Saturday, August 31, 2024

வ.ந.கிரிதரன் பாடல். என்னை மாற்றிய உன் வரவு!


இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI -

என்னை மாற்றிய உன் வரவு!

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

காதல் உணர்வு படைப்பின் அற்புதம்.
காலம் கடந்தும் நிலைக்கும் காவியம்.
பொருள் உலகில் மருள் நீக்கும்
அரும் பெரும் ஓருணர்வு அதுவாகும்.

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

என்னைப் பற்றி எண்ணி இருந்தேன்.]
என்னவன் உன்னைக் காணும் வரையில்.
உன்னைக் கண்ட நாள் முதலாய்
என்னை நான் எண்ணுவதைத் துறந்தேன்.

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

உன் முறுவல் முகம் நிழலாடும்
என் மனத்தில்தான் எத்துணை இன்பம்.
உன்னை நினைக்கும் தருணங்கள் எல்லாம்
என்னை வியப்படைய வைக்கும் கண்ணா.

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

சுயநலம் , பொருள்வெறி கொண்ட உலகில்
மயங்கிக் கிடந்தேனே எனை மறந்து.
மயக்கம் துறக்க வைத்தது உன்வரவு.
மண்ணில் புத்துணர்வு தந்தது உன்நினைப்பு.

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.



No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்