'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Thursday, August 15, 2024
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nfc1A2E8IdM
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.
என் பால்ய காலத்து நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.
பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக் கழித்த பொழுதுகள் தெரிந்தன.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.
ஒரு தடவை கீரிமலை சென்றோம்.
ஒல்லித்தேங்காய் இல்லாவிட்டால் கேணியில்
நீந்த முடியாத நிலையில் நான்.
நீந்துவதில் பேராற்றல் அற்ற நிலையில் நான்.
அவனும் இன்னுமொரு நண்பனும் நீந்தினார்கள்,
அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்த்து நின்றேன்.எதிர்பாராத தருணத்தில் அருகில் வந்தவர்கள்
என்னைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்
கேணிக்குள் வீசிச் சிரித்தார்கள்.
கணப்பொழுதில் நடந்த நிகழ்வென்பதால்
திக்குமுக்காடிப் போனேன் நான்,
தட்டுத்தடுமாறி நீந்தினேன். கரை சேர்ந்தேன்.
அணிந்திருந்த ஆடைகள் நனைந்து விடவே]
அந்திவரை அங்கிருந்தோம்.
ஆடை உலர்ந்ததும் வீடு திரும்பினோம்,
அன்று முழுவதும் அவர்கள் சிரித்தார்கள்.
அவனைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.
பதின்ம வயதில் நண்பனை முதற்காதல்
பற்றிக்கொண்டு விட்டது. நெஞ்சங் கவர்ந்தவள்
பாடசாலை விட்டு வீடு திரும்பும் பஸ்ஸில்
பாய்ந்து சென்று ஏறுவான். கூடவே எதுவும்
புரியாமல் நானும் ஏறுவேன்.
பின்னர்தான் தெரிந்தது நண்பனின்
பரிதவிக்கும் காதல் மனசு பற்றி.
நேற்று அவனைக் கண்டபோது
ஊற்றென அந்நினைவுகள் பெருகின.
மானுட வாழ்க்கையில் முதற் காதல்
முக்கியமானதோர் படிக்கட்டு.
முதற்காதல் எப்போதுமே
முடிந்த காதல்தான்.
தொடர்ந்த காதல் அல்ல.
ஆனால்
இருப்பு உள்ளவரை
இருக்கும் காதல்.
தொடரும் காதல்.
நகரில் இவனுடன் அலைந்த பொழுதுகள்,
நகரில் இவனுடன் பார்த்த படங்கள்,
நகரில் இவனுடன் ஆற்றிய உரையாடல்கள்.
நகரில் இவனுடன் அருந்திய முதற் கள்
எல்லாமே நினைவுக்கு வந்தன.
என் பால்ய , பதின்மப் பருவத்து
இன் நண்பன் இவனைக் கண்டபோது.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.
Subscribe to:
Post Comments (Atom)
ஆன்மாவின் இருண்ட இரவு: கனேடிய தமிழ் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலில் இலங்கைத் தமிழ் அகதிகளின் இருத்தலியல் நெருக்கடி பற்றிய ஆய்வு – முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் கல்லூரி பெண்கள் –
ஆங்கில ஆய்விதழான Scholarly International Multidisciplinary Print Journal’ (ஜனவரி - பிப்ரவரி 2017) இதழில் முனைவர் ஆர்.தாரணி எழுதிய வ.ந.கிரித...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment