Monday, March 11, 2024

ஓவியர் சாண் சுந்தரம் (செல்வேந்திரா) !


யாழ் நகரைச் சேர்ந்த சாண் சுந்தரம் (செல்வேந்திரா) , Shan Sundaram, பேராதனைப் பொறியியற் துறைப்பட்டதாரி. மனித உரிமைச் செயற்பாட்டாளர். சிறந்த ஓவியர். உலகப் பயண ஆர்வலர். இலவசமாகக் கற்பிப்பவர்.  தற்போது நியூ யோர்க்கில் வசிக்கும் இவர் மரதன் ஓட்ட வீரர்.

இவர் தன் பதிவுகளில் பதிவேற்றும் இவரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தவை. 'ஆயில் பெயிண்டிங்' , 'வாட்டர் கலர் பெயிண்டிங்', 'அக்ரிலிக் பெயிண்டிங்'  எனப் பலவகை ஓவியங்களையும் சிறப்பாக வரைபவர். ஓவியக் கண்காட்சிகளையும் நடத்தியிருப்பவர்.

Wednesday, March 6, 2024

தொடர்நாவல்: மனக்கண் - அத்தியாயம் இரண்டு - அழைப்பு - அ.ந.கந்தசாமி -

- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூலை 29, 1967 வரை வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது.  அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இந்நாவல் அமேசன் கிண்டில் பதிப்பில் மின்னூலாகவும் வெளியாகியுள்ளது. இன்னுமொரு நாவலான 'கழனி வெள்ளம்'.  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - 

இரண்டாம் அத்தியாயம்: அழைப்பு
 

பல்கலைக் கழக மண்டபத்தில் ‘எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகம் தமிழில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிரேக்க நாடகாசிரியனா ♦ன சொபாக்கிளிஸ் எழுதிய அந்நாடகம் உலகத்தின்  வெற்றி நாடகங்களில் ஒன்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நகரில் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட அந்நாடகம் உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் நடிக்கப்பட்டு இப்போது தமிழ் மொழிக்கும் வந்துவிட்டது. நானே இதற்குப் பொறுப்பாளி என்பதில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மிக்க பெருமை.

   “எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும்! சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா? இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது!

Wednesday, February 28, 2024

எனது நூல்கள் வாசிப்புக்கு ....


    அண்மையில் வெளியான எனது மூன்று நூல்கள் தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கி வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Tuesday, February 27, 2024

தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -


- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக,  சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில  உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. -


ஜெயலலிதாவின் கட்டுரை கீழே;

1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.

Monday, February 26, 2024

நாவல்: வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்'


ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.  
 
 

 

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்


ஜீவநதி வெளியீடாக வெளிவந்த எனது கட்டுரைத் தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

கவிதைத் தொகுப்பு: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் -


பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கல். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 

Sunday, February 25, 2024

தொடர் நாவல்: மனக்கண் (1) - முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை! - அ.ந.கந்தசாமி -


- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூலை 29, 1967 வரை வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது.  அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இந்நாவல் அமேசன் கிண்டில் பதிப்பில் மின்னூலாகவும் வெளியாகியுள்ளது. இன்னுமொரு நாவலான 'கழனி வெள்ளம்'.  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். -


முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை

ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. "ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?" என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவாக..


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்ததினம் பெப்ருவரி 24. என்னைப்பொறுத்தவரையில் எம்ஜிஆரும் அவரும் என் அபிமான நடிகர்கள். என் பால்ய பருவத்தில் நான் அதிகமாகத் தமிழ்ப்படங்கள் பார்க்கத் தொடங்கிய காலத்தில் திரையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

அரசியலைப்பொறுத்தவரையில் ஆணாதிக்கத்திலுள்ள தமிழக அரசியலில் தனித்து, துணிச்சலாக செயற்பட்டவர். அந்தத்துணிச்சல் எனக்குப் பிடிக்கும். பெண் சிசுக்களைக் காப்பாற்றத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குப் பல்வேறு வகைகளில் பொருளியல்ரீதியிலான உதவித்திட்டங்களை ஆரம்பித்தார். அம்மா உணவகத்தின் மூலம் அடித்தட்டு மக்களும் பயன்படையச் செய்தார். எம்ஜிஆர் முதல்வராகவிருந்த காலத்தில் சத்துணவுத்திட்ட நிர்வாகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்திட உதவினார். தமிழக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தன் அரசியலை நடத்தினார். இவையெல்லாம் அவரது ஆரோக்கியமான பக்கங்கள். அவரது திட்டங்களினால் பலர் பயனடைந்தார்கள்.

