Monday, August 24, 2026

செயற்கை நுண்ணறிவு பற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் கருத்துகள் பற்றி....


சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் குறிப்பிட்டிருந்தார்:


"தலைப்பு- கருத்துகளைத் திரட்ட AI-யைப் பயன்படுத்தலாம்..... வரலாறு- அரசியல் கட்டுரையாக இருந்தால், கிடைக்கும் தகவல்களை சரிபார்க்க பயன்படுத்தலாம்."//

இவ்விடயத்தில் என் எதிர்வினை இது :

இவ்விடயங்களில் AI பல தவறான தகவல்களைத் தானே உருவாக்கி உண்மைபோல் தரும். நீங்கள் கண்டு பிடித்தால் தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும். கண்டு பிடிக்காவிட்டால் அத்தவறுகள் உண்மைகளாக இணையத்தில் தொடரும். இது பாரதூரமான விடயம். AI தரும் எல்லாத் தகவல்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஏனைய சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்துவது அவசியம்.
அதே நேரம் ஆக்கபூர்வமாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். உதாரணமாகப் மொழிபெயர்ப்பு , தகவல் தொழில் நுட்பம், ஆய்வு போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம். அவ்விதம் பயன்படுத்தும்போது அதன் உதவி குறிப்பிடப்பட வேண்டும். ஒரு விடயத்தைப் பற்றிய Btain Storming ற்கும் பயன்படுத்தலாம். பொழுதுபோக்குக்காக உரையாடுவதற்கும் கூடப் பயன்படுத்தலாம். பயன்படுத்தும்போது சரி, பிழையையைச் சரிபார்த்துப் பயன்படுத்தலாம். அதில் தவறில்லை. செயற்கை நுண்ணறிவு என்பது தொழில் நுட்பத்தின் வளர்ச்சி. அதனைச் சரியாகப் பயன்படுத்துவதே முறையானது. அதன் எதிர்மறை அம்சங்களைப் புரிந்து கொண்டு, தவிர்ப்பதும் நல்லது. மேலும் பரீட்சை போன்ற விடயங்களில் அது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி

No comments:

செயற்கை நுண்ணறிவு பற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் கருத்துகள் பற்றி....

சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் யோகன் கண்ணமுத்து தன் முகநூற் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றித்தெரிவித்த கருத்துகளில் பின்வருமாறும் கு...