'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, January 1, 2025
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.!
இத்தரையில் மீண்டுமோர் ஆண்டு பிறந்தது.
எத்திக்கும் நிறையட்டும் இன்பப் பெருவெள்ளம்.
வெள்ளத்தில் நீந்திக் கிடப்போம். எமைமறப்போம்.
உள்ளத்தில் உவகை ஊறட்டும். பெருகட்டும்.
உலகின் உயிர்கள் அனைத்தும் இன்புற்று
கலகலப்பாக இருந்திடட்டும் என்றே வாழ்த்துவோம்.
நலம் மிகுந்தே இருப்பைத் தொடரட்டும்.
அவை என்றே அகமகிழ்ந்து வேண்டிடுவோம்.
போர்கள் ஒழிந்து துயரம் ஒழியட்டும்.
பாரில் அமைதி எங்கும் பூக்கட்டும்.
மானுடப் பேதங்கள் மறையட்டும், உலரட்டும்.
தேன் சிந்தும் மலராகட்டும் வாழ்வு.
புத்தாண்டே இங்கு வந்து பிறந்தாய்.
சித்தத்தை நீ மகிழ்வால் நிறைத்தாய்.
புவியியெங்கு வாழுமெம் உறவுகளே! அனைவருக்கும்
புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'
- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி - *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment