Wednesday, September 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பின் சிறப்பு!



இசை & குரல் : AI SUNO | ஓவியம்; AI


படைப்பின் சிறப்பு!


இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

படைப்பில் குறைகள் பல.
படைத்தவரின் மென்பொருள் வழுக்கள்.
அடிப்படையில் உயிர்கள் அனைத்தும்
உருவாவது வடிவிலொத்த உயிரணுக்களில்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

சின்விதை தளைக்கும் விழுதுவிடும்
பெருஆல் விருட்சமென புவியில்.
உயிர்கள் நிறைந்து கிடக்கும்.
பிரமிக்க வைக்கும் இவ்வுலகம்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

அந்தரத்தில் புட்களின் வாழ்க்கை.
எந்தக் கணத்திலும் அழியலாம்.
இருந்தும் தப்பிப் பிழைக்கும்
உயிர்கள் படைப்பின் திறனல்லவா?

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

சுற்றியிருக்கும் உலகை அறிவோம்.
சுற்றியிருக்கும் காலவெளி புரிவோம்.
கற்பதால் தெளிவு காண்போம்.
அற்புதமே இருப்பென வியப்போம்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

No comments:

தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!

திராவிடம் என்னும் சொல் தமிழம் த்ரமிளம், த்ரவிடம், திரவிடம்,  திராவிடம் என்னும் வட சொல்லாக மீண்டும் தமிழுக்கு வந்த சொல்.இந்தியாவின் பூர்வ குட...

பிரபலமான பதிவுகள்