Monday, April 20, 2026

வாசிப்பும், யோசிப்பும்: நவீனக் கவிஞர்களும், மரபுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் -


எந்தத்துறையில் படிப்பவர்களும் முதலில் அந்தந்தத் துறையின் ஆரம்ப வரலாற்றைப்படிப்பார்கள். பின்னரே அதன் தற்கால விடயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் நம் கவிஞர்களுக்கு மட்டும் இந்தக் கவலை இல்லை.

இவர்கள் கவிதையின் வரலாறு பற்றிக் கவலைப்படுவதில்லை. மரபுக்கவிதை பற்றி குறைந்தது அறிந்து கொள்வதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ முயற்சி செய்வதில்லை.

மரபுச் சூத்திரங்களுக்குள் சிக்கிச் சுழல்வதற்கு நானும் விரும்புவதில்லை. நவீனத்துவம், பின் நவீனத்துவம் எல்லாம் மரபுகளை உடைத்தெறிந்தவை. 

ஆனால், அதற்காக நான் மரபுக்கவிதை பற்றி அறியத்  தேவையில்லை என்று அடம் பிடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
அகணி சுரேஸ்
கவிஞர்கள் மரபுக் கவிதை பற்றி அறிந்திருப்பது உண்மையில் ஆரோக்கியமான விளைவையே தரும். அவர்கள்தம்  கவிதைகளில்  , அவற்றில் பாவிக்கப்படும் மொழியில் அவர்களின் படைப்பாற்றலை உயர்த்த அது வழி  வகுக்கும் என்பது என் திடமான எண்ணம். கூடவே பழந்தமிழ் இலக்கியங்களை உணர்ந்து , புரிந்து , சுவைத்திடவும் அது வழி வகுக்கும்.

இன்னுமொரு காரணம் நவகாலக் கவிஞர்கள் மரபுக் கவிதை பக்கம் தலை காட்டாமல் இருப்பதற்கு என்னவென்றால் அது பற்றிய எளிய நூல்கள் அரிதாகவே கிடைக்கின்றன. அவற்றையும் தேடித்தான் கண்டறியும் நிலை.  மரபுக் கவிதை பற்றிய விளக்கங்களை எவருக்கும் புரிய வைக்கும் நூல்கள் அவசியம்.

இதனை உணர்ந்து எழுத்தாளர் அகணி சுரேஸ் எழுதியிருக்கும் நூல்தான் அண்மையில் அவர் வெளியிட்ட  'மரபுக் கவிதை எழுதலாம் வாருங்கள்'

அவரே வடிவமைத்து , சாமந்தி பதிப்பகம் மூலம் வெளியிட்ட நூல்.

மரபுக் கவிதையை எவரும் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள , எளிமையாக எழுதப்பட்ட நூல்  நூலின் நோக்கத்தை நிறைவு செய்கின்றது.

நன்கு வடிவமைக்கப்பட்ட நூலின் உள்ளடக்கத்தின் தட்டச்சில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். தலைப்புகள்,  உப தலைப்புகள், உட் பிரிவுகள், உதாரணங்களை வேறு படுத்திப் பார்ப்பதில் சிரமங்களைத்  தரும் வகையில் தட்டச்சு இருப்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இது எதிர்காலப்  பதிப்புகளில் களையப்பட வேண்டியது அவசியம்.

மரபுக் கவிதையை , அதன் பிரிவுகளை இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருக்கின்றார் அகணி சுரேஷ்.  ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா,  விருத்தம் போன்ற பிரிவுகளில் கவிதைகளை எழுதுவது எப்படி என்பதை இலகுவாக விபரிக்கின்றது நூல்.  

சீர், அசை , தொடை,  அசை பிரித்துப்பார்த்தல்   போன்றவற்றை எவரும் எளிதாகப்  புரிந்து கொள்ளும் வகையில் , உதாரணங்களுடன் விளக்கியிருக்கின்றார் ஆசிரியர்.

நல்லதொரு நூலைத் தந்ததற்காக அகணி சுரேஷுக்கு வாழ்த்துகள். நம் காலத்துக் கவிஞர்களுக்கு மட்டுமல்ல எவருக்கும்  கவிதை பற்றிய புரிதலை அதிகரிக்க நிச்சயம் உதவும் நூல். அதற்காக அகணி சுரேஸுக்கு வாழ்த்துகள்.

No comments:

கலாமோகனின் 'துவாரம்' சிறுகதைத்தொகுப்புப் பற்றி....

நேற்று எழுத்தாளர் கற்சுறாவிடமிருந்து எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம' சிறுகதைத்தொகுப்பினைப் பெற்றுக்கொண்டேன். அதனை வெளிப்படுத்தும் புக...