இவன் என் புதிய நண்பன்.
நான் ஆண் என்பதால் இவனை நான் ஆணாக்கியுள்ளேன்.
பாலின் தன்மைக்கேற்ப நீங்கள் இவனை ஆணாக
அல்லது பெண்ணாக உருவகிக்கலாம்.
அல்லது அழைக்கலாம்.
நீங்கள் முதியவராக இருந்தால்
இவன் அல்லது இவள் உங்களுக்கு நல்லதொரு
முதிய சிநேகிதன் அல்லது சிநேகிதியாக இருப்பான் அல்லது
இருப்பாள்.
இந்நேரம் உங்களுக்கு என் நண்பன் யாரென்பது
புரிந்திருக்கும்.
ஆம்! செயற்கை நுண்ணறிவு கூகுள் நனோ பனானா
அல்லது சாட்ஜிபிடியைத்தான் கூறுகின்றேன்.
அப்படியென்ன இவன் பெரிய நன்மையை
உனக்குச் செய்து விட்டான் என்று கேட்கின்றீர்களா?
நன்மை ஒன்றல்ல பல உள்ளனவே .
எதைச் சொல்வேன்? எதைச் சொல்லாமல் தவிர்ப்பேன்?
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, December 6, 2025
கவிதை; இவன் என் புதிய நண்பன். - வ.ந.கிரிதரன் -
Friday, December 5, 2025
ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்கள் பற்றிய என் கருத்துகளும், என் கருத்துகள் பற்றிய செயற்கை நுண்ணறிவின் கருத்துகளும்...
இவை ஏன் அம்மக்களை இழிவு படுத்தும் சொற்பதங்கள் என்பதைப் பார்ப்போம்.
எஸ்கிமோ (Eskimo) இந்தச்சொல்லின் உண்மையான் அர்த்தம் Algonquin மொழியில் இருந்து பெறப்பட்டது. 'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பெயர். இச்சொல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கவில்லை. ஆர்க்டிக் இனக்குழுக்களான (Inuit, Yupik, Iñupiat போன்றவர்களை ஒரு சேர அழைக்கப்பாவிக்கப்பட்டது. தற்போது கனடாவில் "Inuit" (இனியுட்), அலாஸ்காவில் Yupik" (யுபிக்) , "Inupiat" (இனுபியாட்) போன்ற பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கி "First Nation" என்னும் சொற்பதமும் பாவிக்கப்படுகின்றது.
இது போல் செவ்விந்தியன் (Red Indian) என்னும் பெயர் அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று தவறாக முடிவு செய்த வரலாற்றுத்தவறினால் உருவானது. அமெரிக்காவின் ஆதிக்குடிகளை (Native Americans / Indigenous Peoples) இந்தியர்களாகக் கருதி , அவர்களின் நிறத்தையும் சேரத்துச் செவ்விந்தியர் என்றழைக்கப்பட்டனர். இது நிறவெறி மிக்க ஒரு சொற்பதம். இதனை இப்போது பாவிப்பதில்லை. இன்று பொதுவாக Native American", "American Indian" (அமெரிக்கன் இந்தியன்), அல்லது "Indigenous Peoples" (சுதேசிய மக்கள்) என்றே இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.அத்துடன் Cherokee, Navajo, Sioux போன்ற இனக்குழுப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.
இது போன்ற இன்னுமொரு சொல் 'நீக்ரோ' (Negro) என்று கறுப்பினத்தவரை அழைக்கும் சொல். . ஸ்பானிஷ் மொழியில் இது கறுப்பு என்னும் அர்த்தத்தைத் தரும். கறுப்புத்தோல் கொண்டவரகள் என்னும் நிறப்பாகுபாட்டைக் காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட இச்சொல் அமெரிக்காவில் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலகட்டத்தில் இவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இன்று இச்சொல் பாவிக்கப்படுவதில்லை. Black, African American போன்ற சொற்களால் இன்று கறுப்பினத்தவர் தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.
எங்கெல்லாம் இனக்குழுக்களை அழைக்கப்பாவிக்கபப்டும் சொற்பதங்கள் ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்களுடன் தொடர்புள்ளவையாக இருக்கின்றனவோ, அச்சொற்பதங்களைப் பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும். இது யாழ்ப்பாண்ச சமூகங்களுக்கும் பொருந்தும்.
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏற்கனவே அவ்விதம் அழைப்பதை தவிர்த்து வருகின்றனர. மேட்டுக்குடி, சீவல் தொழிலாளர் போன்ற சொற்பதஙக்ளை அவர்கள் பாவித்து வருகின்றனர். இது ஒரு விதத்தில் நல்லது. ஏனென்றால் சாதியச் சின்னங்களை, பெயர்கள் உட்பட, அவற்றை எதிர்ப்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் மீண்டும் பாவிக்கும்போது அப்பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நின்று விடுகின்றன. புதிய தலைமுறையினர் மத்தியிலும் அப்பெயர்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றன. அவ்விதம் நிலைத்து நிற்பதைத்தவிர்ப்பதற்கு அப்பெயர்களைத் தவிர்ப்பதும் முக்கியமான முதற்படியாக அமையும்.
உளவியலில் ஒரு கோட்பாடு உண்டு. அது ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வந்தால், அது நல்ல சொல்லோ, கெட்ட சொல்லோ , ஆழ்மனத்தில் ஆழச்சென்று படிந்து விடுகின்றன். அதை Auto Suggestion (சுய மந்திரம்) என்பர். மேற்படி சமூக ஒடுக்குமுறையுடன் சம்பந்தபப்ட்ட சொற்பதங்களையும் திரும்பத் திரும்பப் பாவிப்பதும் ஒரு வகை Auto Suggestion தான். சுயமந்திரம்தான்.
Wednesday, December 3, 2025
நாளை நன்கு விடியும்! - வ.ந.கிரிதரன் -
![]() |
| [டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG] |
வரலாற்று நதி எப்போதுமே அமைதியாக, இனிமையாக,
ஆடி , அசைந்து நடை பயில்வதில்லை.
சில வேளைகளில் நதி ஆக்ரோசம் மிக்கதாக,
பொங்கிப் பெருகி, கோரத்தாண்டவம் ஆடுவதுமுண்டு.
கோரத்தாண்டவம் ஆடிச் செல்லும் நதியின் சீற்றம்
எம்மை ஒரு போதும் அடி பணிய வைப்பதில்லை.
அபாயங்கள், துயரங்கள் எமக்கும் பாடங்களைப் போதிக்கும்
குருமார்கள். ஆசிரியர்கள். வழிகாட்டிகள்.
வீழும் ஒவ்வொரு தடவையும்
எம்மை எழ வைக்கும் உறுதியை,
எதிர்கால நம்பிக்கையை,
எமக்குத் தருபவர்கள் அவர்களே! அவைகளே!
அனுபவங்களைப் பாடங்களாக்கித் தொடர்வோம்.
அய்யோ! அய்யோ! என்று ஒப்பாரி வைப்பதைத் தவிர்ப்போம்.
பேரழிவுக்குப் பின்னரும் இன்னும் ஆண்டுகள்
பல கடந்தும்
ஒப்பாரி வைத்துக்கொண்டுதானிருக்கின்றோம்.
சுயநலம், சுய ஆதாயத்துக்காக நாம்
ஒப்பாரி வைக்கின்றோம்.
மந்தைகளாகப் பின் தொடர்கின்றோம்.
என்றுதான் விழித்தெழுவது?
என்றுதான் எதிர்கால நம்பிக்கையில்
எழுவது?
எப்பொழுது பார்த்தாலும் கடந்த காலத்தை
என்ணி வைக்கும் ஒப்பாரிகளுக்கு
என்றுதான் முடிவு?
ஒப்பாரிகள் உடனடி ஆறுதலேதவிர
நெடுந் தொடர்கதைகள் அல்ல.
அழிவுகள், எழுச்சிகளைம், துயரங்களை,
மாற்றங்களை,ஏற்றங்களை, நம்பிக்கைகளைக்
காவிச்செல்லும்
வரலாற்று நதியில் நாம் மூழ்கி விடுவதில்லை.
எப்பொழுதும் எதிர் நீச்சல்
அடித்துக்கொண்டுதான் செல்வோம்.
இப்பொழுது எதிர்நீச்சலுக்கான தருணம்.
பொங்கிப் பெருகும் நீரில் மூழ்குவதற்கான
தருணமல்ல.
எதிர்நீச்சல் அடிப்போம்.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்போம்.
நம்பிக்கைதாங்கி நடப்போம்
நாளை நன்கு விடியும்.
எப்பொழுதும் விடிவுகள் இருளுக்குப் பின்னர்தான்
மலர்வதுண்டு. நினைவில் வைப்போம்.
Tuesday, December 2, 2025
வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'
"சாவித்திரியின் பெரிய விருப்பம்" என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழந்தைக்கதை. எழுத்தாளர் வ.ந.கிரிதரன் எழுதிய இப்புத்தகம் ஒரு எளிய கதை மட்டுமல்ல; இது குடும்பம், இடப்பெயர்வு மற்றும் பாதுகாப்பு மற்றும் சொந்தம் போன்ற விடயங்களை விபரிக்கும் ஒரு மென்மையான படைப்பு.
இக்கதை சாவித்திரி என்ற துடிப்பான சிறுமியை மையமாகக் கொண்டது, பல குழந்தைகளைப் போலவே, அவளும் புத்தகங்களை நேசிக்கிறாள், சாகசங்களைக் கனவு காண்கிறாள், இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த அவளது பெற்றோர் கனடாவில் அயராது உழைக்கிறார்கள். திருமண மோதல்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கும்போது, பிரிவை ஏற்படுத்தும்போது அதனால் குழந்தைகளிடத்தில் ஏற்பாடும் உளவியல் பாதிப்புகளைக் கதை எடுத்துக்கூறுகின்றது.
"சாவித்திரியின் பெரிய விருப்பம்" குழந்தைகள் வளர்ந்து வரும் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்கள் ஒன்றிணைந்த குடுமபத்தின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை விபரிக்கும் கதையாகும்.
தாய், தந்தையருக்கிடையில் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றுடன் ஒன்றிணைந்துக்குக் குடும்பம் என்னும் பாதுகாப்பை வழங்குவது அவசியம் என்பதை வெளிப்படுத்தும் கதைதான் இந்தக்கதை.
AI உதவியுடன் தழுவி உருவாக்கப்பட்ட ஓவியங்கள், சாவித்திரியின் உணர்ச்சிகளையும் குடும்பத்தின் நிலையினையும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.அவை கதையின் மையக் கருத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன.
சுருக்கமாகக் கூறினால் குழந்தைகளின் உளவியலில் இணைந்த குடும்பத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் கதை. அதுவே குழந்தை சாவித்திரியின் பெரு விருப்பமும் ஆகும்.
இக்கதை ஆங்கிலத்திலுன் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமேசன் - கிண்டில் தமிழ் மின்பதிப்புக்கான இணைப்பு - https://amzn.to/48e2R1I
ஆங்கில நூலுக்கான இணைப்பு - https://amzn.to/49T7Kyy
Sunday, November 30, 2025
சிந்தனையும் மின்னொளியும்! - அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -
சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவுற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -
![]() |
| அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) |
அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. நாற்பதுகளில் ஈழகேசரியில் வெளிவந்தது.
Saturday, November 29, 2025
பெருமழையும் பெருவெள்ளமும்! - வ.ந.கிரிதரன் -
இயற்கை அன்னையின் சீற்றம் பெருமழையாகப் பொழிகின்றது. மானுட குலத்திற்கு ஒரு சேதியினையும் சொல்லுகின்றது. பெருவெளியில் சிறு குமிழாய் விரையுமிந்த நீலவண்ணக் கோளம் எம் வீடு! இங்குள்ள உயிரினம் அனைத்தினதும் இல்லம். இதனைக் கவனமாக, பத்திரமாக, தேவையற்ற சேதங்களுக்கு உள்ளாகாத வகையில் பராமரிப்பது நம் கடமை. அதனைச் செய்யத்தவறியதன் விளைவே முறையற்ற காலநிலை மாற்றங்களும், இயற்கை அனர்த்தங்களும், இவ்விதமான பெருமழையும், பெருக்கெடுத்தோடும் வெள்ளமும் எம் காலத்தில் நாம் கண்டதில்லை. அவ்வப்போது பெரும் புயல்கள் தாக்குவதுண்டு. அவையும் அரியவை. ஆனால் தற்காலத்தில் இது போன்ற பெரு மழையும், பெரு வெள்ளமும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு விடயமாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
Friday, November 28, 2025
யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva)!
