Tuesday, February 17, 2026

தொடர் நாவல் : சுதந்திர மனிதன்! - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஒன்று: அர்த்தமும், அர்த்தமின்மையும்!


சுதந்திரன் அவன் வசித்து வரும் தொடர்மாடிக் கட்டடத்தின் , அப்பார்ட்மென்டின் பல்கணியிலிருந்த சாய்வு நாற்காலியில் வந்தமர்ந்தபோது நன்கு இருண்டு விட்டிருந்தது. வானம் தெளிவாகவிருந்தது. நகரத்து ஒளி மாசிலிருந்து தப்பி நட்சத்திரக்கன்னியர்கள் சிலர் தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தனர். தொலைவிலிருந்து கண்களைச் சிமிட்டிக்கொண்டிருக்கும் சுடர்க்கன்னியர்கள் வழக்கம்போல் அவனுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தினர். அவர்கள் ஓரிடத்திலிருந்து தன்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டுவதைப்போல் அவன் அப்போதெல்லாம் கருதிக்கொள்வான். அச்சிந்தனையே அவர்கள் மேல் அவனது ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது. ஆனால் உண்மையில் அவர்கள் ஓரிடத்தில், ஒரே சமயத்திலிருந்து அவனை நோக்க்கவில்லையென்பதையும் உணர்ந்திருந்தான். காலத்தின் அடுக்குக்களின் வெவ்வேறு அடுக்குகளிலிருந்து  அவர்கள் அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சுற்றி வெறுமை கலந்த விரி வெளி கவிந்திருந்தது. தனிமையின் வெறுமைக்குள் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதிலிருந்துகொண்டுதான் அவர்கள் உற்சாகம் மிக்கர்வகளாகக் கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தார்கள். அதனால் அவனுக்கு அவர்கள் மேலான மதிப்பும், நாட்டமும் அதிகரித்தது.

எவ்விதம் அவர்களால் தனிமைக்குள் இனிமை காண முடிகின்றது?  ஒருவிதத்தில் தனக்கும் அவர்களுக்குமிடையில்தான் என்ன வேறுபாடு? தானும் ஒருவகையில் அவர்களைப்போன்றுதானே இருக்கின்றேன் என்றும் எண்ணிக்கொண்டான். தான் மட்டுமே அவன் வசிக்கும் இக்கோளில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தானே இருக்கின்றார்கள் என்றும் இவ்விதமான சமயங்களில் எண்ணிக்கொள்வான். அன்றும் எண்ணிக்கொண்டான்.

Tuesday, February 10, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.


வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI


வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர்  வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உண்மை வரலாற்றை அறியாது இருக்கின்றோம்.
மண்ணின் வரலாற்றை எழுதுபவர் மக்களே.
உண்மை வரலாறு அதுவே உணர்வோம்.
உணர்ந்து அவரை எப்போதும் போற்றுவோம்.

காலத்தால் அழியாத கானம்: 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி'


காலத்தால் அழியாத கானங்களில் ஒன்றான  இது போன்ற உயிர்த்துடிப்புள்ள பாடல்களை, வரிகளையெல்லாம் மறக்கத்தான் முடியுமா? .  பாடகி பி. சுசீலா அவர்களின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இடம் பெறும் பாடல் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி' .   கவியரசர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்று.  கவிஞர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி , பி.சுசீலா கூட்டணியில் உருவான சிறந்த  பாடல்களிலும் இடம் பிடிக்கும் பாடல்.

விதவைப்பெண் ஒருத்தியின் உணர்வுகளை அற்புதமாக இதைவிட யாழ் எழுத்தில்  எழுத்தில் வடிப்பார்?   கவிஞரின்  வரிகளுக்கு உயிரூட்டி நடித்திருக்கின்றார் செளகார் ஜானகி.  அவரை நினைத்தால் நினைவுக்கு வரும் பாடல்களில் ஒன்றாகவும் இப்பாடலைக் கூறலாம்.

வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!


வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ்  மண்ணே! 

- இசை & குரல்: AI SUNO - ஓவியம் : AI

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த  மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

தாழ்ந்த போதெல்லாம் மேலெழுந்தாய் நிலைத்தாய்.
தலைநிமிர்ந்து  எழுந்து நின்றாய் என்மண்ணே.
எரித்த போதெல்லாம் துளிர்த்து எழுந்தாய்.
என்னருமை யாழ்மண்ணே! பிரிய யாழ்மண்ணே!.

Monday, February 9, 2026

வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து செல்லும் பெண்ணே!


வ.ந.கிரிதரன் பாடல் : தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 


இசை & குரல்:  SUNO AI   ஓவியம்: கூகுள் AI

தலை குனிந்து  செல்லும் பெண்ணே! 
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன?
தலை நிமிர்ந்து பார்த்தால் என்ன
நிலை குலைந்தா போவாய் கண்ணே!

கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டும். 
காதல்  நதியெனப்  பொங்க வேண்டும்.
எண்ணம் எல்லாம் நிறைய வேண்டும்.
மண்ணின் வாழ்வு சிறக்க வேண்டும்.

Sunday, February 8, 2026

வ.ந.கிரிதரன் பாடல்கள் யு டியூப் சானல்! வரவேற்கின்றோம்!


நண்பர்களே! 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் எனது  'யு டியூப் சானலு'க்கு உங்களை வரவேற்கிறேன். செயற்கை நுண்ணறிவை (AI) நாம் அனைவரும் ,பல் துறையில் இருப்பவர்களும், பொது மக்களும் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் இந்தச் 'சானல்'.  

எனக்கு என் பாடல்களை இசையமைத்துப் பாடுவதைப் பார்க்க விருப்பமாகவிருந்தது.  அதைச் சாத்தியமாக்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் துணை இல்லாவிட்டால் என்ன  நடந்திருக்கும்?  நான் ஓர் இசைக்குழுவின் உதவியை, பாடகர் உட்பட,  நாடியிருக்க வேண்டும். அது மிகவும் இலகுவானதொன்றல்ல. அது பெரும்பொருட்செலவை வேண்டி நிற்பது.  இவ்விதமானதொரு சூழலில்தான் எனக்கு செயற்கை நுண்ணறிவு உதவிக்கு வந்தது.

Monday, February 2, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்


வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்


இசை & குரல்: SUNO AI    ஓவியம்: கூகுள் AI

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

பழம் பெருமை பேசுவதை நிறுத்தார்.
பழைய நூல்களை வாங்கவே மாட்டார்.
சமூகப் பிரிவுகள் வளர்த்தே வாழ்வார்.
சங்கத்  தமிழரென்றே பொங்கி எழுவார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...