Tuesday, December 16, 2025

இலங்கையின் முன்னோடிப் பெண் நிலவடிவமைப்புக் கலைஞர் (Landscaoe Architect) ஹெஸ்டர் பஸ்நாயக்கவும் அவரது நிலவடிவமைப்புகலை (Landscaoe Architecture) பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -


கட்டக்கலை பற்றி அறிந்த அளவு பொதுவாக நிலவடிமைப்புக் கலை (Landscaoe Architecture)  பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை. உண்மையில் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலையுடன் பின்னிப் பிணைந்த இன்னுமொரு கலைதான் நிலவடிவமைப்புக் கலை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சரித்திரச் சின்னங்கள் நிலவடிவமைப்புக் கலை எவ்வளவுதூரம் நகர அமைப்பில் முக்கிய இடத்தை வகித்தது என்பதை  உணர்த்தும் சான்றுகள். உதாரணத்துக்குச் சிகிரியா நகர அமைப்பில் நிலவடிவமைப்புக் கலையின் பங்களிப்பு வெளிப்படை. இது போல் பழமை வாய்ந்த விகாரைகள், அரச முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள், ஆலயங்கள் இவற்றிலெல்லாம் நிலவடிவமைப்புக் கலையின் தாக்கத்தைக் காணலாம். இன்று இத்துறை ஒரு பட்டப்படிப்பாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கபப்ட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் நிலவடிவமைப்புக் கலையில் முன்னோடிகளில்  ஒருவரான திருமதி ஹெஸ்ட்ர பஸ்நாயக்க பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வதே  இப்பதிவின் நோக்கம். 

எழுத்தாளர் தேவனின் (யாழ்ப்பாணம்) நாடகத்துறைப் பங்களிப்பு!


தேவன் (யாழ்ப்பாணம்) - சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் சிறந்த நாடகாசிரியர் என்பது எம்மில் எத்தனை பேருக்குத்  தெரியும்?

அதைத்தெரிவிக்கும், ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை  ஈழநாடு வாரமலரில் , கணேஷ் எழுதிய 'தேவன் ஒரு தனி இயக்கம்' என்னும் இக்கட்டுரை. இதில் அவர் தேவனுடன் நடத்தும் உரையாடலில்  , தேவனே தன் நாடக அனுபவங்களை விபரிக்கின்றார். அவற்றிலிருந்து பெற்ற தேவனுடைய நாடகத்துறை அனுபவங்கள் பற்றிய முக்கிய தகவல்கள்  இவை:

Monday, December 15, 2025

காலத்தால் அழியாத கானங்கள்: மெல்லப் போ! மெல்லப் போ!


[டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி]

https://www.youtube.com/watch?v=9AT_Vh5-Oos

எம்ஜிஆர் சுடப்பட்ட பின் நடித்து வெளியாகிப் பெருவெற்றியடைந்த திரைப்படம்  'காவல்காரன்' . யாழ் ராஜா திரையரங்கில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. கொழும்பிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. 

கறுத்த டீ சேர்ட்டுடன் , கட்டுமஸ்தான  உடலுடன் நடித்திருப்பார் எம்ஜிஆர். சுடுபட்ட பின்னர் அவ்விதமானதொரு ஆரோக்கியமான தோற்றத்துடன், ஆடிப்பாடி, ஓடி நடித்திருப்பார் எம்ஜிஆர் இப்பாடலில். 

எம்ஜிஆர், கவிஞர் வாலி, எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் & பி.சுசீலா கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத கானங்களிலொன்று இந்தப்பாடல். 

Sunday, December 14, 2025

வீரகேசரி மற்றும் தமிழ் ஊடகங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!


வீரகேசரி நிறுவனத்தாருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வீரகேசரி இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு, தமிழ் அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள். இன்று இணையத்தொழில் நுட்பமுள்ள காலகட்டம். வீரகேசரியின் பழைய பிரதிகளை வெளிவந்த ஆண்டிலிருந்து இன்று வரை பார்க்கும் வசதிக்கொண்ட வசதியினை ஏற்படுத்தினால், அது வாசகர்களுக்கும், கலை,இலக்கிய ஆளுமைகளுக்கும், திறனாய்வாளர்கள், ஆய்வாளர்களுக்கும், அவற்றில் எழுதிய எழுத்தாளர்கள் , ஊடகவியலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக அமையும். அதற்காக நியாயமான கட்டணத்தையும் அறவிடலாம். இதனைச் செய்வதால் இலாபமே. ஏன் இதுவரை இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.


