Tuesday, January 6, 2026

வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!


[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1  -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்.]
 

வ ந கிரிதரன் பாடல்   காட்சியும் சித்து  விளையாட்டும்!
இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

Monday, January 5, 2026

இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் பாலு மகேந்திரா!


இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக  இந்திய  மத்திய அரசின் தேசிய விருதினை பெற்றவர் பாலு மகேந்திரா!  - வ.ந.கி -

இந்தியச் சினிமா உலகில் இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் மூன்று தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.  ஆறு  தடவைகள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபெயர் விருதினைப் பெற்றவர். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பொழுது இவர் யாரென்று அறிந்திருப்பீர்கள். ஆம்! இவர்தான் பாலு மகேந்திரா.

வ.நகிரிதரன் பாடல் - வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!


வ.நகிரிதரன் பாடல் - வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!

இசை & குரல் - SUNO AI  ஓவியம் - AI

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

Saturday, January 3, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!


வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!

இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI
பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் 

'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!

'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
காணும்  திசையெல்லாம்
'காங்ரீட்'காடுகள்.
'காங்ரீட்' காடுகள்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'

'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!

கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
'காங்ரீட்' சுவர்கள்!

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

ஆதி மானுடர் அண்ணாந்து  பார்த்த  இந்தநிலா
அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.



வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம். 

இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

Friday, January 2, 2026

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -




பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

அது மட்டுமா,
அவை  உரையாடவும் செய்கின்றன.
அவை  உரையாடவும் செய்கின்றன.

 தெரியுமா நண்பர்களே!
 தெரியுமா நண்பர்களே!

வ.ந.கிரிதரன் - பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

 

வ.ந.கிரிதரன் - பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!


இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

Thursday, January 1, 2026

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.

அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!


என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்)  என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.  என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:

1. என் குருமண் காடே! 
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4.  இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!

இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன்  ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும்  மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி  யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி,  பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.

Wednesday, December 31, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்




வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்


இசை & குரல்; AI SUNO | ஓவியம் - AI


 

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

சிந்தையில் சென்றதை எண்ணிக் குமைதல்
சிந்தையில் இருத்தல் வேண்டாம்  அதனால்
சென்றதை எண்ணி வருந்தாதீர் என்றான்
இன்று இன்பமாய்க் கழிக்கவே அதனால்.

இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.

Tuesday, December 30, 2025

வ ந கிரிதரன் பாடல் காலவெளி நாம்!


வ ந கிரிதரன் பாடல் காலவெளி நாம்!

இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

சொல்லவிந்து ஊர் துஞ்சும் 
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.

முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா,
எதற்காக இந்தச் சிந்திப்பு?

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.

விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

Monday, December 29, 2025

அஞ்சலி: ஓவியர் ரமணி ஆற்றல் மிக்க ஓவியக் கலைஞர்! சிற்பியும் கூட! - வ.ந.கிரிதரன் -


ஓவியர் ரமணி (வி.சிவசுப்பிரமணியம்)

ஓவியர் ரமணி மறைந்த செய்தியினைத் தாங்கி முகநூல் வெளியானது. ஆழ்ந்த இரங்கல்.

பல தசாப்தங்களாக இலங்கையில் வெளியான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அதிகமாக ஓவியம் வரைந்தவர் இவராக இருக்கக்கூடும். அவ்வப்போது இவரது ஓவியங்கள் தென்பட்டுக்கொண்டேயிருக்கும், எழுத்தாளர் டானியலின் 'பஞ்சமர்' நாவலின் முதற் பதிப்புக்கு அட்டைப்படம் வரைந்தவர் இவரே.  செங்கை ஆழியானின் 'போரே நீ  போய்விடு' நாவலுக்கு அட்டைப்படமும், ஓவியங்களும் வரைந்தவர். பூபாலசிங்கம் வெளியீடாக வெளிவந்த அந்நாவலில் இவர் வரைந்த ஓவியங்கள் பலவற்றைக் காணலாம்.

Saturday, December 27, 2025

மறக்க முடியாத யாழ் வின்சர் திரையரங்கு! (என் முகநூற் பதிவு)

எழுபதுகள், எண்பதுகளில் இலங்கையிலேயே வடிவமைப்பில் மிகச்சிறந்த திரையரங்கென்றால் அது யாழ்ப்பாணம் வின்சர் திரையரங்காகத்தானிருக்கும். குளிரூட்டப்பட்ட வசதி இல்லாவிட்டாலும் , அதற்கான தேவையே இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்ட திரையரங்கு அது. அதை ஆரம்பத்தில் புது வின்சர் என்றழைத்தனர். காரணம், முன்பு இருந்த சிறிய வின்சர் திரையரங்கு புதுத்திரையரங்கு கட்டப்பட்டதும் ,லிடோ திரையரங்காக மாறியது. மாறும் வரையில் இதனை மக்கள் புது வின்சர் என்றே அழைத்தனர். லிடோ இயங்கத்தொடங்கியதும் வின்சர் என்றழைக்கததொடங்கினர்.
 
