Tuesday, November 12, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்


இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI

காலவெளிக் குழந்தைகள் நாம்

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்ளல்
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிதல் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருப்பை அறிந்து கொள்வதற்கு நம்
இருப்பின் காலம் போதவே போதா.
இருந்தும் இருப்பை முழுவதும் அறிய
இருக்கும் வரையில் முயற்சி செய்வேன்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

Thursday, November 7, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்



இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

Wednesday, November 6, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.. - வ.ந.கிரிதரன் -


- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கவிருந்த எனது உரையின் முழு வடிவமிது. அன்று நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக , விரிவாக உரையாட  முடியவில்லை. -


1. 'டயற்போறா' பற்றிய சிந்தனைகள்...

இன்று புலம்பெயர் மக்களைக் குறிக்கப் பாவிக்கப்படும் டய்ஸ்போறா என்னும் ஆங்கிலச் சொல் ஆரம்பத்தில் புகலிடம் நாடி பல்வேறு திக்குகளாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களைக் குறிக்கப்பயன்பட்டது. ஆரம்பத்தில் யூதேயா யூதர்களின் தாயகமாக விளங்கியது. அது தற்போதுள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம். கி.மு.586இல் பாபிலோனிய மன்னர் யூதேயா மீது படையெடுத்தார். எருசலேமிலிருந்த  முதலாவது தேவாலயத்தை அழித்தார். யூதர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார். யூதர்கள் தம்மிருப்புக்காகப் பல்வேறு திக்குகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். இதனைக்குறிக்கவே கிரேக்க மொழியில் இச்சிதறலை diaspeirō என்றழைத்தனர்.  இதன் அர்த்தம் சிதறல். இதிலிருந்து உருவான சொல்லே டயஸ்போறா (Diaspora).

Wednesday, October 30, 2024

மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள்: 'Modern Tamil Poetry - A Miniature canavas ' (1 & 2)


கலைஞன் பதிப்பகம் அண்மையில் நேர்த்தியான வடிவமைப்பில், இரண்டு தொகுப்புகளாகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'Modern Tamil Poetry - A Miniature canavas ' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. 
 
முதலாவது தொகுப்பில் 153 கவிஞர்களின் கவிதைகளும், இரண்டாவது தொகுப்பில் 161 கவிஞர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. முதல், தொகுப்புக் கவிதைகளை எஸ்.என்.ஶ்ரீவஸ்தாவும், இரண்டாவது தொகுப்புக் கவிதைகளை எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார்கள்.
இரண்டாவது தொகுப்பில் எனது கவிதையொன்றின் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றுள்ளது. ஒட்டகங்கள் என்னும் எனது கவிதை In Comparision.. என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. 

அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்,கவியரசன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'! - கவிதைத்தொகுப்பு!


இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன். மகாகவி பாரதியாரை தவிர்த்து விட்டு நவீனத் தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல் இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையைப் பற்றி அதன் முன்னோடிகளைப் பற்றிப் பேசும் எவரும் அ.ந.கந்தசாமியைத்தவிர்க்க முடியாது என்பது என் கருத்து.
 
அ.ந.கந்தசாமியின் கவிதைப் பங்களிப்பை அறிய நிச்சயம் வாசிக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு எதிர்காலச்சித்தன் பாடல். தற்போது நூலகம் தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு - https://noolaham.net/project/1207/120622/120622.pdf
 
இந்நூல் தற்போது கிண்டில் - அமேசன் மின்னூலாகவும் கிடைக்கின்றது - https://www.amazon.com/dp/B0DJSK811V

அ.ந.கந்தசாமியின் 'நான் ஏன் எழுதுகிறேன்?' - கட்டுரைகள் , சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய தொகுதி!


 
'நான் ஏன் எழுதுகிறேன்?' - எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் கட்டுரைகள் , சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய தொகுதி அவர் பற்றிய , அவரது பன்முக இலக்கியப் பங்களிப்பை, ஆளுமையை அறிந்து கொள்வதற்குரிய அறிமுக நூல். தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகப் பதிவுகள்.காம் வெளியீடாக கிடைக்கின்றது - https://www.amazon.com/dp/B0DJXYCMT1
 
நூலின் பிடிஃப் வடிவில் நூலகம் தளத்திலும் வாசிக்கலாம் - https://noolaham.net/project/1207/120630/120630.pdf

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (நாவல்)


எழுத்தாளர் அ.ந.கந்தசாமி எழுதித் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான நாவல் 'மனக்கண்'. வெளிவந்தபோது வாசகர்கள் மத்தியில் அமோக ஆதரவைப்பெற்ற நாவல். அவர் சங்கீதப் பிசாசு என்னுமொரு சிறுவர் நாவலையும் சிரித்திரன் சஞ்சிகையின் ஆரம்ப காலத்தில் எழுதியிருக்கின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி ஷோலாவின் 'நானா' நாவலையும் மொழிபெயர்த்து அவர் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது அதில் தொடராக வெளியிட்டார்.
 
'மனக்கண்' நாவல் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...