Sunday, December 22, 2024
வ.ந.கிரிதரன் - நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!
எழுத்தாளர் மாலன் , இந்திய சாகித்திய அமைப்புக்காகத் தொகுத்த 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'த் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எனது கவிதையான 'நவீன விக்கிரமாதித்தனின் காலம்' கவிதை சிறு மாற்றங்களுடன் இங்கு பாடலாக , ரொக் இசை வடிவில்மேனாட்டு , கீழ்நாட்டு வாத்தியங்களின் கலவையில்
ஒலிக்கின்றது. சாத்தியமாக்கிய செயற்கை அறிவுக்கு என் நன்றி.
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது
உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.
வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
நான் வியாபாரி அல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான்.
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
இருக்கும் குதிரைகள் அனைத்துமே
பிரியத்துக்குரியவை.
என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்ப்பதில்லை.
ஆனால் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை அதிகமாகிவிட்டது.
Friday, December 13, 2024
வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
Monday, December 9, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - உலகக் கவி கணியன் பூங்குன்றனார்
உலகக் கவி கணியன் பூங்குன்றனார்
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
Sunday, December 8, 2024
வ.ந.கிரிதரன் பாடல்- உண்மை அன்பெனும் ஊற்று!
உண்மை அன்பெனும் ஊற்று!
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.
Saturday, December 7, 2024
வ.ந.கிரிதரன் பாடல்- களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'
களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்
இன்பமூட்டும் சொற்கள், எழுத்துகள் , அசைவுகள்
என்றுமே வாழ்வுக்கு இன்பம் தருபவை.
நன்று அவை என்போம் நம்புவோம்
நம்பிக்கை எப்பொழுதும் பயனைத் தருமே.
எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்குக் கடும் வெறுப்பா? சறுக்கிய சவுக்கு சங்கர்!
ஆதன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேர்காணலில் ஊடகவியலாளர் மாதேஸ் 'எம்ஜிஆர் மீது வெறுப்பாக இருந்தாரா ஜெயலலிதா?" என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்கின்றார். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர் 'கடும் வெறுப்பாக இருந்தார்'என்கின்றார்.
உண்மையிலேயே ஜெயலலிதா எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் இருந்தாரா? இந்தக் கேள்வியின் போது என் நினைவுக்கு முதலில் வருவது எம்ஜிஆரின் மரணத்தின்போது அவரது தலைமாட்டில் கவலை படிந்த முகத்துடன் சுமார் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக நின்ற ஜெயலலிதாவின் தோற்றம்தான். அதன் பின் அவர் ஊடகமொன்றுக்குக் கூறியதாக வெளியான கூற்று நினைவுக்கு வருகின்றது. அதில் அவர் எம்ஜிஅர் மறைவுக்குப் பின் தான் தற்கொலை செய்யக்கூட எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் உள்ள ஒருவர் இவ்விதம் செயற்பட முடியுமா?
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
.jpeg)