Sunday, February 18, 2024

நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமார்!


இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சில ஊர்கள் கலைகளுக்குப் புகழ்பெற்றவை.  அளவெட்டி இத்தகைய ஊர்களிலொன்று.  இன்னுமொரு ஊர் கரவெட்டி. கலைஞர்கள் பலரை, சமூக,அரசியற் செயற்பாட்டாளர்களை, எழுத்தாளர்களை  உருவாக்கிய ஊர் கரவெட்டி.  மார்கசியக்கருத்துகளை உள்வாங்கிய அரசியல் ஆளுமைகள் பலரைத் தந்த ஊர் அது. இந்நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமாரும் கரவெட்டிக்குப் புகழ் சேர்க்கும் கலைஞர்களில் ஒருவர்.

Friday, February 16, 2024

வெள்ளி சிணுங்கி அழ ஏலே ஏலோ


கவிஞர் மஹாகவியின் 'புதியதொரு வீடு'  இசை நாடகத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் எழுத்தாளரும், பாடகருமான திவ்வியராஜன்.  திவ்வியராஜனின் இதயத்தை வருடித் தாலாட்டும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை. என்ன குரல்! நல்ல குரல் வளம் இருந்தால் மட்டும் போதாது. வரிகளை உணர்ந்து, உள் வாங்கித் தன்னை மறந்து , வரிகளுடன் ஒன்றிப்பாடகர் பாடுகையில்தான் அப்பாடல் கேட்பவரின் இதயங்களை வருடிச் சென்று அதனுடன் ஒன்றிட  முடியும். திவ்வியராஜனின் குரலைக் கேட்பதும் இன்பம். அவர் பாடும் அழகைப் பார்ப்பதும் இன்பம்.

கவிஞரின் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளன. வெள்ளி சிணுங்கும் கும்மிருட்டு விண். மெல்லச் சுழன்றெழுந்து மேல் விழும் காற்று. வார் கடலின் நீர் கிழிக்கும் வள்ளம். கடற்றொழிலாளர் கரைவலை வள்ளம் வலித்துக் கடலில் செல்லும் காட்சியினை,சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலைச் சிறப்பாக, உணர்வுபூர்வமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர் மஹாகவி.

Wednesday, February 14, 2024

ஆவணக்காணொளி: கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை


எழுத்தாளர் கு,அழகிரிசாமி பற்றிய சிறப்பானதோர் ஆவணக்காணொளி. அவரை எழுத்தாளராக  மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'கு.அழகிரிசாமி  கொலக்கால் திரிகை' என்னும் இக்காணொளி அவரது பன்முக ஆளுமையை அறிய வைத்தது.  இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தைச் சிறப்பாகச் செய்திருப்பவர் அ.சாரங்கராஜன். வாழ்த்துகள்.

Tuesday, February 13, 2024

Camels are marvelous!


Camels never break down
and never get tired seeing deserts,
never get scared witnessing desert storms.
they love traveling long journeys.
 

To read the full poem

எழுத்தாளர் டானியல் அன்ரனியின் 'முல்லை' சஞ்சிகை!


இலங்கையில் வெளியான கலை, இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய பூரணமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது  அவசியம். நூற்றுக்கணக்கில் சஞ்சிகைகள் பல  வெளிவந்து , பொருளாதாரச் சூழல் காரணமாகத் தாக்குப்பிடிக்க முடியாது காணாமல் போயிருக்கின்றன.இவை பற்றியெல்லாம், இவற்றில் எழுதிய எழுத்தாளர்கள்,  பங்களித்த ஓவியர்கள் , வெளியான பல்வகை ஆக்கங்கள் பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்பட  வேண்டும்.

Thursday, February 8, 2024

இணையத்தில் தமிழும், பதிவுகள், திண்ணை & தமிழ்மணம் ஆகியவற்றின் பங்களிப்பும் பற்றி..


அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் 'கமல் முதல் கமல் வரை' என்னுமொரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகள் என் கவனத்தை ஈர்த்தன;
 
"இன்று நாம் காணும் இலக்கியம் சார்ந்த பொதுச்சித்திரம் என்பது மூன்று முன்னகர்வுகளால் உருவானது. ஒன்று, ஐராவதம் மகாதேவன் (தினமணி தமிழ் மணி) மாலன் (தமிழ் இந்தியா டுடே) வாஸந்தி (தமிழ் இந்தியா டுடே) கோமல் சுவாமிநாதன் (சுபமங்களா) ஆகிய ஆசிரியர்கள் உருவாக்கிய இடைநிலை இதழ்களும் அவற்றில் நிகழ்ந்த இலக்கிய அறிமுகமும்.
 
இரண்டு, 1999 முதல் தொடர்ச்சியாக இணைய ஊடகம் உருவாகி வந்ததும், அதன் வழியாக மலிவாக இலக்கியவாசகர்கள் தங்களை கண்டடைந்ததும், ஒருவரோடொருவர் உரையாடியதும். திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களுக்கும், தமிழ்மணம் போன்ற வலைப்பதிவுத் திரட்டிகளுக்கும் அதில் பெரும்பங்களிப்பு உண்டு.
 
மூன்று, புதிய இதழ் மற்றும் ஊடக வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விவாதங்கள், கட்டுரைகள் வழியாக இலக்கிய அறிமுகம் நிகழ்த்திய என்னை போன்ற இலக்கியவாதிகள். இன்று திரும்பிப் பார்க்கையில் நான், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன் ஆகிய மூவருமே அதில் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறோம் என்று படுகிறது. முப்பதாண்டுக்காலம் சலிக்காமல் அதில் உழைத்துள்ளோம்."
 
இணையத்தில் தமிழை ஏற்றுவதற்குப் பதிவுகள் இணைய இதழும் முக்கிய பங்காற்றியுள்ளதை அவர் ஏற்று பதிவு செய்துள்ளார். அதற்குப் பதிவுகள் சார்பில் நன்றி. 

Wednesday, February 7, 2024

Poem: A liberated bird in the empire of solitude


எனது ஆங்கில வலைப்பதிவில் A liberated bird in the empire of solitude! என்னும் தலைப்பில் கவிதையொன்றை பதிவிட்டுள்ளேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கின்றேன். உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.
 
A liberated bird in the empire of solitude!
 
I am chained in the empire of solitude.
As a slave or master?
Neither of them,
But as an entirely liberated
and adorable bird singing
 

Tuesday, February 6, 2024

Poem: Dimensional Barrier and the Question of God! or You Are My God!


எனது ஆங்கில வலைப்பதிவில் Dimensional Barrier and the Question of God! or You Are My God! என்னும் தலைப்பிலொரு கவிதையினைப் பதிவிட்டுள்ளேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Poem: Dimensional Barrier and the Question of God! or You Are My God!

Below us, there are Flatlanders.
Visiting their world is my preferred hobby.
Differences in dimensions benefit us,
because of this,
the world of Flatlanders always entrances me.
The reason behind this bliss is the superiority complex.
It's our weakness as well.
Is it not enough for my bliss or entrancement?

Monday, February 5, 2024

எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு! அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?


எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு'  என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.

Friday, February 2, 2024

'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -


நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;

"விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."


தற்போதுள்ள அரசியல் சூழல் என்னைப்பொறுத்தவரையில் நடிகர் விஜய்யுக்குச் சாதகமான பல விடயங்களைக் கொண்டுள்ளது.

