Sunday, December 8, 2024
வ.ந.கிரிதரன் பாடல்- உண்மை அன்பெனும் ஊற்று!
உண்மை அன்பெனும் ஊற்று!
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
உன் அன்பின் வலிமை ஆட்கொள்ள
என் நிலை குலையும் ஆனால்
இன்பத்தேன் குடிக்கும் தேனி ஆவேன்
அன்பே .அது போதும் எனக்கு.
நினைவுக் குருவிகள் உன்னைச் சுற்றியே
சிறகடிக்க நான் என்னை மறக்கின்றேன்.
எதிர்பார்ப்பு அற்றது தூய அன்பு.
எதிர்பார்ப்பில் தூய்மை எங்கே கூறு?
இருப்பில் இதுபோல் ஓருறவு வரப்பிரசாதம்.
இல்லையா அன்பே நீயே கூறு.
Saturday, December 7, 2024
வ.ந.கிரிதரன் பாடல்- களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'
களிப்புப் பூக்களை மலர்விக்கும் கதிராக ஒளிர்வோம்'
இசை & குரல் - AI Suno
ஓவியம் - AI
நல்லதை நினைப்போம் நினைத்ததை அடைவோம்
செல்லும் வழியெங்கும் இன்பத்தை நிறைப்போம்
இன்பமூட்டும் சொற்கள், எழுத்துகள் , அசைவுகள்
என்றுமே வாழ்வுக்கு இன்பம் தருபவை.
நன்று அவை என்போம் நம்புவோம்
நம்பிக்கை எப்பொழுதும் பயனைத் தருமே.
எம்ஜிஆர் மீது ஜெயலலிதாவுக்குக் கடும் வெறுப்பா? சறுக்கிய சவுக்கு சங்கர்!
ஆதன் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நேர்காணலில் ஊடகவியலாளர் மாதேஸ் 'எம்ஜிஆர் மீது வெறுப்பாக இருந்தாரா ஜெயலலிதா?" என்று சவுக்கு சங்கரிடம் கேள்வி கேட்கின்றார். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர் 'கடும் வெறுப்பாக இருந்தார்'என்கின்றார்.
உண்மையிலேயே ஜெயலலிதா எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் இருந்தாரா? இந்தக் கேள்வியின் போது என் நினைவுக்கு முதலில் வருவது எம்ஜிஆரின் மரணத்தின்போது அவரது தலைமாட்டில் கவலை படிந்த முகத்துடன் சுமார் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக நின்ற ஜெயலலிதாவின் தோற்றம்தான். அதன் பின் அவர் ஊடகமொன்றுக்குக் கூறியதாக வெளியான கூற்று நினைவுக்கு வருகின்றது. அதில் அவர் எம்ஜிஅர் மறைவுக்குப் பின் தான் தற்கொலை செய்யக்கூட எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எம்ஜிஆர் மீது கடும் வெறுப்பில் உள்ள ஒருவர் இவ்விதம் செயற்பட முடியுமா?
Thursday, November 28, 2024
மணிவிழாக் கவிஞரின் மணிக்கவிகள்!
அழியாத கோலங்கள்: இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்'
எழுத்தாளர் இந்துமதி எனக்கு அறிமுகமானது என் பால்ய பருவத்து வாசிப்பின்போது. ஆனந்த விகடனில் எழுத்தாளர் சிவசங்கரி அறிமுகமானது அவரது 'எதற்காக?" என்னும் சிறு நாவல் மூலம். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் , இளந் தம்பதியின் காதல் மிகுந்த உரையாடல்களுடன் நடைபோட்ட நாவலின் முடிவு எதிர்பாராதது. நாயகி குளியலறையில் குளிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்து போகின்றார். இதெல்லாம் எதற்காக என்று நாவல் முடிந்திருக்கும். இவைதாம் என் நினைவில் அந்நாவல் பற்றி நிற்கும் நினைவுகள்.
Wednesday, November 27, 2024
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் நூல்கள் இணையத்தில்..
1. வ.ந.கிரிதரன் கட்டுரைகள்
ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113858/113858.pdf
2. 'நவீன விக்கிரமாதித்தன்' - நாவல்.
ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113857/113857.pdf
3. ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - கவிதைத்தொகுப்பு
பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
https://noolaham.net/project/1139/113856/113856.pdf
'நூலகம்' தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்.காம் கிண்டில் - அமேசன் மின்னூல்களாக வெளியிட்ட ஏனைய எனது நூல்கள்:
1. அமெரிக்கா (நாவல்) - https://noolaham.net/project/802/80111/80111.pdf
2. குடிவரவாளன் (நாவல்) - https://noolaham.net/project/865/86442/86442.pdf
3. கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் (சிறுகதைத்தொகுப்பு) - https://noolaham.net/project/1049/104841/104841.pdf
4. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு) - https://noolaham.net/project/20/1928/1928.pdf
5. மண்ணின் குரல் (ஆரம்ப நாவல்களின் தொகுப்பு) - https://noolaham.net/project/20/1927/1927.pdf
6. அமெரிக்கா (தொகுப்பு) - https://noolaham.net/project/20/1926/1926.pdf
7. வ.ந.கிரிதரன் பாடல்கள் தொகுப்பு 1 - யு டியூப் சானல் - https://noolaham.net/project/1175/117477/117477.pdf
8. 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' - https://noolaham.net/project/1207/120633/120633.pdf
9. வ.ந.கிரிதரன் கட்டுரைகள் தொகுதி 2 - https://noolaham.net/project/1207/120631/120631.pdf
10.. நவீனக் கட்டடக்கலைச் சிந்தனைகள் - https://noolaham.net/project/1207/120636/120636.pdf
11, இன்று புதிதாய்ப் பிறந்தேன் (வ.ந.கிரிதரன் பாடல்கள் தொகுப்பு 2 - யு டியூப் சானல்) - https://noolaham.net/project/1207/120632/120632.pdf
12, என்னை ஆட்கொண்ட மகாகவி - https://archive.org/details/2-1_20241125
13. அழியாத கோலங்கள் (பால்ய, பதின்ம வயது நனவிடை தோய்தல்) - https://archive.org/details/3-1_20241126
14. 14. அழியாத கோலங்கள் (தொகுப்பு 2) - https://archive.org/details/2-1_20241201
பதிவுகள் இணைய இதழ்
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ். https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம்.
பதிவுகளுக்கு ஆக்கங்களையும், கருத்துகளையும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com
Tuesday, November 26, 2024
வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!
தமிழகமும் , ஊழலும்!
தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா? ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...


