எழுத்தாளர் தகழி சிவசங்கரம்பிள்ளையின் புகழ் பெற்ற மலையாள நாவல்களிலொன்று 'செம்மீன்'. தமிழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பில் , காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது.
இதன் திரைவடிவம் அதே பெயரில் வெளியாகிப் புகழ் பெற்றது. ராமு காரியாத்தின் இயக்கத்தில் வெளியாகி, இந்திய மத்திய அரசின் சிறந்த பட விருதுடன், சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் விருதுகள் பெற்ற திரைப்படம்.
சத்யன் (பழனி) , மது (பரீக்குட்டி) & ஷீலா (கருத்தம்மா) நடிப்பில் வெளியான திரைப்படம் , பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை,. வயலார் ராமவர்மா எழுதியுள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலைப் பாடியிருப்பவர் பாடகர் மன்னா டே (Manna Dey).
* 'டிஜிட்டல்' தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - VNG
No comments:
Post a Comment