Thursday, February 1, 2024

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் எனது நூல் பற்றிய விமர்சனக் குறிப்புகளை பெப்ருவரி தாய்வீடு  பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். இது அண்மையில் 'டொராண்டோ'வில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கட்டுரை நூல் பற்றி அவர் வாசித்த கட்டுரையின் எழுத்து வடிவம்.  அருண்மொழிவர்மனுக்கு எனது நன்றி.  

மேற்படி விமர்சனக் குறிப்பில் அவர் பல விடயங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவை பற்றி விரிவாக விரைவில் என் பார்வையில் கருத்துகளை முன் வைப்பேன். இங்கு இக்கட்டுரைத்தொகுப்பை என் அபிமானக் கவி பாரதிக்குச் சமர்ப்பித்தது பற்றிய அவரது விமர்சனக் குறிப்புக்கான என் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

Sunday, January 28, 2024

Serial Novel: Modern Vikramathithan - Chapter Two: Urban Rain and Manoranjitham!


எனது 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல்' ஆங்கிலத்தில் எனது வலைப்பதிவில் வெளியாகின்றது. அதன் இரண்டாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்.

Serial Novel: Modern Vikramathithan - Chapter Two: Urban Rain and Manoranjitham!

Lightning makes a line through the city,
engulfing it in darkness.
Thunder roars.
The rain opens up like a scene
in a silent movie.

I am looking at the rain from a nest in the concrete tree. Like scenes from a silent movie, the rain appeared to me. Rain is one of my favorite natural events. Watching it is one of my favorite hobbies. Enjoying rain is a kind of sweet and unique experience.

Friday, January 26, 2024

பவதாரணி: 'மயில் போல பொண்ணு ஒன்னு!"


இளமையில் மரணம் கொடிது. பாடகி பவதாரணி இன்னும் நீண்ட காலமிருந்து இசையுலகில் மேலும் பல சாதனைகளைச் சாதித்திருக்க வேண்டியவர். 

'பாரதி' பாடத்தில் பாடிய 'மயில் போல' பாடல் மூலமே என் கவனத்தை  ஈர்த்தவர். இப்பாடலுக்காகச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். தந்தையின் இசையமைப்பில் இவ்விருதை இவர் பெற்றதும் முக்கியத்துவம் மிக்கது.

அவர் மறைவால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் இசைஞானி மற்றும் குடும்பத்தவர் , இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.


அவர் நினைவாக 'மயில் போல பொண்ணு ஒன்னு'

- https://www.youtube.com/watch?v=QjDek8QpnWc

Tuesday, January 23, 2024

Serial Novel: Modern Vikramathithan! Chapter One: I am ,Vikramathithan, speaking!


எனது  'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எனது ஆங்கில வலைப்பதிவில் வெளியிடத்  தொடங்கியுள்ளேன். முதலாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.  இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்.

Serial Novel: Modern Vikramathithan!

Chapter One: I am ,Vikramathithan, speaking!

My name is Vikramathithan. people who know me well even call me  'Modern Vikramathithan'. My short name is Vikraman who never get tired. Like vikrmathithan without tiredness climbs up the murungai tree get the dead body and how he gets the body while descending the tree he never get tiredness. each time he faces failure, that doesn't stop him from trying again and agian.  In that sense  Iam like him. that's why my close friend call me 'Naveena Vikramathiththan' 'Naveena' meens in Tamil 'Modern'. I never get tired trying new things, failed  ones. in fact if you think during these circumstances , I feel happy, that would be a nice thinking, I think. I don't have any objections for that.

I have a great desire to think,appreciate and read about existence. Our existence in the universe is not only great but also trifle too. thinking gives me happiness. thinking gives me understanding. thinking makes things ckear.

To read the full chapter

Monday, January 22, 2024

ஸ்கார்பரோவிலுள்ள சாப்டர்ஸ் புத்தகக் கடைக்கு மூடுவிழா!


எனது ஆலயங்கள் புத்தக் கடைகள், நூல் நிலையங்கள். ஸ்கார்பரோவிலுள்ள சாப்டர்ஸ் புத்தகக் கடை எம் வாழ்க்கையில் பல்லாண்டுகளாக ஓரங்கமாக இணைந்து பயணித்து வந்ததொன்று. 
 
தற்போதுள்ள சூழல் காரணமாகப் பல பதிப்பகங்கள் , சஞ்சிகைகள், பத்திரிகைகள்  ஆட்குறைப்பு செய்கின்றன, அல்லது சஞ்சிகை, பத்திரிகைகளின்பக்கங்களைக் குறைக்கின்றன, அல்லது இணையத்தில் மட்டும் இயங்கத்தொடங்குகின்றன. இன்னும் சில மூடு விழா நடத்துகின்றன.

Sunday, January 21, 2024

Albert Einstein Revolutionized the Concepts of Space and Time!


ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் பற்றிய குறிப்பொன்றினை எனது ஆங்கில வலைப்பதிவில் இட்டுள்ளேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை உங்களுடன் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Albert Einstein Revolutionized the Concepts of Space and Time!

Albert Einstein was introduced to me by my dad in my childhood. He made a scrapbook using construction papers featuring photographs of many prominent personalities from around the world. That scrapbook also included pictures of famous places worldwide. One of the personalities featured in the scrapbook was Albert Einstein.

His theories of General relativity and special relativity are the reasons for my liking him. Until Newton, space and time were considered absolute; they were not affected by any movements happening around them.

https://twitter.com/vng230/status/1749247428199411811

Bharathiyar: A Great Tamil, Indian poet!


என் அபிமானக் கவி மகாகவி பாரதியாரைப் பற்றிய ஆங்கிலக் குறிப்பொன்றினை,  Bharathiyar: A Great Tamil, Indian poet! என்னும் தலைப்பில் , எனது ஆங்கில வலைப்பதிவில் எழுதியுள்ளேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
 
Bharathiyar, known as 'Maha Kavi Bharathiyar,' is a revered Tamil and Indian poet. 'Maha' means great in Tamil. 'kavi' means 'Poet'. Therefore, 'Maha Kavi' translates to a great poet.
 
Among Tamil writers, he is my personal favorite. Despite his short life, his literary achievements were incredibly impressive. Not only was he a prolific poet, but he also played a crucial role as a social and political activist. During the British rule, he ardently fought against their dominion, making him a notable freedom fighter in India's nationalistic struggle.

Saturday, January 20, 2024

மறக்க முடியாத கனடிய அனுபவம்!



ஒரு தடவை தொண்ணூறுகளில் ஒரு வீடற்ற வீதி மனிதனை டொரோண்டோ நகரில் ஹில்டன் ஹொட்டல் முன் சந்தித்தேன். அவனுடான அனுபவத்தை மையமாக வைத்து ஒரு சிறுகதையும் 'வீடற்றவன்' என்னும் பெயரில் எழுதியிருந்தேன். வைகறை பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் அக்கதை பிரசுரமானது. பின்னர் அம்மனிதனைப் பற்றி மறந்து விட்டேன். பின்னர் ஒரு சமயம் டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையிலொரு செய்தி வந்திருந்தது. அதில் Bay வீதியும், Adelaideஎ வீதியும் சந்திக்குமிடத்தில் இரு வீடற்றவர்கள் சண்டை பிடித்தது பற்றிய செய்தி அது. அதில் ஒருவர் டொரொண்டோ மேயர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்றிருந்தது. அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான் சந்தித்த மனிதன் கிளார்க்கும், கெவின் கிளார்க்கும் ஒருவரே என்னும் விடயம்.
அண்மையில் விக்கிபீடியாவில் அவரைப்பற்றியொரு பக்கமிருந்ததை அறிந்தேன்.அதில் அவரைப்பற்றிய பல முக்கிய தகவல்கள் இருந்தன. அவர் எண்பதுகளில் டொரோண்டோ பாடசாலையொன்றில் தரம் ஐந்துக்கான ஆசிரியராகவிருந்தவர். அதன் பின்பு வாகனம் சம்பந்தமான வர்த்தம் செய்தவர். நடிகராகவும் இருந்திருக்கின்றார். இவர் The People's Political Party அதாவது மக்களின் அரசியல் கட்சி என்னுமொரு அரசியல் கட்சியின் ஸ்தாபகர். தலைவர். மேயர் தேர்தலுடன் மாகாண தேர்தல்களிலும் போட்டியிட்டவர்.
 