இக்கோரிககை வீரகேசரி நிறுவனத்துக்கு மட்டுமல்ல. இலங்கையிலிருந்து வெளியாகும் அனைத்துத் தமிழ் ஊடகங்களுக்கும்தாம்.

['டிஜிட்டல் ஓவியம்' (கூகுள் நனோ பனானா) உதவி: வநகி}

இலக்கிய ஆளுமையாளர் ஒருவரை வெளிப்படுத்துமோர் அரிய காட்சி!


இலக்கிய ஆளுமைகள் அவர்கள் பணி புரியும் ஊடக நிறுவனங்களில் தம் பணியில் மூழ்கியிருக்குக் காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்கள் அரிது. அவ்விதமானதொரு காட்சியினை அண்மையில் 'வரலாறு பேசும் பொற்கணங்கள் – வீரகேசரியின் 75 ஆண்டு கொண்டாட்டத் தொகுப்பு' என்னும் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட காணொளியில் கண்டேன்.

அதில் பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்கள் தம் பணியில் மூழ்கிக் கிடக்கும் காட்சியினைக் கண்டேன். அதைத்தவறவிடக்கூடாதென்பதற்காக அக்காட்சியினைக் 'கூகுள் நனோ பனானா' செயற்கை நுண்ணறிவு கொண்டு 'டிஜிட்டல்' ஓவியமாகப் பதிவு செய்தேன். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.


 

பாட்டு கேட்கும் நேரம்: 'என்ன சொல்லப் போகின்றாய்?'



படம்: கண்டு கொண்டேன். கண்டு கொண்டேன்.
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடகர்: சங்கர் மகாதேவன்
வரிகள்: கவிஞர் வைரமுத்து
நடிப்பு: அஜித்குமார் & தபு

['டிஜிட்டல் ஓவியம்' (கூகுள் நனோ பனானா) உதவி: வநகி}

https://www.youtube.com/watch?v=Gep0IzKTcFI



Friday, December 12, 2025

அழியாத கோலங்கள்: யாழ் இந்துக் கல்லூரியின் மறக்க முடியாத விளையாட்டு வீரன் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா!


 

நான் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தபோது விளையாட்டு வீரன் ஒருவனின் பெயர் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவிருந்தது.  

யாழ் மாவட்ட விளையாட்டுச் சங்கத்தினால் , யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல் ஆகியவற்றில் , 16 வயதுக்குட்பட்ட பிரிவில் சாதனைகளுடன் கூடிய முதலிடங்களைப் பெற்று அவ்வருடச் சாம்பியன் பட்டம் பெற்ற  விளையாட்டு வீரன் இவன்.  பெயர் ஏ.எச்.எம்.ஜவ்ருல்லா என்னும் மாணவனே அவன்.

அதன் பிறகு என் கவனம் உதைபந்தாட்டம் , துடுப்பெடுத்தாட்டம் போன்றவற்றில் திரும்பி விட்டது. இம்மாணவனின் பெயரையும் அதன் பிறகு கேட்டதாக நினைவிலில்லை. ஆனால் பசுமையாக சாம்பியன் பட்டம் பெற்ற இவனது பெயரும், போட்டிகளும் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளன.  

அண்மையில் பழைய ஈழநாடு பத்திரிகைப் பிரதிகளை நூலகம் தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் மீண்டும் ஒரு தடவை அப்போட்டிகள் பற்றி வெளியான செய்திக்குறிப்பு (!2.8.1972 வெளியான) கண்ணில் தட்டுப்பட்டது. மீண்டும் இவன் பற்றிய நினைவுகள் எழுந்தன.

யாருக்காவது இம் மாணவன் பற்றிய  மேலதிகத் தகவல்கள், புகைப்படங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]

வ.ந.கிரிதரனின் பாடல்: வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5    டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி சதுரங்கம் என்பதொரு விளையாட்டு. அதுபோல் வாழ்வ...