Thursday, November 28, 2024
மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!
அழியாத கோலங்கள்: இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்'
எழுத்தாளர் இந்துமதி எனக்கு அறிமுகமானது என் பால்ய பருவத்து வாசிப்பின்போது. ஆனந்த விகடனில் எழுத்தாளர் சிவசங்கரி அறிமுகமானது அவரது 'எதற்காக?" என்னும் சிறு நாவல் மூலம். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் , இளந் தம்பதியின் காதல் மிகுந்த உரையாடல்களுடன் நடைபோட்ட நாவலின் முடிவு எதிர்பாராதது. நாயகி குளியலறையில் குளிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்து போகின்றார். இதெல்லாம் எதற்காக என்று நாவல் முடிந்திருக்கும். இவைதாம் என் நினைவில் அந்நாவல் பற்றி நிற்கும் நினைவுகள்.
Wednesday, November 27, 2024
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நூல்கள் இணையத்தில்..
1. வ.ந.கிரிதரன் கட்டுரைகள்
ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113858/113858.pdf
2. 'நவீன விக்கிரமாதித்தன்' - நாவல்.
ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113857/113857.pdf
3. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - கவிதைத்தொகுப்பு
பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113856/113856.pdf
'நூலகம்' தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்.காம் கிண்டில் - அமேசன் மின்னூல்களாக வெளியிட்ட ஏனைய எனது நூல்கள்:
1. அமெரிக்கா (நாவல்) - https://noolaham.net/project/802/80111/80111.pdf
2. குடிவரவாளன் (நாவல்) - https://noolaham.net/project/865/86442/86442.pdf
3. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு) - https://noolaham.net/project/1049/104841/104841.pdf
4. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு) - https://noolaham.net/project/20/1928/1928.pdf
5. மண்ணின் குரல் (ஆரம்ப நாவல்களின் தொகுப்பு) - https://noolaham.net/project/20/1927/1927.pdf
6. அமெரிக்கா (தொகுப்பு) - https://noolaham.net/project/20/1926/1926.pdf
7. வ.ந.கிரிதரன் பாடல்கள் தொகுப்பு 1 - யு டியூப் சானல் - https://noolaham.net/project/1175/117477/117477.pdf
8. 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' - https://noolaham.net/project/1207/120633/120633.pdf
9. வ.ந.கிரிதரன் கட்டுரைகள் தொகுதி 2 - https://noolaham.net/project/1207/120631/120631.pdf
10.. நவீனக் கட்டடக்கலைச் சிந்தனைகள் - https://noolaham.net/project/1207/120636/120636.pdf
11, இன்று புதிதாய்ப் பிறந்தேன் (வ.ந.கிரிதரன் பாடல்கள் தொகுப்பு 2 - யு டியூப் சானல்) - https://noolaham.net/project/1207/120632/120632.pdf
12, என்னை ஆட்கொண்ட மகாகவி - https://archive.org/details/2-1_20241125
13. அழியாத கோலங்கள் (பால்ய, பதின்ம வயது நனவிடை தோய்தல்) - https://archive.org/details/3-1_20241126
14. 14. அழியாத கோலங்கள் (தொகுப்பு 2) - https://archive.org/details/2-1_20241201
பதிவுகள் இணைய இதழ்
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ். https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்.
பதிவுகளுக்கு ஆக்கங்களையும், கருத்துகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com
Tuesday, November 26, 2024
வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!
அறிஞர் அ.ந.கந்தசாமியின் (A.N.Kandasamy) டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -
அறிஞர் அ.ந.கந்தசாமி என அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் நானா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் தொடராக வெளியானது. பேராசிரியர் பேட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத - அராபிய உறவுகள்' பற்றிய கட்டுரையின் கருத்துகளைத் தமிழில் விளக்கும் வகையில் இன்ஸான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Thursday, November 21, 2024
வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)
அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவுனியா அனுபவங்களையெல்லாம் விரும்பி வாசிப்பவன் நான்' என்றார். அப்பொழுதுதான் நானும் அது பற்றி யோசித்தேன். நான் முகநூலில், பதிவுகள் இணைய இதழில், என் வலைப்பதிவில் எல்லாம் என் பால்ய, பதின்ம வயது அனுபவங்களை எழுதுவது வழக்கம். என் பால்ய பதின்ம வயதுத்திரைப்பட அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களையெல்லாம் நிறைய எழுதியிருக்கின்றேன்.
மீண்டும் அவற்றை நோக்கியபோது ஒரு நூலாக்கும் அளவுக்கு எழுதியிருந்ததை உணர முடிந்தது. அவை அனைத்தையும் தொகுத்து நூலாக்கினால் நல்லதோர் ஆவணமாக அதுவிருக்கும் என எனக்கும் தோன்றியது. அதன் விளைவே இந்த மின்னூல். மேலும் பல தொகுப்புகள் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. சில பதிவுகள் , ஒன்றுக்கு மேற்பட்டவை, ஒரே விடயத்தைக் கூறுபவையாகவும் இருந்தாலும் அவற்றை நான் நீக்கவில்லை. எழுதப்பட்ட பதிவுகள் என்னும் அடிப்படையில் அவை அனைத்தையும் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளேன்.
அமேசன் - கிண்டில் பதிப்பாக வ.ந.கிரிதரனின் 'என்னை ஆட்கொண்ட மகாகவி'
எனது பாரதியார் பற்றிய கட்டுரைத் தொகுதி 'என்னை ஆட்கொண்ட மகாகவி' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளியாகியுள்ளது - https://www.amazon.com/dp/B0DNRLX984
நூலிலுள்ள கட்டுரைகள் வருமாறு:
'1. மகாகவி பாரதியார் நினைவாக.
2, பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
3. பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!
4. பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்
5. பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி....
6. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான ‘வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்’ பற்றி......
7. எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்...
8. என்னை ஆட்கொண்ட மகாகவி!
9. பாரதியை நினைவு கூர்வோம்!
10.பாரதியார் நினைவாக: பாரதியாரின் 'திக்குகள் எட்டும் சிதறி' மழைக்கவிதை!
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...