எனது 'வீடற்றவன்' சிறுகதையின் முடிவில் இவ்வாறு கூறியிருப்பேன்: " இந்த புதிரான மாநகரைப் போலவே புதிரான மனிதனிவனெனப் பட்டது. ' உண்மைதான் கெவின் கிளார்க் ஒரு புதிரான மனிதர்தான்.
எனது இந்த அனுபவத்தைப்பற்றியொரு குறிப்பினை எனது ஆங்கிலப் பக்கத்தில் எழுதினேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.
 
Unforgettable Canadian Experience! 
 
One night in the mid-nineties, I was walking along Richmond Street West towards University Avenue. As I passed the Hilton Hotel, I encountered a panhandler. He stood out from the regular panhandlers, wearing a worn-out coat and pants – a rich-to-rag figure. Politely, he asked for money, and I gave him a toonie, a Canadian two-dollar coin. Grateful, he handed me two quarters and suggested I give them to my daughter, assuring me she could use them to call me when needed.


In that instant, he became a unique and mysterious figure. Intrigued, I decided to engage in a short conversation with him. I noticed he carried a plastic container with 'Clarke for Mayor' written on its surface. Surprisingly, he shared that he was running for Toronto Mayor. He also  told me that he was running to champion people's rights. His revelation astonished me, given the media's portrayal of homeless individuals often dealing with mental illness.To read the full article

Twitter

Let me know your answer, Kannamma! (Kannamma poem 4)


எனது ஆங்கில வலைப்பதிவுப் பக்கத்தில் புதிதாக எழுதிய 'கண்ணம்மாக் கவிதை' இது. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
 
Let me know your answer, Kannamma! (Kannamma poem 4)
 
Kannamma, our space-time exists
inside the cone, a wave-cone!
Yes! An electromagnetic wave cone.
Inside the cone, we dance with dreams.
We dance with plans.
We dance with thoughts.
We dance with feelings.
The reality outside the cone,
that is unknown to us, Kannamma!
Is it similar to our space-time or not?
Have you ever thought about this, Kannamma?
Tell me, Kannamma.
Happiness is derived from thinking
about and beyond that border
or barrier, Kannamma!
 
To read the full poem
 

Ursula Andress in Undress! A movie ad I never forget!


எமது இளமைப்பருவத்தில் எம்மையெல்லாம் கவர்ந்த ஹொலிவூட் நடிகர் 'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி ( நாம் அழைப்பது சீன் கானரி 🙂 ). யார் யாரோ 'ஜேம்ஸ் பாண்ட்'டாக நடித்திருந்தாலும் எம்மைப்பொறுத்தவரை இவர்தான் நிரந்தர ஜேம்ஸ் பாண்ட்.
 
இவரைப்பற்றிய, இவரது திரைப்படமான 'டொக்டர் நோ' யாழ் ராஜா திரையரங்கில் மீளத்திரையிடப்பட்டபோது பார்த்த அனுபவம் பற்றி, அவர்களது சுவையான திரைப்பட விளம்பரம் பற்றி ஒரு சிறு குறிப்பினை எனது ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். To read the full article
 

Lee van Cleef: The Best of The Bad!


எனது ஆங்கில வலைப்பதிவில் நடிகர் லீ வான் கிளிவ் பற்றி Lee van Cleef: The Best of The Bad! என்னும் தலைப்பில் எழுதிய குறிப்பினை எனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அதனை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
To read the full article
 

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி.....



கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றினை எனது ஆங்கிலப் பக்கத்தில் எழுதியுள்ளேன். இது ஒரு திறனாய்வுக் கட்டுரையல்ல. நினைவில் இருந்த விடயங்களை வைத்து எழுதப்பட்ட அறிமுகக் குறிப்பு மட்டுமே. இதில் உதாரணத்துக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியல்கள் முழுமையானவை அல்ல. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.
 
On Canadian Tamil Literature!
Diaspora Tamil literature is a common term denoting the literature of expatriate Tamils. Tamil people live worldwide in many countries, including Western countries. Most of them migrated to other countries after the communal riots that happened in 1983, which is generally known as 'Black July '83.' Now, more than thirty years have passed since they left. During this time, the diaspora literature of Tamils has achieved many milestones in various literary forms such as short stories, poems, dramas, novels, and non-fiction. To read the full article

நடிகர் நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) நினைவாக...


தனது நூற்றி மூன்றாவது வயதில் மறைந்த நடிகர் கேர்க் டக்ளஸ் ( Kirk Douglas) உலகச்சினிமாவில் முக்கியமானதோர் ஆளுமை. மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்குக் கிடைக்காத அவ்விருது இவரது மகன் மைக்கல் டக்ளசுக்குக் கிடைத்தது. ஆனால் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது பின்னர் கிடைத்தது. இவரைப்பற்றி எனது ஆங்கில வலைப்பதிவில் ஒரு சிறு குறிப்பினை இட்டுள்ளேன். அதன எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். 
 
On the memory of Kirk Douglas...
 
When Kirk Douglas passed away, he was 103 years old. He led a complete, satisfactory life. Despite being nominated thrice for the Oscar award, he never received it for his acting prowess.The denied Oscar award was given to his son, Michael Douglas, for his role in Oliver Stone's 'Wall Street'. Late in his life, he was awarded a lifetime achievement Oscar. To Read the full article
 

Tuesday, January 16, 2024

'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மானுடன் ஓர் உரையாடல்!


இன்று 'இளம்பிறை' எம்.ஏ.ரஹ்மான் அவர்களுடன் அலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. முக்கியமான உரையாடல்களிலொன்று. இதுதான் நான் அவருடன் முதன் முதலாக உரையாடுவது. ஆனால் நன்கு அறிமுகமான நண்பர் ஒருவருடன் உரையாடுவதைப் போன்று உணர்ந்தேன். உரையாடல் பல விடயங்களைத் தொட்டுச் சென்றது. அவர் தனது 'இளம்பிறை' சஞ்சிகை வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி, 'அரசு' பதிப்பகத்தின் மூலம் நூல்கள் வெளியிட்ட அனுபவங்களைப் பற்றி எனத்  தன் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

Monday, January 15, 2024

வாழ்த்துகின்றோம்: அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!


கோயம்புத்தூரில் அண்மையில் நடைபெற்ற நவீன  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைய கண்டுபிடிப்புகள்  குறித்த் ஏழாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அறிவியல் அறிஞர் சி.ஜெயபாரதன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசித்து வரும் திரு.ஜெயபாரதன்  அணுப்பொறியியலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.  வானியற்பிய, வானியல் , பற்றும் பல்வேறு அறிவியல் துறைகள் பற்றிய இவரது தமிழ்க்கட்டுரைகள் முக்கியமானவை.இவை தவிர கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு , கவிதை  என இவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது.  

Friday, January 12, 2024

எனது ஆங்கிலக் கண்ணம்மாக் கவிதைகள் இரண்டு!


எனது ஆங்கில வலைப்பதிவில் எழுதிய கண்ணம்மாக் கவிதைகள் இரண்டு இவை.

Poem: Kannamma! We Are the Elements of a Four-Dimensional painting! (Kannamma Poem 1)

Expanding in a large space,
Who drew this four-dimensional painting here,
dear Kannamma?
Do you think there are
more multi-dimensional paintings,
beyond four that exist parallel Kannamma?
If they do, do you believe  or
Do you think
There is a way to reach them
Kannamma?
Please tell me,
my dear Kannamma!

Wednesday, January 10, 2024

காலத்தால் அழியாத கானம் - 'நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?'