இத்திரையரங்கின் சிறப்பம்சங்களில் சில... உயர்ந்த , கூரையினை உள்ளடக்கிய திரையரங்கு,. இரு புறமும் சுவரில் பெரிய ஜன்னல்கள் இருந்தன. படம் ஆரம்பமாவதற்கு முன்னர் பணியாள் ஒருவர் ஒவ்வொன்றாகப் பூட்டிச் செல்வார். மாலைக்காட்சியென்றால் இவ்விதம் பூட்டப்படும் ஜன்னல்கள் , இருள் கவியத்தொடங்கியதும் திறந்து விடப்படும். சிலுசிலுவென்று வீசும் காற்றை அனுபவித்தபடி , ஜன்னலினூடு தெரியும் இரவு வானை இரசித்தப்படி , அங்கு படம் பார்ப்பதே சுகானுபவமானதோர் அனுபவம்,. ஜன்னல்களுக்கு வெளிப்புபுறமாக நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 
 
இம் முகநூற் பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பர் கெளரிசங்கர் இத்திரையரங்கை வடிவமைத்தவர் உலகப்புகழ்பெற்ற கடடக்கலைஞர் Geoffrey Bawa என்று குறிப்பிட்ருந்தார். இவர்தான் இலங்கையின் தற்போதுள்ள பாராளுமன்றத்தை வடிவமைத்தவர். உலகக் கட்டடக்கலையில் Tropical Modernism அதாவது வெப்பமண்டல் நவீனத்துவம் என்றொரு பாணியினை அறிமுகப்படுத்தியவராக அறியப்படுபவர். ஒரு நாட்டின் இயற்கைச் சூழல், கலாச்சாரம் போன்றவற்றை உள்வாங்கி, அந்நாட்டுக்குரிய தனித்துவத்துடன் கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். இப்பொழுது விளங்குகின்றது வின்சர் ஏன் இவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கான காரணம். நன்றி கெளரிசங்கர்.
 

இத்திரையரங்கின் இன்னுமொரு முக்கியமான அம்சம் - முதல் வகுப்பிலிருந்து கலரி வரை தரை சாய்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. முதல் வகுப்பின் ஆரம்பத்தில் சிறிது உயரத்தில் பல்கணி அமைநதிருந்தது. பொதுவாகத் திரையரங்குகளில் பல்கணிக்கு மேல்தான் புரஜக்டர் அறை அமைந்திருக்கும். ஆனால் புது வின்சரில் பல்கணிக்கும், முதல் வகுப்புக்குமிடையில் புரஜக்டர் அறை அமைந்திருந்தது. யாழ் திரையரங்குகளில் உயர்ந்த, பரந்த, விசாலமான திரையரங்கு வின்சர்தான். அதுவே அதற்கொரு தனித்துவத்தைக் கொடுத்தது. 

புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முக பகுப்பாய்வு! (2) - ஈழக்கவி -

பகுதி நான்கு:

'அமெரிக்கா' குறுநாவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவல் ஈழத்து புகலிட இலக்கியப் பரப்பில் ஒரு மிகமுக்கியமான மைல்கல். இது வெறும் ஒரு தனிமனிதனின் பயணக்கதை மட்டுமல்ல; 80-களில் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஒரு தலைமுறையின் அரசியல், உளவியல் மற்றும் சமூகப் போராட்டங்களின் ஆவணம்.

இந்தக் குறுநாவலை நவீன ஆய்வணுகு முறையில் பின்வரும் நிலைகளில் பகுப்பாய்வு செய்யலாம்:

1. நனவோடை உத்தி (Stream of Consciousness)

இக்குறுநாவலின் மிகச்சிறந்த அம்சம் அதன் கதை சொல்லும் முறை. கதாநாயகன் இளங்கோ அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறு காலப்பகுதியில், அவனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.

    கடந்த காலமும் நிகழ்காலமும்: யாழ்ப்பாணத்து வீதிகளும், கொழும்பு சிறைச்சாலையும், அமெரிக்க விமான நிலையத்தின் தனிமை அறையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வருகின்றன.

    உளவியல் சிக்கல்: ஒரு அகதி எதிர்கொள்ளும் 'நிச்சயமற்ற தன்மை' (Uncertainty) இந்த நனவோடை உத்தி மூலம் மிகச்சிறப்பாக வாசகனுக்குக் கடத்தப்படுகிறது.

புகலிட இலக்கியத்தில் அதிகார அரசியலும் விளிம்புநிலை இருத்தலியலும்: வ.ந.கிரிதரனின் 'மான் ஹோல்' மற்றும் 'அமெரிக்கா' படைப்புகளை முன்வைத்து ஒரு பன்முகப் பகுப்பாய்வு!(1) - ஈழக்கவி -

ஆய்வுச் சுருக்கம் (Abstract)

