Saturday, October 5, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்


இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
துளியென எம்இருப்பு இருப்பதும் எதனால்?
தொலைவுகள் பிரிக்கும் பெரு வெளியில்
அலையும் உயிரினம் இதுவரை அறியோம்.

விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.

Friday, October 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - அன்பே வாழ்வின் அடிப்படை!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.

உயிர்கள் இருப்பது அன்பின் வலிமையால்.
உணர்ந்து கொண்டால் இன்பமே இருப்பில்.
உணராது போனால் விளைவதே மோதல்.
உலகில் தினமும் பார்க்கின்றோம் இதனைத்தான்.

அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.

Wednesday, October 2, 2024

எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -

மயிலங்கூடலூர் பி. நடராசன்


எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் கட்டுரைகள் பலவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதை அவ்வப்போது கண்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியுமிருக்கின்றேன். தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப எழுதும் கட்டுரைகளைக் கூட மாற்றி எழுதுவதுமுண்டு. உதாரணத்துக்கு நல்லூர் இராஜதானி, யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிய அவரது கட்டுரைகளில் இவற்றைக் காணலாம். அவை பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமிருக்கின்றேன்.  

அண்மையில் அவர் தொகுத்து வெளிவந்த மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலும் இவ்விதமான தகவற் பிழைகளைக் கண்டேன்.அது இலங்கைத்  தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய அமைப்பான மறுமலர்ச்சிச் சங்கம் பற்றியது. அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:

"1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்  என்ற பெயரில் எழுத்தாளர் சங்கம் ஒன்றினை நிறுவிக்கொண்டனர்.  இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் எழுத்தாளர் சங்கம் இதுவெனலாம்.  இந்தச் சங்கத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியராகவிருந்த அமரர்  வை. ஏரம்பமூர்த்தியும் (ஈழத்துறைவன்), அமரர் இரசிகமணி கனகசெந்திநாதனும் முன்னெடுத்தனர். இவர்களோடு  அசெமு (அ. செ. முருகானந்தன்), திசவ (தி.ச.வரதாராசன்), ககமா (க.கா.மதியாபரணம்), கசெந (க. செ.நடராசா), சபச (ச.பஞ்சாட்சரசர்மா) அநக (அ.ந.கந்தசாமி) முதலானோரும் இணைந்து கொண்டனர்.  மறுமலர்ச்சிச் சங்கம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, 'மறுமலர்ச்சி' என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிடுவதெனத் தீர்மானித்தது."

இது அப்பட்டமான தவறான வரலாற்றுத் தகவல். எங்கிருந்து இத்தகவலைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. தானாகவே வரலாற்றை மாற்றத்தீர்மானித்து இவ்விதம் எழுதினாரோ தெரியவில்லை.

வ.ந.கிரிதரன் பாடல் - விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்

இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும் விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம் புரிந்திட முயற்சி செய்...

பிரபலமான பதிவுகள்