காலத்தால் அழியாத கானமான 'நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?' பற்றி ஒரு சிறு குறிப்பினை எனது ஆங்கில வலைப்பதிவுப் பக்கத்தில் எழுதினேன்.  அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
 
It is time to listen to an everlasting Tamil film song: 'Netru Varai Nee Yaro'
 
The late Kannadasan, a Tamil writer, poet, and film lyricist, adeptly utilized his knowledge of ancient Tamil literature in crafting lyrics. some of his popular songs were composed in this manner, including one of my personal favorites from the movie 'Vazkaip Padagu' (Life Boat or Life as a Boat), produced by the famous Gemini studio. Listening to this song allows one to feel his profound understanding of ancient Tamil literature. கட்டுரையை முழுமையாக வாசிக்க

யாழ் மனோஹரா திரையரங்கு பற்றிய நினைவுகள்!


யாழ் மனோஹரா திரையரங்கு பற்றி எனது ஆங்கில வலைப்பதிவில் சிறு குறிப்பு எழுதியுள்ளேன். 
 
மனோஹரா திரையரங்கு என், எம் வாழ்க்கையில் மறக்க முடியாத திரையரங்குகளில் ஒன்று. என் பால்ய, பதின்ம வயதுகளில் அதில் எத்தனை ஆங்கில ஹொலிவூட் திரைப்படங்களைப் பார்த்திருப்பேன்! தமிழ்ப் படங்களைப் பார்த்திருப்பேன். முழுமையாக வாசிக்க

ஓவியர் மணியத்தின் புகழ்பெற்ற சினிமாக் 'கட் அவுட்'டுகள்!


எனது ஆங்கில வலைப்பதிவில் ஓவியர் மணியத்தின் 'கட் அவுட்'டுகள் பற்றியெழுதிய சிறு குறிப்பிது.
 
Oviyar Maniyam and His Famous Film Cutouts in Jaffna, Sri Lanka
 
In our childhood and teenage years, one of our entertainments was watching film cutouts erected in front of the Jaffna movie theatres.  கட்டுரையை முழுமையாக வாசிக்க
 

எனது ஆங்கிலப் பயணம் (My English Journey)


எனது புதிய  ஆங்கில வலைப்பதிவு  'vngiritharancorner' - 'My English Journey (எனது ஆங்கிலப் பயணம்') என்னும் தலைப்பில் எனது ஆங்கில வலைப்பதிவில் பதிவொன்றினை இட்டிருந்தேன்.  அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

When I think about English, I think about the late A.S. Kanagaratnam, known as 'ASK.' His house was located at Senior Lane, Jaffna. In fact, I attended his tuition classes during my G.S.E (A/L) studies while I was attending Jaffna Hindu College to enhance my English knowledge. I learned English grammar clearly from his classes.  After that, I pursued Architecture at the University of Moratuwa, Sri Lanka. The curriculum was in English medium. There was no choice but to immerse myself in reading all the  theoretical books related to Architecture. Books like Banister Fletcher's 'World Architecture' were voluminous. They contained numerous new words related to building, Architecture, Urban Planning, and Art. Immersing myself in reading these books indeed helped me improve my English proficiency. To read the full post -

Wednesday, January 3, 2024

'என்ன நினைச்சே நீ என்ன நினைச்சே' - 'சொக்கத்தங்கம்' படப் பாடல்!

அண்மையில் மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்ந் நினைவாக ஒரு பாடல். 'சொக்கத்தங்கம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலைப் பாடியிருப்பவர்கள் உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஶ்ரீராம்.
 
விஜயகாந்த்துடன் நடித்திருப்பவர் சவுந்தர்யா. மருத்துவப் படிப்பை உதறிவிட்டு நடிக்க வந்து வெற்றியீட்டியவர். ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டார். விளைவு விமான விபத்தில் பலியானார்.
 
இசை - தேவா. பாடல் வரிகள் - ஆர்.வி.உதயகுமார்.
 
நல்லதொரு பாடல். https://www.youtube.com/watch?v=PrwKFS4V42A

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்