Thursday, September 5, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.


இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன் சிறகடிப்பில் உள்ளது
உன் படைப்பின் மகத்துவம்.
பறத்தல் என்பது  சுலபமல்ல.
பறத்தல் என்பது தொழில்நுட்பம்.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

காற்றற்ற வெளியில் பறத்தல்
குறுஞ்சிட்டே உன்னால் முடியாது.
காற்றை வைத்தார் வெளியே..
கடுகிப் பறக்க வைத்தார் அதனூடே.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

சிறகினூடு விரையும் காற்று.
சிறகடித்துப் பறக்க வைக்கும்.
கிறங்க வைத்துப் பறக்கின்றாய்.
கூறுகின்றாய் இருப்பின் புதிரினை.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன்னுடலும் உனது செயலும்
சின்னஞ்சிறு சிட்டே இருப்பின்
புதிர் அவிழ்க்கும் கூறு.
பெருஞான வெளிப் பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

No comments:

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!

'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பி...

பிரபலமான பதிவுகள்