Friday, July 26, 2024

சுயமரியாதை இழக்காதே தோழா! - வ.ந.கிரிதரன்


- இசை & குரல்: AI SUNO  -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=7sTQsfrXv-o&feature=youtu.be

சுயமரியாதை இழக்காதே  - வ.ந.கிரிதரன் -

காலப்பெருங்கடலில் சிறு துளி
ஞாலத்தில் நம் இருப்பு.

சுயமரியாதை இழக்காதே  ஒருபோதும் தோழா.
சுயமரியாதை இழக்காதே ஒருபோதும்  தோழா!
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
தோழா. ஒரு போதும்.

உனது நோக்கில் தெளிவிருந்தால்
உனது நோக்கில் உண்மையிருந்தால்
ஊர் கூடி எதிர்த்தாலும்
உருக்குலைந்து போகாதே.
உறுதியுடன் எதிர்த்து நில். தோழா!
எதிர்த்து நில்.
எதிர்த்து நின்றால் உன்
எதிர்காலம் ஒளிமயமாகும்.
ஆம். தோழா!
எதிர்காலம் ஒளிமயமாகும்.

Thursday, July 25, 2024

கல்லுண்டாய்ப் பயணங்கள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல் : AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=vMKKhohyGt0

கல்லுண்டாய்ப் பயணங்கள்!  - வ.ந.கிரிதரன் -

கல்லுண்டாய் வீதியில்
காலையும் மாலையும்
பயணிப்பேன்.சைக்கிளில்
களிப்பூட்டும் பயணங்கள்
என்
கல்லுண்டாய்ப் பயணங்கள்.

காற்று வீசும்.
கீழ் வானின் கதிர் உதிக்கும்.
குருவிகள் காலையை வரவேற்கும்,
வாழ்த்துப்பா இசைக்கும் பொழுது

நான் பயணத்தைத் தொடங்குவேன்.
நகர் நோக்கிய பயணம்
 யாழ்ப்பாண
நகர் நோக்கிய பயணம்.

Wednesday, July 24, 2024

மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -



இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை எனது முதலாவது கவிதைத்தொகுப்பான , மங்கை பதிப்பக வெளியீடாக கனடாவில் வெளியான 'எழுக அதிமானுடா' தொகுப்பில் உள்ளது.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DgKD70RyBW0

 
மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -
 
பனிமழை பொழிந்து,
பாதையெல்லாம் ஒரே சறுக்கல்.
ளிரோ உடலைக்
குற்றியபடி ஒரே
குதியாட்டம்.

Toronto' மாநகரின்
அழகானதோர் அவென்யு
யூனிவர்சிட்டி அவென்யு.
அகன்ற சாலை,
அதன் நடுவே
அழகான் சிலைகள்,
நீரூற்றுகள், மரங்கள்..

காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

எனது இக்கவிதை பதிவுகள், திண்ணை இணைய  இதழ்களில் வெளியானது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=KQHxnAmKGsQ
 
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!  - வ.ந.கிரிதரன் -
 
விண்ணில் புள்!
மண்ணில் புள்!
வனத்தில் புள்!
மனத்தில் புள்!

புள்ளினம் பறந்து செல்லும்.
உள்ளமோ சிறகடிக்கும்.

அவற்றை
அவதானிப்பதில்
அளப்பரிய இன்பம்.
புல்லரிப்பில் களிக்குமென்
உள்ளம்.

இறகசைப்பின் விரிவு கண்டு
ஒரே பிரமிப்பு!
அழுத்த வேறுபாடுகளை 
அவை கையாளும் இலாவகம்!

எத்துணை அறிவு!

புள்ளினம் தந்திரம் மிக்கவை.
சிறகசைத்தலற்று விண்ணோக்கி
அல்லது மண் நோக்கி விரைதலில்
அவை பாவிக்கும் அறிவின் ஆழம்..
பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்…
இவை கண்டு வியக்காமல் ஒருவரால்
எவ்விதம் இருக்க முடியும்?

கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=_IO-N784Mf0


கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று!  - வ.ந.கிரிதரன் -
 
ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.

அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.

ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.

தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்! - வ.ந.கிரிதரன் -



-


  இசை & குரல்: AI SUNO -

- அன்னையார் மறைவினையொட்டி எழுதிய கவிதை. யு டியூப்பில் கேட்க
https://www.youtube.com/watch?v=AnT3FFZBQdo


தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?

நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ?

இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ?

இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!

உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான எனது கவிதை. எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பிலும் உள்ளது. YouTube இல் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=eb5DagT_0lA

காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -

என் வெப்ப மண்ணை,
மேல் விரியும்
இரவுவானை,
சுடரை, நிலவை
நான் நீங்கியது
நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவு அசை போடுமொரு
மாடுமாகினேன்.

ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கான் உயிருமாகினேன்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...