Monday, September 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: கணந்தோறும் பிறப்போம்.


 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

கணந்தோறும் பிறப்போம்!

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள்  கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

Sunday, September 15, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிப் பயணம்.



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


காலவெளிப் பயணம்!


முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிப் பயணம்.




இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


காலவெளிப் பயணம்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

Saturday, September 14, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!


 

இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில்  கேட்க - https://www.youtube.com/watch?v=XBZ2BLPV7Ac

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!



இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

நல்ல நாள்!

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

Friday, September 13, 2024

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -


6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்


 ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீரெனக் கோட்டைக்குப் போய் ஓவியம் வரைவதற்கு வேண்டிய சில பொருள்களை வாங்க வேண்டுமென்ற நினைவு வர, டாக்ஸி டிரைவரிடம் கோட்டைக்குப் போகும் படி உத்தரவிட்டான். ஏற்கனவே அவன் கொண்டு வந்திருந்த வண்ண மைகளும், ஓவியத் தாள்களும் தீர்ந்து போயிருந்ததால் அவன் அவற்றை இன்று சற்று அதிகமாகவே வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக ஸ்ரீதரின் பொழுதுபோக்குக் கலைகளில் சித்திரம் எழுதுவது முக்கியமான ஒன்றேயாயினும் இன்று அவன் அதில் இவ்வளவு நினைவாயிருந்ததற்குப் புதிய காரணம் ஒன்றும் இருக்கிறது.  தன் காதலி பத்மாவின் படமொன்றைத் தன் கையால் எழுத வேண்டுமென்று அவன் “ஐஸ்கிறீம் பார்லரி”ல் தனக்குள் முடிவு செய்திருந்ததே அது.

பத்மாவின் மது விழிகளும், அவற்றுக்கு மேலெல்லையாகக் கோதண்டம் போல் விளங்கிய அவளது வளைந்த புருவங்களும், அப்புருவங்களுக்கும் அவளது வண்டு விழிகளுக்குமிடையே துடிதுடித்துக் கொண்டிருந்த மயிரடர்ந்த பூவிதழ் போன்ற இமை மடல்களும் அன்று அவனை முன்னெப்போதுமில்லாத அளவுக்குக் கவர்ந்திருந்தன. காதல் வயப்பட்ட ஓர் ஆணின் கண்களிலே, ஒரு பெண்ணின் அழகு பார்க்குந்தோறும், புத்தெழில் பெற்றுப் பொலிகிறது. நல்ல கவிதையை வாசிக்க வாசிக்க, அதில் புதிய நயங்கள் தோன்றுவது போலக் காதற் கன்னியையும் பார்க்கப் பார்க்கப் புதிய அழகுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. “அவள் புறங்கை எவ்வளவு அழகாயிருக்கிறது! அவள் விரல்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன! அவள் நெற்றியில் காணப்படும் பூனை மயிர் கூட எவ்வளவு அழகு! நேற்று நான் அவற்றைக் காணாமல் கண்ணிருந்தும் குருடனாயிருந்ததற்குக் காரணம் என்ன? அவள் பால் எனக்குள்ள காதல் போதிய அளவு வளர்ச்சி பெறாததா?  அப்படியானால், நான் குற்றமுடையவனல்லவா?” என்று கூடக் காதலர்கள் தாபமடைவதுண்டு. பத்மாவைப் பொறுத்த அளவில் ஸ்ரீதரும் அவளிடத்துத் தினந்தோறும் ஒரு புதிய அழகைக் காணக் கூடிய காதற் பரவச நிலையிலேயே இருந்தான். “ஐஸ்கிறீம் பார்லரில் வெகு அருகில் அமர்ந்து அவளது அழகைப் பல கோணங்களிலிருந்தும் அள்ளிப் பருகிய அவன், அவளைத் தெவிட்டாத பேரழகை ஓவியமாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். அந்த ஆசை தான் அதற்கு வேண்டிய பொருள்கள் யாவற்றையும் உடனே சித்தம் செய்யும்படி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. கோட்டைக்குப் போய் ஒன்றுக்குப் பதில் நாலு கடைகளில் ஏறி இறங்கி, அவற்றை வாங்கிக் கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்த பொழுது சரியாக மணி இரண்டாகி விட்டது. வேலைக்கார சுப்பையா கேட்டைத் திறந்து டாக்ஸியை பங்களா வளவுக்குள் அனுமதித்து, அதிலுள்ள சாமான்களை எடுக்க, ஸ்ரீதர் டாக்சிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பங்களாவுக்குள் நுழைந்த பொழுது, அங்கே அவனை வரவேற்க, இன்பமான செய்தி ஒன்று காத்திருந்தது.

Wednesday, September 11, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காதலை உணர வைத்தாய்!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க : https://www.youtube.com/watch?v=PUWeFIBBsek

காதலை உணர வைத்தாய்!  

 ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

பார்வையில் எவ்விதம் இவ்வித உணர்வுகள்
படம் விரித்தன. படைப்பின் அற்புதமே.
நெஞ்சின் ஆழத்தே சென்று உறைகின்றன.
வஞ்சியுன் வருகையால் இதை உணர்ந்தேன்.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...