Thursday, April 30, 2026
வ.ந.கிரிதரனின் பாடல் - 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்'! வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி!
வ.ந.கிரிதரனின் குரலில் 'உலகக் கவிஞன் கணியன் பூங்குன்றனார்' பாடலை இசைத்துப் பாடியிருப்பது SUNO 5.5 AI டிஜிட்டல் ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் கணியன் பூங்குன்றன்.
கணியன் பூங்குன்றனார் உலகக் கவிஞன்
நான் என்று அவன் கருதவில்லை.
நாம் என்றே அவன் சிந்தித்தான்.
குறுகிய சிந்தனைக் கவிஞன் அல்லன்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்எல்லைகள் அற்ற உலகை வேண்டினான்.
நல்லதை நினைத்தான். நாம் அனைவரும்
பூமித்தாய்ப் புதல்வர் புதல்வியர் என்றே
எண்ணினான் அதை எழுத்தில் வடித்தான்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
உலகத்து மானுடர் நாம் உறவினர்
உள்ளத்தில் வைப்போம் என்றான் நம்பினான்.
உள்ளம் பரந்ததை வெளிப்படுத்தும் கூற்று
உண்மை இதை மனத்தில் வைப்போம்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஓயாது பெருங்குரலில் எடுத்துக் கூறுவோம்.
தீது ஒழியும் நன்று மலரும்
பிரிவு அற்ற உலகு விரியும்.
இந்த உலகம் என்னுடையது என்று
அன்று சொன்னான் உலகக் கவிஞன்
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில் : சில தருணங்கள்!
வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில் : சில தருணங்கள்! இசைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி இருப்பில் சில தருணங்க...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
No comments:
Post a Comment