Tuesday, September 17, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.



இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

ஒழுங்குள்ள வாழ்வில் இன்பம்  உண்டு.
ஒழுங்குதனை என்வாழ்வில் ஒழுகிட அருள்வாய்.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

இருப்பறிந்து இருப்பை நகர்த்தும் போக்குதனை
இவனுக்கு அருளிடு. அதுபோதும்.அதுபோதும்.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

உயிர்நேயம் மிக்கவனாய் உலகில் வாழ்ந்திடும்
பக்குவம் வளர்த்திடு. பரிணாமம் வழங்கிடு.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

No comments:

த.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ் எழுதிய 'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' நூலுக்கு தமிழ் இலக்கியத்தோட்டத்தின் அல் - புனைவுக்கான (2024) விருது!

'எனக்குள் மணக்கும் எம்ஜிஆர்' என்னும் நூலை தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது அவருடன் இறுதிவரை பணி புரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான  த.பி...

பிரபலமான பதிவுகள்