இக்கட்டுரை, ஈழத்துப் புகலிட எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புளில் (மான் ஹோல், அமெரிக்கா) வெளிப்படும் அதிகார மையங்களுக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை பன்முகக் கோணங்களில் ஆராய்கிறது. 'மான் ஹோல்' சிறுகதையில் வரும் பூர்வகுடிச் சாமி மற்றும் 'அமெரிக்கா' குறுநாவலில் வரும் அகதி (இளங்கோ) ஆகிய இரு கதாபாத்திரங்களின் ஊடாக, நவீன அரசுகள் அடையாளங்களை எப்படிச் சிதைக்கின்றன என்பதையும், உலகமயமாக்கல் சூழலில் 'அந்நியமாதல்' (Alienation) எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

பகுதி ஒன்று

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature)

ஈழத்து புகலிட இலக்கியம் (Eelam Diaspora Literature) என்பது உலக இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான மற்றும் காத்திரமான கிளை. இது வெறும் இடப்பெயர்வை மட்டும் பேசாமல், போர், இழப்பு, இருத்தலியல் போராட்டம் மற்றும் புதிய நிலப்பரப்பில் அடையாளத்தைத் தேடுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த விரிவான பார்வையை பின்வரும் நிலைகளில் காணலாம்:

1. தோற்றம்: வரலாற்றுப் பின்னணி (1970 - 1983)

ஈழத்து புகலிட இலக்கியத்தின் விதைகள் 1970-களின் இறுதியில் தூவப்பட்டாலும், 1983 கறுப்பு ஜுலை வன்முறையே இதன் பெரும் வெடிப்பிற்கு காரணமாக அமைந்தது.

    அரசியல் ஒடுக்குமுறை: இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் மற்றும் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்தனர்.

    ஆரம்பகாலப் படைப்புகள்: தொடக்கத்தில் இவை பெரும்பாலும் தாயகம் நோக்கிய ஏக்கத்தையும், பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்தும் கவிதைகளாகவே இருந்தன. "தொலைந்து போனவர்கள்", "அகதிகள்" என்ற விம்பங்களே அதிகம் பதிவாகின.

Thursday, December 25, 2025

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!



இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.

மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.

கவிதை: கற்பனைப் பெண்ணே! - வ.ந.கிரிதரன்


இசை & குரல்: AI SUNO |
இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -

கற்பனைப் பெண்ணே! எங்கேயடீ போயொளிந்து கொண்டாய்?

பாலஸ்தீனத்து மணல்மேடுகளிற்குள்ளா?

அங்கு நிச்சயம் போயிருக்க முடியாது.
அங்குனக்கென்ன வேலை.

கற்பனையில் கனவு கண்டிட அவர்களிற்கெங்கே நேரம்?

தர்மத்திற்கான புனிதப் போரொன்றினையங்கு நீ
கண்டிடலாம்.

சத்தியத்தின் ஆவேசத்தில் வீசிடுங் காற்றின்
வெம்மையினை அங்கு நீ ஸ்பரிசித்திடலாம்.

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -


இசை & குரல்: AI SUNO |
இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. -

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

மெல்லிய கருக்கிருளில் ஆழ்ந்து கிடக்கும்
அதிகாலைப் பொழுதுகளில்,
தூரத்தே ஒதுங்கி நின்று கண்சிமிட்டும்
நட்சத்திரத் தோகையரே!
உங்களைத்தான் தோகையரே!
நீங்கள்தான் எத்துணை அழகானவர்கள்!
எத்துணை அழகானவர்கள்!
நான் உங்களையெல்லாம் எவ்வளவு
நேசிக்கின்றேன் தெரியுமா? என்னினிய
தோழர்களே!

Tuesday, December 23, 2025

வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!


நண்பர்களே!,முகநூல் நிறுவனம் பல நிமிடக் காணொளிகளையும் ரீல்களாகத் தற்போது அனுமதியளிக்கின்றது. இது நல்லதொரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்போம்.
SUNO செயற்கை நுண்ணறிவு கொண்டு இசையமைத்து, பாட வைத்த என் பாடல்களை இனி முழுமையாக முகநூலிலேயே நீங்கள் கேட்டு மகிழலாம்.
காணொளிகளைக் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
 
இசை & குரல்: AI | ஓவியம்: AI -
 
நண்பர்களே!,முகநூல் நிறுவனம் பல நிமிடக் காணொளிகளையும் ரீல்களாகத் தற்போது அனுமதியளிக்கின்றது. இது நல்லதொரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்போம்.
SUNO செயற்கை நுண்ணறிவு கொண்டு இசையமைத்து, பாட வைத்த என் பாடல்களை இனி முழுமையாக முகநூலிலேயே நீங்கள் கேட்டு மகிழலாம்.
காணொளிகளைக் கேளுங்கள். கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!
இசை & குரல்: AI | ஓவியம்: AI -
 
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
சட்டச் சடவெ\ன்றே சப்திக்கும்
ஓட்டுக் கூரையின் ஓசையிலே
கட்டுண்டு கிடந்திடுவேன் அப்போது.
களிதரும் பொழுது அதுவாகும்.
 
மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.
 
வான்துளைத்து மின்னல் கோடிழுக்கும்.
பேரிடியோ பெருந்தொலைவு கேட்கும்.
நான் படுக்கையில் புரண்டிருப்பேன்.
நிலைமறந்து மெய் மறப்பேன்.

வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!

[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1   -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மக...

பிரபலமான பதிவுகள்