Monday, September 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: கணந்தோறும் பிறப்போம்.


 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

கணந்தோறும் பிறப்போம்!

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள்  கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

இருப்பும் இங்கு சார்பே உணர்வோம்.
இங்குஎம் இருப்பும் இதுபோல் துளியே,
இதற்குள் கூடிப்பெருகி கும்மாளம் அடிப்போம்.
இதைநாம் புரிந்துவிடின் இன்பமே நிலைக்கும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

காலத்தூடு விரையும் இருப்பில் கணந்தோறும்
கலங்கள் பிறக்கும். நாமும் பிறப்போம்.
கணந்தோறும் பிறக்கும் இருப்பை அறிவோம்.
களிப்பில் பொழுதை நிறைத்துத் தொடர்வோம்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

No comments:

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!

'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பி...

பிரபலமான பதிவுகள்