Friday, April 3, 2026
மகாகவி பாரதியார் பாடல் - பாரத சமுதாயம்
மகாகவி பாரதியாரின் 'பாரத சமுதாயம்' கவிதையில் எனக்குப் பிடித்த வரிகளைக்கொண்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். என் குரலில் இசையமைத்துப் பாடியிருப்பவர் செயற்கை நுண்ணறிவாளர் SUNO 5.5
மகாகவி பாரதியார் பாடல் - பாரத சமுதாயம்
இசை & வ.ந.கிரிதரனின் குரலில் : SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ ?மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க!
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க!
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!
Subscribe to:
Post Comments (Atom)
மகாகவி பாரதியார் பாடல் - பாரத சமுதாயம்
மகாகவி பாரதியாரின் 'பாரத சமுதாயம்' கவிதையில் எனக்குப் பிடித்த வரிகளைக்கொண்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். என் குரலில் இசையமைத்துப் பா...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
No comments:
Post a Comment