Friday, August 23, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - ஒட்டகங்கள்!




- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

நாளை என்ற பயணம் நாடி
வசந்தத்தை நாடித்  தொடரும் பயணம்
எங்கள் பயணம்.  எங்கள் பயணம்.

துன்பப் புயற் காற்றுகள் வீசும்.
தேகங்கள் சீர் குலைந்து விடுவதில்லை.
உறுதி குலைந்து போவதும் இல்லை.

Thursday, August 22, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பும், விடை தேடும் நெஞ்சும்.


                                           - இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -


படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

யார் படைத்தார் பேரண்டமிதை.
பார்த்தால் பிரமிக்க வைக்கும்
பேரண்டத்தை யார் படைத்தார்?
யார் படைத்தார்? ஏன் படைத்தார்?

நுண்ணியதிலும் நுண்ணியதான குவாண்டம்
உருப்பெருக் காட்டிகள் இல்லையெனில்
உள்ளவற்றைப் -பார்க்க முடியாது.
உள்ளவற்றை உணர முடியாது.

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

பெருந் தொலைவுகள் விரிந்திருக்கும்
பிரபஞ்சப் புதிர்களை அறிவதற்கு,
அருகில் உள்ளதுபோல் காட்டும்
தொலைக் காட்டிகள் தேவையாகும்.

Tuesday, August 20, 2024

Poem: Wake up, super human! By V.N.Giritharan


                                                                 
Drawn by AI

This is the translation of my Tamil poem written in the eighties, later published in Thayagam (Canada) and in e-magazines Pathivukal and Thinnai. It is also included in my first anthology of poems published by Mangai Pathippagam.

Poem: Wake up, super human!  By V.N.Giritharan

Concrete! Concrete! Concrete!

Walls! Radiating heat and burning with intensity,
The smooth, deceptive white surfaces.

Sidewalks of cement that wear a mocking grin.

Spaces lie entranced, embraced by fearless pillars.

In the filtration of air currents,
Flowing warm rays.
In the playful laughter of frost droplets,
The chill sweeps through,
Amid the sweetness of dreams about meadows,
Underneath the blue canvas,
Lie the sorrowful memories
Of the cold earth mother.

வ.ந.கிரிதரன் பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?



                                             - இசை & குரல் - AI Suno | ஓவியம் - AI

இக்கவிதை தாயகம் (கனடா) பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியான கவிதை. எண்பதுகளில் என் குறிப்பேட்டில் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளில் ஒன்று. கனடாவில் மங்கை பதிப்பக வெளியீடாக வெளிவந்த  'எழுக அதிமானுடா' என்னும்  எனது முதலாவது கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் ஒன்று.

வ.ந.கிரிதரன் பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? 

Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!


                                           - இசை  & குரல் - AI SUNO | ஓவியம்: AI -

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது இககவிதையான . "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'"  கவிதையும் இடம் பெற்றுள்ளது.

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.

விரிவெளியில் படர்ந்து கிடக்கும்
உன் நகைப்போ ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ
எனக்கொன்றும் புதியது அல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

வ.ந.கிரிதரன் பாடல் : செயற்கை அறிவுத் தொழில் நுட்பம்!



- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=r-iEJwSfg5Q

செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.

செயற்கை அறிவுத் தொழில் நுட்பம்
இயற்கை அல்ல என்பர் சிலர்.
செயற்கைக்குள் வாழ்வைத் தள்ளும்
இயற்கையாக வாழுங்கள் என்பர் அவர்.

தொழில் நுட்பம் எது என்றாலும்
தொழிலை மேம்படுத்தும் தன்மை மிக்கதே.
புதியனவற்றை ஏற்பதும், பயன் பெறுவதும்
புதிய விடயம் ஒன்றும் அல்லவே.

செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.

Monday, August 19, 2024

வ.ந.கிரிதரன் பாடல் : ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்!



- இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HSFigDG3ESU

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

மணியத்தின் ஆர்டிஸ்ட் மணியத்தின்
மக்கள் திலகத்தின் கட் அவுட்டுகள்
எம்மை மகிழ்வித்த காலமது.
எண்ணிப் பார்த்தால் மகிழ்வுதான்.

வாத்தியாரின் புதுப் படமென்றால்
வாண்டுகள் எங்களுக்கோ கொண்டாட்டம்தான்.
முதல் நாளிரவே காட்சி தொடங்கிவிடும்.
முண்டியடித்தபடி வாத்தியார் இரசிகர்கள்.

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...