வ.ந.கிரிதரன் பாடல்: விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது - SUNO 5.5
டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
திரையில் நடிப்பவர் நடிகர் உணர்வாய் தம்பி.
உரைத்திடும் எவையும் உண்மை அல்ல நடிப்பே.
உண்மை இது உணர்ந்து நடைபோடு தம்பி.
உயர்வு நிச்சயம் அடைந்திடுவாய் உணர்வாய் தம்பி.
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
சமநீதி, சமவுரிமை, பகுத்தறிவு. அவசியம் தம்பி.
எமதுநிலை உயர்வதே உன் குறிக்கோள் தம்பி.
உழைப்பு இல்லை என்றால் உயர்வும் இல்லை.
கல்வி இல்லை என்றால் காலமும் வீண்தான்.
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
சொல்லும் செயலும் ஒன்று இல்லை எனில்
அல்லர் அவர் தலைவர் அறிவாய் தம்பி.
காலம் சென்றால் மீண்டும் வராது தம்பி.
ஞாலம் சிறக்க சிந்திப்பாய், செயலாற்று தம்பி.
விம்பங்களை விட்டு வெளியில் வாடா தம்பி.
நம்பிக்கை உன்மேல் வைத்து நடைபோடு தம்பி!
No comments:
Post a Comment