'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Monday, January 6, 2025
ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்?'
எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது ஆசிய ஜோதி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, திரைக்கதை , வசனம் எழுதி வெளியிட்ட திரைப்படங்கள் உன்னைப்போல் ஒருவன் & யாருக்காக அழுதான்.இரு குறுநாவல்களுமே ஆனந்த விகடனில் வெளியானவை.
யாருக்காக அழுதான் நடிகர் நாகேஷின் நடிப்பை வெளிப்படுத்திய சிறந்த திரைப்படங்களில் ஒன்று. நாகேஷ் சோசப்பு என்னும் பாத்திரமாகவே மாறிவிட்டார். படத்தை இறுதிவரை பாருங்கள். இறுதியில் சோசப்பு அழுவான். யாருக்காக அவன் அழுவான்? ஆனால் நீங்கள் நிச்சயம் சோசப்புக்காக அழுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம். என்னைப்பொறுத்தவரையில் இப்படத்தின் நாகேஷின் நடிப்புக்காக நிச்சயம் சிறந்த நடிகருக்கான விருதுகள் பல கிடைத்திருக்க வேண்டும்.
அறுபதுகளில் இப்படியொரு திரைப்படத்தைத் தமிழ்த்திரையுலகு தந்திருக்கின்றது. பெருமைப்படத்தக்க விடயம். சாத்தியமாக்கிய ஜெயகாந்தன் பாராட்டுக்குரியவர்.யாருக்காக அழுதான் திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் அமரர் எஸ்.வி.ரமணன். நர்த்தகி பத்மா சுப்பிரமணியத்தின் சகோதரர். பழம்பெரும் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகன்.
ஜெயகாந்தன் தன் எழுத்துகள் வணிகத் திரைப்படங்களாக அமைந்து வெற்றியடைய வேண்டுமென்பதற்காகச் சமரசம் செய்யாத இலக்கிய ஆளுமை. இந்த விடயத்தில் அவர் தனித்துவமானவர்.
ஜெயகாந்தனின் தமிழ்த்திரையுலகப் பங்களிப்பு முக்கியமானது மட்டுமல்ல வளம் சேர்ப்பதுமாகும்.
காவல் தெய்வம் - இயக்கம் கே.விஜயன்
உன்னைப்போல் ஒருவன் - கதை, வசனம் 7 இயக்கம் - ஜெயகாந்தன்
யாருக்காக அழுதான்? - கதை, வசனம் 7 இயக்கம் - ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - இயக்கம் பீம்சிங்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - இயக்கம் பீம்சிங்
ஊருக்கு நூறு பேர் - இயக்கம் - பி.லெனின் (பீம்சிங்கின் மகன்) - சிறந்த இயக்கம், சிறந்த படம் ஆகியவற்றுக்காகத் தேசிய விருதுகள் பெற்ற திரைப்படம்.
இவையெல்லாம் திரைப்படமான ஜெயகாந்தனின் புனைகதைகள்.
திரைப்படத்தைப் பார்க்க - https://www.youtube.com/watch?v=CygM_rn7lWQ
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்: SUNO AI ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...


No comments:
Post a Comment