Thursday, August 15, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: ஆசை!


இசை & குரல்: AI Suno | ஓவியம் AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=aUz2UDDY_14


பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
பாவை இவள் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்துப் பிடித்துக் கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.

பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.

இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
இவளின் இஷ்ட்டமாகும்.

No comments:

கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -

நாம் மந்தைகள். மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும் மந்தைகள். சொந்தமாகச் சிந்திக்க, சீர்தூக்கி முடிவுகளை எடுக்க எமக்குத் திராணியில்...

பிரபலமான பதிவுகள்