Tuesday, February 6, 2024

Poem: Dimensional Barrier and the Question of God! or You Are My God!


எனது ஆங்கில வலைப்பதிவில் Dimensional Barrier and the Question of God! or You Are My God! என்னும் தலைப்பிலொரு கவிதையினைப் பதிவிட்டுள்ளேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.

Poem: Dimensional Barrier and the Question of God! or You Are My God!

Below us, there are Flatlanders.
Visiting their world is my preferred hobby.
Differences in dimensions benefit us,
because of this,
the world of Flatlanders always entrances me.
The reason behind this bliss is the superiority complex.
It's our weakness as well.
Is it not enough for my bliss or entrancement?

Monday, February 5, 2024

எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு! அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?


எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு'  என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.

Friday, February 2, 2024

'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -


நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;

"விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."


தற்போதுள்ள அரசியல் சூழல் என்னைப்பொறுத்தவரையில் நடிகர் விஜய்யுக்குச் சாதகமான பல விடயங்களைக் கொண்டுள்ளது.

Thursday, February 1, 2024

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் எனது நூல் பற்றிய விமர்சனக் குறிப்புகளை பெப்ருவரி தாய்வீடு  பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். இது அண்மையில் 'டொராண்டோ'வில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கட்டுரை நூல் பற்றி அவர் வாசித்த கட்டுரையின் எழுத்து வடிவம்.  அருண்மொழிவர்மனுக்கு எனது நன்றி.  

மேற்படி விமர்சனக் குறிப்பில் அவர் பல விடயங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவை பற்றி விரிவாக விரைவில் என் பார்வையில் கருத்துகளை முன் வைப்பேன். இங்கு இக்கட்டுரைத்தொகுப்பை என் அபிமானக் கவி பாரதிக்குச் சமர்ப்பித்தது பற்றிய அவரது விமர்சனக் குறிப்புக்கான என் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

Sunday, January 28, 2024

Serial Novel: Modern Vikramathithan - Chapter Two: Urban Rain and Manoranjitham!


எனது 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல்' ஆங்கிலத்தில் எனது வலைப்பதிவில் வெளியாகின்றது. அதன் இரண்டாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது. இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்.

Serial Novel: Modern Vikramathithan - Chapter Two: Urban Rain and Manoranjitham!

Lightning makes a line through the city,
engulfing it in darkness.
Thunder roars.
The rain opens up like a scene
in a silent movie.

I am looking at the rain from a nest in the concrete tree. Like scenes from a silent movie, the rain appeared to me. Rain is one of my favorite natural events. Watching it is one of my favorite hobbies. Enjoying rain is a kind of sweet and unique experience.

Friday, January 26, 2024

பவதாரணி: 'மயில் போல பொண்ணு ஒன்னு!"


இளமையில் மரணம் கொடிது. பாடகி பவதாரணி இன்னும் நீண்ட காலமிருந்து இசையுலகில் மேலும் பல சாதனைகளைச் சாதித்திருக்க வேண்டியவர். 

'பாரதி' பாடத்தில் பாடிய 'மயில் போல' பாடல் மூலமே என் கவனத்தை  ஈர்த்தவர். இப்பாடலுக்காகச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். தந்தையின் இசையமைப்பில் இவ்விருதை இவர் பெற்றதும் முக்கியத்துவம் மிக்கது.

அவர் மறைவால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் இசைஞானி மற்றும் குடும்பத்தவர் , இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.


அவர் நினைவாக 'மயில் போல பொண்ணு ஒன்னு'

- https://www.youtube.com/watch?v=QjDek8QpnWc

Tuesday, January 23, 2024

Serial Novel: Modern Vikramathithan! Chapter One: I am ,Vikramathithan, speaking!


எனது  'நவீன விக்கிரமாதித்தன்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எனது ஆங்கில வலைப்பதிவில் வெளியிடத்  தொடங்கியுள்ளேன். முதலாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.  இதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்.

Serial Novel: Modern Vikramathithan!

Chapter One: I am ,Vikramathithan, speaking!

My name is Vikramathithan. people who know me well even call me  'Modern Vikramathithan'. My short name is Vikraman who never get tired. Like vikrmathithan without tiredness climbs up the murungai tree get the dead body and how he gets the body while descending the tree he never get tiredness. each time he faces failure, that doesn't stop him from trying again and agian.  In that sense  Iam like him. that's why my close friend call me 'Naveena Vikramathiththan' 'Naveena' meens in Tamil 'Modern'. I never get tired trying new things, failed  ones. in fact if you think during these circumstances , I feel happy, that would be a nice thinking, I think. I don't have any objections for that.

I have a great desire to think,appreciate and read about existence. Our existence in the universe is not only great but also trifle too. thinking gives me happiness. thinking gives me understanding. thinking makes things ckear.

To read the full chapter

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...