Monday, April 27, 2026
வ.ந.கிரிதரனின் பாடல்: காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5
ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வழி வநகி
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கெல்லாம் எடுத்துரைக்குமே
எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்குமே.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகுமே.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகுமாம்.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமேகுருவிகள் வாழ்த்துப் பா இசைக்குமாம்.
குளங்களில் தாமரை இதழ் விரிக்குமாம்.
தண் கதிர் பரப்பும் கதிர்தனின்
தண் அணைப்பில் உலகம் விழிக்குமாம்.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே.
இருள் நீங்கும் ஒளி பிறக்குமாம்
இருப்பில் இடர் நீங்குமாம்.
இடர் நீங்கிக் களி பிறக்குமாம்.
இதுதான் காலை கூறும் அறிவுரையாம்.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே.
வாழ்க்கையில் சவால் கண்டு தளராதீர்.
வளம் வரும்., நலம் மிகுமே.
பகல் பிறப்பதும் அது போல்தானே.
பாரில் எங்கும் ஒளி பிறக்குமே.
காலைக் கதிரொளி கிழக்கில் தெரியுமே.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்குமே.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில் : சில தருணங்கள்!
வ.ந.கிரிதரன் பாடல், வ.ந.கிரிதரன் குரலில் : சில தருணங்கள்! இசைத்துப் பாடுவது SUNO 5.5. டிஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி இருப்பில் சில தருணங்க...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
No comments:
Post a Comment