Friday, August 23, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - ஒட்டகங்கள்!




- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

நாளை என்ற பயணம் நாடி
வசந்தத்தை நாடித்  தொடரும் பயணம்
எங்கள் பயணம்.  எங்கள் பயணம்.

துன்பப் புயற் காற்றுகள் வீசும்.
தேகங்கள் சீர் குலைந்து விடுவதில்லை.
உறுதி குலைந்து போவதும் இல்லை.ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

கானல் நீர் கண்டு கண்கள்
கலங்கி விட்ட போதும் கண்
பாவையின் ஒளி பூத்து விடுவதில்லை.

நம்பிக்கைக் கோல் பற்றித்  தொடர்வோம்.
எண்ண ஒட்டகங்கள் மேல் பயணிப்போம்.
வசந்தம் நாடிப் பயணம் தொடரும்.


No comments:

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி  சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்...

பிரபலமான பதிவுகள்