| -எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் - |
மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக் கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்' - கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று இச்சிறுகதை,. கூர் 2011. ஆண்டிதழில் வெளியாகியுள்ளது.
| -எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் - |
| - எழுத்தாளர் டானியல் ஜீவா - |
நாடகவியலாளராக, கவிஞராக, சமூக,அரசியல் செயற்பாட்டாளராக, தேடகம் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அறியப்படுபவர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அண்மைக்காலமாக முக்கியமான சிறுகதையாசிரியராகவும் உருமாறியிருக்கிறார். பா.அ.ஜயகரன் கதைகள், ஆலோ ஆலோ ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும், அவனைக்கண்டீர்களா? என்னும் குறுநாவல் தொகுப்பும் வெளியாகியுள்ளன. அனைத்தும் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள். அவனைக்கண்டீர்களா? தொகுப்பைக் குறுநாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பென்று கூறலாம். ஏனென்றால் சில கதைகள் சிறுகதைகள் போல் அமைந்துள்ளன.
எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் 'அவனைக் கண்டீர்களா/" தொகுப்பிலுள்ள 'சந்தி - ஒரு கதைசொல்லியின் கதை', பற்றிய கருத்துகள் இவை. ஜயகரன் சிறந்த நாடகாசிரியர் என்பதை இக்கதைகளை வாசிக்கையில் உணர முடிந்தது. மிகவும் இலகுவாக அவரால் இக்கதைகளைச் சிறந்த நாடகங்களாக மாற்றியமைக்க முடியும்.அதற்கேற்ப வகையில் பாத்திரங்கள், சம்பவங்கள், கதைக்களச் சூழல் விபரிப்புகள் எல்லாம் பின்னப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே நடையில் தென்படும் நகைச்சுவையும் என்னைக்கவர்ந்தது. மொழி நடை செறிவானது.
| - டானியல் அன்ரனி - |
எல்லைகளற்று பரந்திருக்கும் விரிவெளியில்
அகதிமேகங்கள் அலைகின்றன.
அலைச்சல் தாளாமல் அவை
அழுதுபொழிகின்றன.
இருப்பைத் தப்ப வைப்பதற்காய்ப்
புள்ளொன்று சிறகடிக்கின்றது.
அதனை விரைவை மீறித்
தொடர்கிறது பெரும்புள்.
பகல் இப்படியென்றால்...
இரவு வானை நோக்குகின்றேன்.
தொலைவில்
ஒளியாண்டுத் தொலைவுகளில்
மலர்ந்து உதிர்ந்து விட்ட
நாகரிகங்களின் பெருமூச்சுகளை
தனிமைகளில் பயணிக்கும் ஒளிச்சுடர்களில்
உணர்கின்றேன்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
எப்பொழுதும் இருப்பில்
அர்த்தம் கண்டு மகிழ்பவன் நான்.
இன்பம் கண்டு உவகையில் ஊறுபவன் நான்.
இன்று எனக்கு என்ன நடந்தது?
'இன்று உனக்கு என்ன நடந்தது?'
அதுதான் தெரியவில்லையடி கண்ணம்மா
என்றேன்.
![]() |
| -எழுத்தாளர் கலைச்செல்வன் - |
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...