Sunday, December 22, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.

நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால்  குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.

Friday, December 13, 2024

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்


 
 
கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை அடுத்து அச்சுருவில் வருவது நின்று போனாலும் இணையத்தில்  டிஜிட்டல் வடிவில் வெளிவருவது மகிழ்ச்சி தருவது. நான் Magzter தளத்தில் வருடச் சந்தா கட்டி வாசித்து வருகின்றேன். நீங்களும் சந்தா கட்டி வாசியுங்கள். இணைப்பைக் கனடாச் சட்டத்தின்படி முகநூலில் பகிர முடியாது. கூகுளில் Magzter என்று தேடி, தமிழ் சஞ்சிகைகளில் கணையாழிக்கான இணைப்பைப் பெற முடியும்.
 
தமிழகத்துச் சஞ்சிகைகளில் எனது படைப்புகள் அதிகம் வெளியானது கணையாழி சஞ்சிகையில்தான். கனடாச் சிறப்பிதழில் எனது சிறுகதையான 'சொந்தக்காரன்' வெளியானது. அதைவிட பத்துக்கும மேற்பட்ட எனது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
 
கணையாழி தொகுப்பிலும் (1995 -2000) எனது இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 
 
கணையாழியில் வெளியான கட்டுரைகள் கீழே. இவை முழமையான பட்டியல் அல்ல.
 
 
 

Monday, December 9, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - உலகக் கவி கணியன் பூங்குன்றனார்


உலகக் கவி கணியன் பூங்குன்றனார்


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.

இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்

Sunday, December 8, 2024

வ.ந.கிரிதரன் பாடல்- உண்மை அன்பெனும் ஊற்று!


உண்மை அன்பெனும்  ஊற்று!


இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI


நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.

நினைவுக் குருவிகள்  உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.

எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.

Saturday, December 7, 2024

வ.ந.கிரிதரன் பாடல்- களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'


களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'

இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI

நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்

இன்பமூட்டும் சொற்கள், எழுத்துகள் , அசைவுகள்
என்றுமே வாழ்வுக்கு இன்பம் தருபவை.
நன்று அவை என்போம் நம்புவோம்
நம்பிக்கை எப்பொழுதும் பயனைத்  தருமே.

எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்குக் கடும் வெறுப்பா? சறுக்கிய சவுக்கு சங்கர்!


ஆதன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேர்காணலில் ஊடகவியலாளர் மாதேஸ் 'எம்ஜிஆர் மீது வெறுப்பாக இருந்தாரா ஜெயலலிதா?"  என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்கின்றார். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர் 'கடும் வெறுப்பாக இருந்தார்'என்கின்றார்.

 உண்மையிலேயே ஜெயலலிதா எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் இருந்தாரா? இந்தக் கேள்வியின் போது என் நினைவுக்கு முதலில் வருவது எம்ஜிஆரின் மரணத்தின்போது அவரது தலைமாட்டில் கவலை படிந்த முகத்துடன் சுமார் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக நின்ற ஜெயலலிதாவின் தோற்றம்தான். அதன் பின் அவர் ஊடகமொன்றுக்குக் கூறியதாக வெளியான  கூற்று நினைவுக்கு வருகின்றது. அதில் அவர் எம்ஜிஅர் மறைவுக்குப் பின் தான் தற்கொலை செய்யக்கூட எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் உள்ள ஒருவர் இவ்விதம் செயற்பட  முடியுமா?

Thursday, November 28, 2024

மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!



கவிஞர் கந்தவனத்தின் மணி விழாவினையொட்டி மணிவிழாக்குழுவினால் வெளியிடப்பட்ட கவிதைத்தொகுப்பு 'மணிக்கவிகள்' நூலுக்கான பதிப்புரையில் மணிக்குழுவின் செயலாளர் எழுத்தாளர் எஸ்.ஜெகதீசன் 'உருவகச்சிறப்பில் மாத்திரை போன்ற இவை உள்ளடக்கத்தில் காத்திரம் கொண்டவை' என்கின்றார். தொகுப்பை வாசித்துப் பாருங்கள் அது உண்மையென்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
 
இவ்விருவரி மணிக்கவிகள் கனடாவிலிருந்து பத்திரிகை/சஞ்சிகையாக வெளியான 'தாயக'த்தில் வெளியானவை. அதனை வெளியிட்டதுடன் அதன் ஆசிரியராகவிருந்தவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ். இக்கவிதைத்தொகுப்பு நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தொகுப்பினை வாசிக்க - https://noolaham.net/project/755/75434/75434.pdf

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...