நடிகர் நாகேஷைப் பற்றி நினைத்தால் அவர் நடித்த திரைப்படக் காட்சிகள் பல நினைவுக்கு வரும்.அவற்றில் பலருக்கு முதலில் நினைவுக்கு வரும் காட்சி திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி - சிவன் காட்சிதான்.
மறக்க முடியாத காட்சி, அனைத்து வயதினரும் முகம் சுளிக்காது, நினைத்து நினைத்துக் களிக்கும் காட்சி. இக்காட்சியில் தருமியாக நாகேஷ் சிவனிடம் கேட்கும் கேள்விகளும், அப்போது நாகேஷ் வெளிப்படுத்து உடல், குரல் அசைவுகளும் அற்புதம்.
இயக்குநர் ஏ.பி .நாகராஜனே திரைப்படக்கதை வசனத்தையும் எழுதியவர்.அவரது எழுத்துச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு இக்காட்சி வசனங்கள்.
இதிலொரு கேள்வி வரும். பிரியக்கூடாதது எது?
அதற்குப் பதில் எதுகையும் மோனையும்.
அது உண்மையில் சரியான பதிலல்ல. ஏனென்றால் தமிழ் மரபுக் கவிதையில் எதுகை, மோனையற்று அல்லது மோனையுடன் வரும் கவிதை வடிவம் அகவற்பா என்னும் ஆசிரியப்பா. ஆசிரியப்பாவில் எதுகை வரலாம், வராதும் விடலாம். அங்கு முக்கியம் ஆசிரிய உரிச்சீர்கள். அதுவும் அதிகமாக ஆசிரிய உரிச் சீர்கள் வரவேண்டும். இந்நிலையில் பிரியக் கூடாதது எதுகையும், மோனையும் சரியான பதிலல்ல. அப்படி ஒரு கட்டாய விதி தமிழ் மரபுக் கவிதையிலில்லை.
https://www.youtube.com/watch?v=gj6EDdB2_dA
டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) : VNG
Subscribe to:
Post Comments (Atom)
மகாகவி பாரதியார் பாடல் - பாரத சமுதாயம்
மகாகவி பாரதியாரின் 'பாரத சமுதாயம்' கவிதையில் எனக்குப் பிடித்த வரிகளைக்கொண்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். என் குரலில் இசையமைத்துப் பா...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

No comments:
Post a Comment