Thursday, April 16, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு! வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5!


வ.ந.கிரிதரனின் பாடல் :வரலாறு

வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி


வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் வரலாறே வரலாறு.
உலகின் வரலாறு இவர்தம்  வரலாறே.
உழைப்பவர்  வேர்வையும் , உழைப்பும் இங்கு
உண்மையான வரலாற்றை எழுதி வைக்கும்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உண்மை வரலாற்றை அறிவது நம் கடமை.
மண்ணின் வரலாறு உழைப்பவரின் வரலாறே.
மன்னரின் வரலாறு  வரலாறு அல்ல.
உணர்வோம்.   உள்ளத்தில் அவரைப்  போற்றுவோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.உழைக்கும் சக்திகள் , உற்பத்தி சக்திகள்
உறவே  உண்மை வரலாற்றின் அடிப்படை.
சமுதாய அமைப்புகளைச் சமைப்பவர் மக்களே.
மாடாய் உழைப்பவரும் உழைக்கும் மக்களே.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உண்மைதனை நாம் அறிவதும் அவசியமே.
உணர்வோம்.  உழைப்பவரை நாம் போற்றுவோம்.
மாடாய் உழைப்பவரே மண்ணின் நாயகர்.
மனத்தில் இருத்துவோம். மதிப்பால் உயர்த்துவோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

No comments:

மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி

மகாகவி பாரதியாரின் பாடல் வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது  SUNO 5.5  AI  ஓவியம்:  சாட் ஜிபிடி   வழி வநகி மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளா...