Monday, September 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: பூவுலகின் குழந்தைகள் நாம்!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

 

பூவுலகின் குழந்தைகள் நாம்!

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

பிரிவினைகள் அற்ற வாழ்வே இன்பம்.
எரியும் உலகை இல்லாது ஒழிப்போம்.
புரிந்து கொண்டே பய    ணம் தொடர்வோம்.
தெரிந்து கொள்வோம் பிறப்பின் பயனை.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

வாயுக் குமிழியென வெளியில் விரையும்
ஓயுதல் அற்ற இயக்கத்தில் பூமி.
இருப்பதை உணர்ந்தால் மோதல் இல்லை.
விருப்புடன் வாழ்வை அணுகுவோம் உண்மை.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

அன்பு மலரால் நிறைந்த பூங்கா
என்றே உலகை மாற்றி வைப்போம்.
தின்று இன்புற்று இருப்பதுடன் வாழ்க்கை
நின்று விடுவதில்லை என்பதைப் புரிவோம்.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

இனம், மதம், மொழிப் பிரிவுகள்
சனத்தின் மத்தியில் தேவையே இல்லை.
அனைவரும் ஓரினம் என்னும் உண்மையை
நினைவில் வைத்தே இருப்பைத் தொடர்வோம்.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: காட்சியும் சித்(த)து விளையாட்டும்!

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI யு டியூப்பில் கேட்டுக் களித்திட: https://www.youtube.com/watch?v=snzGyWR-BwE காட்சியும் சித்(த)து விள...

பிரபலமான பதிவுகள்