Wednesday, July 24, 2024

தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்! - வ.ந.கிரிதரன் -



-


  இசை & குரல்: AI SUNO -

- அன்னையார் மறைவினையொட்டி எழுதிய கவிதை. யு டியூப்பில் கேட்க
https://www.youtube.com/watch?v=AnT3FFZBQdo


தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?

நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ?

இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ?

இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!

உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான எனது கவிதை. எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பிலும் உள்ளது. YouTube இல் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=eb5DagT_0lA

காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -

என் வெப்ப மண்ணை,
மேல் விரியும்
இரவுவானை,
சுடரை, நிலவை
நான் நீங்கியது
நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவு அசை போடுமொரு
மாடுமாகினேன்.

ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கான் உயிருமாகினேன்.

Tuesday, July 23, 2024

கவிதை; மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -



         - இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் உள்ள கவிதை. யு டியூப்பில் கேட்டு மகிழ -
https://www.youtube.com/watch?v=kH9QQ9Q1G_0


 

கவிதை; மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?  - வ.ந.கிரிதரன் -

 உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
கண்ணம்மா! கூறு கண்ணம்மா!

நான் பார்ப்பது,
நீ இருப்பது
இதுவெல்லாம்
உண்மையென்று
எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல் கண்ணம்மா!

நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று
.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக
எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
கண்ணம்மா!
எவ்விதம் நம்புவது?

கவிதை: என் பிரியம் மிகு யாழ் மண்ணே! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=tzyYJGwBVZY

கவிதை: என் பிரியம் மிகு யாழ்  மண்ணே!  - வ.ந.கிரிதரன் -

என் யாழ் மண்ணே!
என் பிரியம் மிகு யாழ் மண்ணே.
உணர்வுடன் கலந்த யாழ் மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
யாழ் மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

Monday, July 22, 2024

காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -


                                                          
- இசை & குரல் - AI SUNO -


- இக்கவிதை எனது பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதை. பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை. -

யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=UIStyrjuX-4

கண்ணம்மா!
நேற்று -இன்று - நாளை

காலத்தின் ஒரு திசைப் பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா?
ஆயின் 'அறிவுணர்'வுக்கு அது இல்லை.
ஆம்!
அது இல்லை.
எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.

தயக்கமெதுவற்று அதனால்
தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUMO -

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

எனது பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ள கண்ணம்மாப் பாடல்களில் ஒன்றினைக் கண்ணம்மா பாடினால் எப்படியிருக்கும் என்னும் கற்பனையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். யு டியூப்பிலும் என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலிலும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=iEj0_QOzz_o

விரியும் பெரு வெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார்
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணா
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணா?
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUMO -

கவிதை; நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணம்மா!
- வ.ந.கிரிதரன் -


இக்கவிதை பதிவுகள் இணைய இதழில் வெளியானது, எனது பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளது. பாடலில் ஒரிரு மாற்றங்களைச் செய்துள்ளேன். யு டியூப்பிலும் என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலிலும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=g-_6ddLZ2ew

விரியும் பெரு வெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!

பெருவெளியின் விரிதல்போலென்
சிந்தை விரிவெளிதன் விரிதலில்
முகிழ்க்கும் வினாக்கள் கண்ணம்மா!
உன்னால் அறிந்திட முடிகின்றதா
கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...