- இசை & குரல் : AI SUNO -
[பெருந்தொற்றுக் காலத்தில் எழுபதுகளில் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எண்ணங்களில் உதித்த திட்டம் ஒராயம் திட்டம் . அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு - https://oraayam.org ]
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=Ws3c8PTMP20
ஓராயம் போல் வருமா? இங்கு ]
ஓராயம் போல் வருமா?
ஊர்நலம் நாடி உருவான
ஓர் ஒளிர் திட்டம்
ஓராயம். திட்டம்,
ஓராயம் திட்டம் .
பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.
Tuesday, July 30, 2024
ஓராயம் என்றோர் ஒளிர் திட்டம்! - வ.ந.கிரிதரன் -
Monday, July 29, 2024
சமநீதி பிறக்கட்டும் எங்கும். - வ.ந.கிரிதரன் -
- இசை & குரல்: AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=EAbi7zZI9t0
சமநீதி பிறக்கட்டும் எங்கும்!
சமநீதி இல்லையேல் அநீதியே.
சமநீதி எங்கும் இருந்தால்
வர்க்கப் பிரிவுகள் மறையும்.
வர்ணப் பிரிவுகள் மறையும்.
ஆண், பெண் பிரிவுகள் ஒழியும்,
அனைத்துப் பிரிவுகளும் ஒழியும்,.
பிரிவுகள் நீங்க வேண்டுமானால்
பிறக்கட்டும் இங்கு சமநீதி.
சமநீதி பிறக்கட்டும் எங்கும்.
சமைத்திடுவோம் சமநீதி உலகை.
அமைத்திடுவோம் அன்புமிகு வாழ்வை.
அனைவரும் எழுக, உறுதி கொள்க.
பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா. - வ.ந.கிரிதரன் -
- இசை & குரல்; AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iMsm8VIEsSY
பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.
எதை நீ கேட்டாலும்
எதை நீ வாசித்தாலும்
அதை நீ அப்படியே
நம்பி விடாதே நண்பா.
நம்பி விடாதே நண்பா.
பகுத்தறிந்து பார் முதலில்.
பின்பு முடிவு செய் நண்பா.
பகுத்தறிவு சரி பிழை காட்டும்.
பகுத்தறிவு உண்மை பொய் காட்டும்.
பகுத்தறிவு ஏற்றம் தரும். இங்கு
பகுத்தறிவு மாற்றம் தரும்.
பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.
அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே - வ.ந.கிரிதரன்
இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையான 'அறிந்தால் அறிவியடி அருவியே!' என்னும் கண்ணம்மாக் கவிதை இங்கு 'அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே' என்று கண்ணாக் கவிதையாக மாற்றம் பெற்றுள்ளது. . யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=dU8drlIPfLY
கண்ணா!
அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடா நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடா.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணா
கண்ணா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடா!
அறிந்தால் அறிவியடி அருவியே! - வ.ந.கிரிதரன் -
இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=jYECMABfJno
கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
நகரைச் சுத்தமாக்குவோம். - வ.ந.கிரிதரன் -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SfMaqvmYcPs
நகரைச் சுத்தமாக்குவோம். வாழும்
நகரைச் சுத்தமாக்குவோம்.
குப்பை கூளங்கள் போடாதீர்.
கிருமிகள் பெருகிடச் செய்யாதீர்.
எப்பொழுதும் சுத்தமாக நகர்தனை
வைத்திருப்போம். நாம் வைத்திருப்போம்.
சூழலைப் பாதுகாப்போம். நாம்
சூழலைப் பாதுகாப்போம்.
சூழற் பாதுகாப்பு வாழ்வைச்
சீரமைக்கும், நலமாக்கும்.
யாழ் பொதுசன நூலக நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -
- இசை & குரல்: AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zw_bRYpmaNw
யாழ் பொதுசன நூலகத்தில்
வாழ்நாளில் கழித்த பொழுதுகளை
எப்படி மறப்பேன். எப்படி மறப்பேன்.
என்றும் என்னுள் இருக்கும் நினைவுகள்,
இன்று நினைக்கையில் அங்கு
அன்று நான் கழித்த தருணங்கள்
அலையலையாக எழுகின்றன.
எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.
ஒன்று விட்ட அக்கா ஒருத்தியுடன்
அன்று நான் சென்றதுதான் முதல் தடவை.
எட்டி எட்டி விரைந்து நடப்பேன்.
என்னுடன் ஈடு கொடுக்க முடியாத
அக்கா கத்துவாள். அக்கா கத்துவாள்.
''ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே.
எட்டிப் போகாதேடா. மெதுவாப் போடா.
மூச்சு வாங்குது' என்பாள் அவள்.
எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.
வாரத்தில் பல தடவைகள் அங்கு செல்வேன்.
நான் வணங்கும் ஆலயங்கள்
நூலகங்களே.
யாழ் பொதுசன நூலகமும்
வாழ்வில் நான் வணங்கும்
ஆலயங்களில் ஒன்று.
வீணையும் கையுமாக வாசலில்
வரவேற்கும் சரஸ்வதி சிலை.
காற்று சிலு சிலுக்கும் சூழல்.
கனிவு மிகு உணர்வொன்றில்
இனிமையை உணர்வோம்.
எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.
நூலகம் என் ஆசான்.
நூலகம் என் நண்பன்.
நூலகத்தில் படித்த நூல்கள்.
நினைவில் நிலைத்து நிற்கின்றன.
பெளதிகத்தின் வரலாறு.
பறவைகளின் வரலாறு.
நீங்களும் விஞ்ஞானிகள் ஆகலாம்.
வாசித்து
நாங்களும் விஞ்ஞானிகள் ஆவோம்.
அறிவியல் நூல்கள் பற்பல.
அறிவியல் நூல்கள் பற்பல.
அனைத்தையும் வெளியிட்டது
அன்று சென்னயின் பதிப்பகம்
ஒன்று.
கல்கியின் பொன்னியின் செல்வன்,
கள்வனின் காதலி, அலையோசை
சிவராம் காரந்தின் மண்ணும் மனிதரும்,
சாண்டில்யனின் கடல் புறா
சிந்திக்க வைக்கும் போரும் அமைதியும்
டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
வாண்டுகள் எம்மை மகிழ்வித்த
வாண்டுமாமாவின் சிறுவர் நூல்கள்
பல நூல்கள். இப்படிப்
பல நூல்கள்.
எப்படி நான் மறப்பேன்.
எப்படி நான் மறப்பேன்.
அருகில் முற்றவெளி.
அதனருகில் பண்ணைக் கோட்டை.
சிறிது தொலைவில்
சுப்பிரமணியம் பூங்கா.
திறந்த வெளி அரங்கு.
தந்தை செல்வா நினைவுத் தூபி.
நடுவில் அமைந்திருக்கும் நூலகம்.
நான் வணங்கும் நூலகம்.
நூலகம் எரிந்த நாட்கள்.
நான் நிலை குலைந்த நாட்கள்.
இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை.
வரலாற்று ஆவணங்கள்.
வரலாற்றுச் சுவடிகள்.
நூலகத்தை நினைக்கையில்
நெஞ்சில் பற்பல உணர்வுகள்.
என்றும் என் ஆசான் நீ.
என்றும் என் நண்பன் நீ.
உன்னுடன் கழித்த நாட்கள்.
உன்னுடன் வளர்ந்த நாட்கள்.
நூலகமே உனக்கு என் நன்றி.
நூலகமே உனக்கு என் நன்றி.
தமிழகமும் , ஊழலும்!
தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா? ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...