கதையையும் எழுதியிருக்கின்றார்.
நாவலை வாசிக்க - https://noolaham.net/project/876/87599/87599.pdf
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'
"சாவித்திரியின் பெரிய விருப்பம் " என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment