Sunday, September 13, 2026

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்


தகழி சிவசங்கரப் பிள்ளை

எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journalist நான் குறிப்பிடாத தகழியின் செம்மீன் நாவல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கையிலெடுத்த எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பின்வருமாறு ஒரு கருத்தினை இட்டிருந்தார்:

"Karunaharamoorthy Ponniah - தகழியாருக்குப் போதிய கடலனுபவங்கள் இல்லையென்று நினைக்கிறேன், இருந்தால் செம்மீன் (இறால்) ஆழ்கடலில் அதிகம் இருப்பதாக எழுதியிருக்கமாட்டார். இறால் ஆழங்குறைவான Lagoons / காயல்கள்/ கடலேரிகள்/ பரவைக்கடல்களில்த்தானே அதிகமாகக் கிடைக்கும்."

இதற்கு என் எதிர்வினை இதுதான்:

"நண்பரே, மிகவும் அவசரப்படுகின்றீர்கள். முட்டையில் மயிர் பிடுங்குதல் போல் ஏதாவது சிறு பிழையாவது தென்படாதா என்று பார்த்துக்கொண்டு நாவலைப் படித்தால், நாவலை உங்களால் சுவைக்க முடியாது போய்விடும். கடல் அனுபவம் தகழிக்கல்ல உங்களுக்குத்தான் இல்லையென்பதை இக்கூற்று எடுத்துக்காட்டுகிறது.

செம்மீன் நாவலில் அதிகம் பேசப்பட்டிருப்பது ஆழ்கடல் மீன் பிடித்தல் பற்றியே. சுறா மீன் பிடிப்பது பற்றிப் பல இடங்களில் வருகிறது. இறுதியில் கருத்தம்மாவின் கணவன் பழனியும் சுறா மீனைப் பிடிக்கின்றான். அதுவும் தூண்டிலை விழுங்கி இறந்த நிலையில்கரையொதுங்குகிறது.

நாவலில் சாகரப் பருவம் பற்றிப்பேசப்படுகின்றது. தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலம். அக்காலகட்டத்தில் நிறைய சத்துள்ள பொருட்களை உள்ளடக்கிய நீர் கடலின் கடற்கரைப் பகுதிகளில் அதிகமாகும், அச்சமயங்களில் அப்பகுதியில் செம்மீன்கள் அதிகமாகும். அவை உண்ணும் சத்துள்ள உணவான கடற்தாவரங்களில் செழிக்கும் காலம் அது. சாகரப்பருவம் பற்றியும் ,செம்மீன் பிடித்தல் பற்றியும் அதிக இடங்களில் நாவல் விபரிக்கவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பு பற்றித்தான் அதிகம் விபரிக்கின்றது."

இது பற்றி உங்கள் புரிதல் என்ன? கருணாகரமூர்த்தியின் கருத்து , அது பற்றிய என் கருத்து பற்றிய உங்கள் கருத்தென்ன? பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!"





Saturday, September 12, 2026

எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதற் பத்து நாவல்கள்!




அவ்வப்போது சிந்திக்கும்போது உடனடியாக நினைவுக்கு வரும் 10 நாவல்களைக் கீழே தந்துள்ளேன். உங்களுக்குப் பிடித்த நாவல்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1.Crime and Punishment (குற்றமும் தண்டனையும்) - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
2. Resurrection (புத்துயிர்ப்பு) - லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
3. கரமஷாவ் சகோதரர்கள் - ஃபியதோர் தத்யயேவ்ஸ்கி (Fyodor Dostoevsky)
4. காலம் - எம்.டி.வாசுதேவன் நாயர்
5. மோகமுள் - தி.ஜானகிராமன்
6. The Old Man and The Sea (கடலும் கிழவனும்) - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே (Earnest Hemingway)
7. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
8. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரன்பிள்ளை
9. நீலகண்ட பறவையைத்  தேடி - அதீன் பந்த்யோபாத்யாய 
10. The Metamorphosis (உருமாற்றம்) - ஃப்ரான்ஸ் காஃப்கா  (Franz Kafka)

தமிழரான கலைஞர் கருணாநிதியைத் தெலுங்கர் என்பது ஏன்?


தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஒரு வந்ததில் திமுக நன்மை அடைந்திருக்கின்றதே என்றுதான் கூற வேண்டும்.  இதுவரை காலமும் திமுக மேல் குறிப்பாகக் கலைஞர் மேல் புனையப்பட்டிருந்த பொய்களை ஒவ்வொன்றாக மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.  

முக்கியமான பொய் - தமிழர் தெலுங்கர் என்பது. அது எம்ஜிஆர் காலத்தில் அரசியல் காரணங்களால் முன் வைக்கப்பட்ட பொய். எம்ஜிஆரை மலையாளி என்று திமுகவினர் பிரச்சாரம் செய்ததால் எம்ஜிஆர் கையாண்ட எதிர் நடவடிக்கை. தமிழகத்தில் திமுகவை அழிக்காமல் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த ஆரியத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர்களில் சிலர் அதனைத் தம் அரசியல் நலன்களுக்காகப் பாவிக்கத்தொடங்கினார்கள். போலி சமுக., ஊடக ஆய்வாளர்கள் அதை உண்மைபோல் புதிய பொய்களைப் புனைந்தார்கள். 

Thursday, September 10, 2026

வ.ந.கிரிதரனின் பாடல்கள் - 'கடற்புள்ளே' (மூன்றாவது தொகுப்பு)


எனது 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' யு டியூப் சானலில் வெளியான பாடல்களின் மூன்றாத் தொகுதி 'கடற்புள்ளே!' என்னும் தலைப்பில் கிண்டில் / அமேசன் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது.  அதற்கான இணைய இணைப்பு - https://www.amazon.com/dp/B0HJF1NLWB 

அமரர் கல்கி நினைவாக...

எழுத்தாளர் கல்கி 

தமிழின் காத்திரமான படைப்பாளிகள் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் கல்கியின் எழுத்துகளுக்கும் ஓரிடமுண்டு. அவற்றினூடு வளர்ந்தவர்கள் அவர்கள்.

கல்கியின் தெளிந்த ஆற்றொழுக்கு நடையும், கலந்திருக்கும் நகைச்சுவையும் நெஞ்சை வருடிச் செல்பவை. எங்களுக்கு முந்திய தலைமுறையைக் கவர்ந்த நாவல் எங்களைக் கவர்ந்தது. அதற்குப் பின் அடுத்தடுத்த தலைமுறையினரையும் கவர்ந்தது. என் குழந்தைகள் கூட மிகவும் விரும்பிப்பார்த்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 & பொன்னியின் செல்வன் 2. 

Sunday, September 6, 2026

ஆகஸ்ட் 2026இல் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள்!

ஆகஸ்ட் மாதம் பதிவுகள் இணைய இதழுக்கு வருகை தந்தவர்கள், அவர்கள் பார்த்த பக்கங்கள் பற்றிய விபரங்கள் இவை!

வருகை தந்தவர்கள் (Unique Visitors) - 528, 457
பார்த்த பக்கங்கள் - 1, 630, 623
ஹிட்ஸ் (Hits) - 2. 453, 389
Bandwidth - 105 .56 GB

பதிவுகள் இணைய இதழ் - www.pathivukal.com www.geotamil.com www.pathivugal.com


தெளிவாகப் பார்க்க, மேலுள்ள தகவல் படத்தை  ஒரு தடவை அழுத்தவும்.


கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்நதி! - வ.ந.கி -


எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) 

எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்கு பற்றிய  , கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடந்த 'எழுத்தாளர் அரங்கம்' மெய்நிகர் வழி நிகழ்ச்சி!

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் இம்மாத எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில்  எழுத்தாளர் தமிழ்நதி (கலைவாணி ராஜகுமாரன்) பங்குபற்றினார்.  எழுத்தாளர் அகணி சுரேஷ் நெறிப்படுத்தினார்.  நிகழ்ச்சி முழுவதையும் உள்ளடக்கிய காணொளியை அகணி சுரேஷ் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  நான் சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக மேற்படி மெய்நிகர் வழி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியவில்லை. அதை நிவர்த்தி செய்தது மேற்படி காணொளி.

Thursday, September 3, 2026

எழுத்தாளர் சோ.பத்மநாதன் அவர்களுக்குச் 'சாகித்திய ரத்னா' விருது!



இலங்கை அரசால் வழங்கப்படும்  அதியுயர் இலக்கிய விருது  'சாகித்திய ரத்னா' .  இம்முறை  அவ்விருது கவிதை, ,மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புச் செய்த எழுத்தாளரான    சோ.பத்மநாதன்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவ்விருதை ஏற்கனவே எழுத்தாளர்கள் செங்கை ஆழியான், தெணியான், அன்னலட்சுமி இராஜதுரை (யாழ்நங்கை)  உட்படப் பலர் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  


தென்னிலங்கை எழுத்தாளர்களின், சர்வதேச எழுத்தாளர்களின கவிதைகளைத்   தமிழுக்குக் கொண்டு வந்தவர். அதே சமயம் தமிழ்ப்படைப்புகளையும் ஆங்கில மொழிக்குக் கொண்டு சென்றவர். பன்னாட்டு மக்கள் மத்தியில் புரிந்துணர்வை வளர்க்கப் பங்காற்றுபவை இவ்வகையான மொழிபெயர்ப்புகளே. 

வரலாறு பற்றி....


வரலாறு எவ்விதம் எழுதப்பட வேண்டும். பலர் கடந்த கால வரலாறுகளைத் தம் பார்வையில் , தாம் சார்ந்த அமைப்புகளின் அடிப்படையில், உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக்குறைத்து எழுதுகின்றார்கள். இது சரியா? வரலாறு உண்மைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட வேண்டும், உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்ல.
வரலாறு என்பது கடந்த காலக்கண்ணாடி. அது உண்மையை உள்ளவாறு பிரதிபலிக்க வேண்டும். ஆனால் நாம் காண்பதென்ன? தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் பதியப்படும் நனவிடை தோய்தல்கள் வரலாறு என்னும் பெயரில் உலா வருகின்றன.
உணர்ச்சிகளின் அடிப்படையில் கூட்டிக் குறைத்து எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகள் வரலாற்றுப் பதிவுகளே அல்ல, வெறும் நனவிடை தோய்தல்களே. உண்மைகள், ஊகங்கள், அவை பற்றிய உணர்ச்சி மிக்க நனவிடை தோய்தல்களே.

Monday, August 31, 2026

நண்பர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினத்தின் பார்வையில் நான்!


நண்பரும், எழுத்தாளருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் (ஆஸ்திரேலியா) என் புகைப்படத்தை டிஜிட்டல் ஓவியமாக்கி அனுப்பியிருக்கின்றார். அவருக்கு என் நன்றி.

Thursday, August 27, 2026

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் படைப்புகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள்!


எனது நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரை பற்றி வெளியான திறனாய்வுக் கட்டுரைகள் இவை. இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


Novel: An Immigrant (English Translation)
The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2017/03/19/the-dark-night-of-the-soul-a-study-of-the-existential-crisis-of-the-sri-lankan-tamil-refugees-as-depicted-in-the-novel-an-immigrant-by-the-canadian-tamil-writer-v-n-giritharan/#more-343

Novel: An Immigrant (English Translation)
‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/an-immigrant-a-poignant-autobiographical-sketch-of-v-n-giritharan/

Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/canadian-tamil-literature-void-within-the-migration-of-an-albatross-into-an-unsolicited-province-a-study-on-the-writings-of-the-canadian-tamil-writer-v-n-giritharan/

The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan
By Dr.Gnanaseelan Jeyaseelan. - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/the-translocal-nationalism-of-the-sri-lankan-tamil-diasporaa-reading-of-selected-short-stories-of-v-n-giridharan/

‘SEEKING THE INVISIBLE HUMANNESS IN AN ALIEN LAND’ A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan By Dr. R. Dharani - https://vngiritharan23.wordpress.com/2013/03/29/canadian-tamil-literature-seeking-the-invisible-humanness-in-an-alien-land-a-review-of-the-diasporic-issues-as-revealed-through-the-selected-short-stories-of-v-n-giridharan/

Wednesday, August 26, 2026

பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு! - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -


[பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிச் சிறப்பானதொரு திறனாய்வுக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார் திறனாய்வாளர் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) . கட்டுரையை முழுமையாக வாசித்தேன். சிறப்பான கட்டுரையைத் தந்ததற்காக மனம் நிறைந்த நன்றி. 

 உண்மையில் இத்தொகுப்பைச் சமகால விமர்சகர் எவரும் என் காலத்தில் சரியாக உள்வாங்கி விமர்சிப்பதற்குச் சாத்தியம் இல்லையென்றே எண்ணியிருந்தேன். யாரோ ஒருவர் எதிர்காலத்தில் இணையத்தில் கண்டெடுத்து விமர்சனத்துக்குள்ளாக்குவார் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் என் காலத்திலேயே ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) என்னும் விமர்சகர் தொகுப்பை இனங்கண்டு திறனாய்வு செய்திருக்கின்றார். என்னைப் பிரமிக்க வைத்த திறனாய்வு. சிறப்பான திறனாய்வைத் தந்ததற்காக மீண்டும் அவருக்கு என் நன்றி. 

 அண்மைக்காலமாகவே பதிவுகளில் அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவரது திறனாய்வுக் கட்டுரைகள் தனித்துவமானவை. ஆழமான கட்டுடைப்பைச் செய்பவை. அதற்காக அவர் உள்வாங்கும் உசாத்துணை நூல்கள் , முயற்சி, கடும் உழைப்பு உண்மையில் பாராட்டத்தக்கவை. தமிழ் இலக்கியத்துக்கு அவரது திறனாய்வுகள் வளம் சேர்ப்பவை. வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன்]

- ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -
பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: வ.ந. கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' (2023) – ஒரு விமர்சனப் பகுப்பாய்வு!   - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

பொருளடக்கம்

பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: கல்விப்புல அறிமுகம்

முன்னுரை: நவீனத் தமிழ் விண்வெளிக் கவிதையியலும் வ.ந. கிரிதரனும்

அத்தியாயம் 1: மீவியற்பியலும் (Metaphysics) குவாண்டம் கவிதையியலும் (Quantum Poetics)

1.1 17-ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதையியல் பாரம்பரியமும் கிரிதரனின் கவிமொழியும்

1.2 காலவெளி (Spacetime), சார்பியல் மற்றும் ஒளிவேகம்: கவித்துவ உருவகங்கள்

1.3 "காலவெளி மீறிய கவிஞன்": குவாண்டம் நுரையும் நிகழ்காலத்தின் அசாத்தியமும்

அத்தியாயம் 2: இருத்தலியல் (Existentialism) மற்றும் ஒன்டோலாஜிக்கல் (Ontology) தேடல்

2.1 "இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு": இருப்பின் புதிர்

2.2 நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்': காலத்தின் சவாலும் மானுட மனதின் அசையா உறுதியும்

2.3 'பேய்த்தேர்' மற்றும் 'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு': அர்த்தமின்மையின் மத்தியில் அர்த்தம் தேடுதல்

அத்தியாயம் 3: சூழலியல் மரபும் புலம்பெயர் அகக் கனலும் (Ecological Poetics and Diaspora Realities)

3.1 "சொப்பன வாழ்வினில் மயங்கி": நகரமயமாதலும் இயற்கையின் சிதைவும்

3.2 'எழுக அதிமானுடா': நீட்ஷேயின் கோட்பாடும் மார்க்சிய வர்க்கப் போரின் எரிகனலும்

3.3 "துருவத்துக் கட்டடக் காட்டுக்கான்": புலம்பெயர் தேசத்துத் தனிமையும் தாய்மைப் பேரன்பும்

அத்தியாயம் 4: பாரதியியல் தொடர்ச்சியும் கண்ணம்மா என்னும் குவாண்டம் படிமமும் (The Bharathian Legacy & Quantum Kannamma)

4.1 மகாகவி பாரதியின் ஆன்மீகக் கவிதையியலின் நவீன இயற்பியல் நீட்சி

4.2 "நீ அலையா? நீ துகளா?": அலை-துகள் இருமைத்தன்மையும் காதலின் பரிமாணங்களும்

Tuesday, August 25, 2026

கவிதை: வீரியம் குன்றாத விண்மீன்கள்! - வ.ந.கிரிதரன் -



வேட்டைநாய்கள் காத்திருப்பதைப் போல் 
காத்திருப்பார்கள். 
காத்திருக்கும் காலத்தில் 
காலத்தை ஓட்டியது தவிர
வேறென்ன செய்தார்கள்?
விருது பற்றிய அறிவிப்பு 
வந்து விட்டால் போதும்
வீரம் மிகுந்து விடும்.
கர்ச்சனை செய்வார்கள்.
பாய்ந்து  
கொத்திக் குதறி எடுப்பார்கள்
விருதையும், 
விருது பெற்றவரையும்.
சில சமயங்களில் இவர்கள் 
மெளனித்திருப்பார்கள்.
மெளனத்திற்குக் காரணம் 
அச்சமயம் இவர்கள்தம்
நட்புக்குரியவர்களுக்கு 
விருதுகள் கிடைத்திருக்கும்.

வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.


வ.ந.கிரிதரன் பாடல்: சவால்கள்! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி
சவால்கள் கண்டு துவண்டிட மாட்டோம். சவால்கள் கண்டு மருண்டிட மாட்டோம். சவால்கள் இல்லாத இருப்பும் உண்டோ? சவால்கள் எல்லாம் புதிர்களே எமக்கு. புதிர்களை அவிழ்ப்போம். பெருமிதம் அடைவோம். பெருமிதம் அடைந்தே இருப்பினை வெல்வோம். சூழல்கள் கணமும் சவால்களைத் தருமே. சூழும் சவால்களை எதிர்த்தே நிற்போம். உறுதி மிக்கது தப்பிப் பிழைக்குமாம். உணர்ந்து கொள்வோம். உறுதியை வளர்ப்போம்.

Monday, August 24, 2026

வேண்டாம் என்பதும் சரி வேண்டும் என்பதும் சரி ஒரே பொருள் தெரியுமா?



"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல" - குறள் -

தமிழில் மட்டுமல்ல மொழிகளில் இலக்கணம்  மீறிய சொற்கள் பல வழக்கில் உள்ளன. வழக்கில் உள்ளதால் அவற்றை இலக்கணம் உள்வாங்கியுமுள்ளது.  முன்றில் என்பது தவறானது. இல்முன் என்பதே சரி. அதற்காக அதைப்பாவிப்பதை யாரும் நிறுத்தவில்லை.  சொல்லுக்குச் சொல் இலக்கணப்பிழையைக் கண்டு பிடிக்க முயற்சி செய்வது பயனைத்தராது.  

ஶ்ரீ வேணுகோபாலனின் 'நீ நான் நிலா'


எழுத்தாளர் ஶ்ரீ வேணுகோபாலனின் சிறுகதைகள், குறுநாவல்கள் பல அறுபதுகளில் வெளியான தமிழ் வெகுசன இதழ்களில் , அவற்றின் தீபாவளி மலர்களில் வெளிவந்த காலத்தில் நான் என் பால்யப்பருவத்து வாசிப்பை ஆரம்பித்திருந்தேன்.அதனால் அவர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

அவரை நான் விரும்பி வாசிக்கத்தொடங்கியது அவரது படைப்புகள் தினமணிக்கதிரில் வெளியானபோதுதான். தினமணிக்கதிர் அப்போது இலவச இணைப்பாக புனைவை அல்லது அல்புனைவை வெளியிட்டு வந்தது. அதிலொன்றுதான் நடுவழியில் என்னும் ஶ்ரீ வேணுகோபாலனின் நெடுங்கதை. அது முதலில் கல்கியில் வெளியான விபரம் அண்மையில்தான் தெரிந்தது.  அதன் பின் என்னைக் கவர்ந்த அவரது படைப்பு தினமணிக்கதிரில் தொடராக வெளியான 'நீ நான் நிலா' தொடர்கதை.

செயற்கை நுண்ணறிவு பற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் கருத்துகள் பற்றி....


சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:


"தலைப்பு- கருத்துகளைத் திரட்ட AI-யைப் பயன்படுத்தலாம்..... வரலாறு- அரசியல் கட்டுரையாக இருந்தால், கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்."//

இவ்விடயத்தில் என் எதிர்வினை இது :

இவ்விடயங்களில் AI பல தவறான தகவல்களைத் தானே உருவாக்கி உண்மைபோல் தரும். நீங்கள் கண்டு பிடித்தால் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும். கண்டு பிடிக்காவிட்டால் அத்தவறுகள் உண்மைகளாக இணையத்தில் தொடரும். இது பாரதூரமான விடயம். AI தரும் எல்லாத் தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏனைய சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்துவது அவசியம்.

Friday, August 21, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5.



வ.ந.கிரிதரன் பாடல்: உறவு! வ
.ந.கிரிதரன் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி உறவுகள் அற்ற உலகில் அர்த்தமுண்டோ? உறவுகளே இருப்பின் ஆணி வேராம். உயிர் தந்த பெற்றவர் உறவு. உடன் பிறந்தவர் மத்தியில் உறவு. உடன் வரும் நண்பர்கள் உறவு. உள்ளங் கவர் காதல் உறவு. பொருள் மலிந்த உலகு இது. பொருளில் மறைந்து கிடப்பது சக்தி. பொருளில் உணர்வு வந்தது எப்படி? பொருளே சக்தியாம், பொருளே உணர்வாம். உறவுகள் அற்ற உலகில் அர்த்தமுண்டோ? உறவுகளே இருப்பின் ஆணி வேராம்.

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு! - வல்லிபுரம் சுகுந்தன் (செயலாளர்)< தொல்காப்பிய மன்றம் (கனடா) -


[தொல்காப்பிய மன்றம் (கனடா) செப்டம்பரில் கனடாவில் நடைபெறவுள்ள 'இரண்டாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026 சம்பந்தமாக, செய்தியாளர் சந்திப்பொன்றை ஆகஸ்ட் 24 அன்று நடத்தவுள்ளது. அது பற்றிய தகவலை மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகுந்தன் பகிர்ந்திருந்தார். அதனை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.]

வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க கொண்டாட-பரவலாக்க வேண்டும்” என்னும் பொருண்மையில் நடாத்தப்படவுள்ளது.
இம் மாநாடு, ஆயிரம் பேர் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கனடாவில் இயங்கிவரும் 90க்கும் மேற்பட்ட தமிழ் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெருமளவிலான நிதி மூலதனத்துடன் நடாத்தப்படவுள்ளது.

செம்மீன் பற்றி எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் கருத்தும் , என் எதிர்வின்

தகழி சிவசங்கரப் பிள்ளை எனக்குப் பிடித்த 10 நாவல்கள் பற்றியொரு முகநூற் பதிவு இட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் Tamil Journa...