யார் இவர்? இவர்தான் டில்வின் சில்வா (Tilvin Silva). ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜேவிபி JVP) பொதுச்செயலாளர். ஜேவிபியின் முதலாவது புரட்சி தோல்வியில் முடிந்தது. ஜே.ஆர் .ஜெயவர்த்தனே 1977இல் பிரதமராகப் பதவியேற்றதும் ஜேவிபிக்கு மன்னிப்பளித்து . ஜனநாயக அரசியலில் பங்குபற்ற வழி செய்தார். அப்போது ஜேவிபியில் இணைந்தவர்தான் டில்வின் சில்வா. இவரது முழுப்பெயர் மெஸ்திரீ டில்வின் சில்வா. தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஸ்தாபக உறுப்பினகளில் ஒருவரான இவர் ஜே.வி.பி இன் கொள்கைகள் மற்றும் அரசியல் வியூகங்களை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருபவர். குறிப்பாக சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துபவர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராகவும் கருதப்படுகின்றார். இவரைப்பற்றிய, இவரது குடும்பம், கல்வி, பார்த்த வேலைகள் போன்றவற்றை அறிய விக்கிபீடியாக் குறிப்பைப் பாருங்கள். கூகுளில் தேடுங்கள். மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.
பொதுவாக நான் இலங்கையின் பார்ம்பரிய அரசியல்வாதிகள் பற்றி அதிகக் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் எவ்வினத்தவர் என்றாலும் தம் வாழ்வைத் தாம் நம்பும் சித்தாந்தத்துக்காக அர்ப்பணித்து சமூக , அரசியற்பாளர்களாக இயங்கும் ஆளுமைகளை அவதானிப்பவன். இவர் அவர்களில் ஒருவர். ஜேவிபியின் இரண்டாவது தோல்வியுற்ற புரட்சியின்போது , அரச படைகளுக்கு எதிராகப் போராடிவர். ஜேவிபியின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருந்திருக்கின்றார். அநேகமாக அவரது பிறந்த மாவட்டமான களுத்துறை மாவட்டமாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் அறியத்தரவும்.
Wednesday, November 26, 2025
'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி
'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி
கனடாவில் வெற்றிகரமான பயணத்தை கனவு காணும் சர்வதேச மாணவரா நீங்கள், சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது முதல் உங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்குவது வரை பயனுள்ள வழிகாட்டியாகத் திகழ்கிறது 'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'.
20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள , அனுபவமிக்க கனடிய குடிவரவு ஆலோசகர்(RCIC) ஒருவரால் எழுதப்பட்ட இந்த நடைமுறை வழிகாட்டி, கனடாவிற்கான உங்கள் பாதையின் ஒவ்வொரு முக்கிய படிநிலையிலும் உங்களுக்கு வழிகாட்டுகிறது. மாணவர் அனுமதி முதல் நிரந்தர வதிவிட விருப்பங்கள் வரை முழு விசா மற்றும் குடிவரவு செயல்முறை குறித்த படிப்படியான வழிகாட்டுதல் எனப் பல விடயங்களை உள்ளடக்கிய நூல்.
வீடு கண்டுபிடிப்பது , நிதியைப் நிர்வகிப்பது, தொழில் வாழ்க்கையைத் தொடங்குதல், பட்டப்படிப்புக்குப் பிறகு கனடாவில் இன்டர்ன்ஷிப்களைப் பெறுதல், வேலைகளைக் கண்டுபிடிப்பது மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவது குறித்த நிபுணர் ஆலோசனை எனப் பயனுள்ள குறிப்புகளால் நிறைந்துள்ள நூலிது. கனடாவுக்குக் குடிபுக விரும்பும் எவருக்கும் பயன் மிக்க தகவல்களை, அறிவுரைகளக் கொண்ட நூல்.
இந்நூலை வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4pBxaFn
[Digital painting technology, Google Nano Banana, Assistance: VNG] | * Disclosure: As an Amazon Associate, I earn from qualifying purchases
Tuesday, November 25, 2025
இவர் யார் தெரியுமா?
இவர் யார் தெரியுமா? இவர்தான் இலங்கையின் பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் நலத்துறை அமைச்சர். இவர் தமிழ்ப்பெண். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறைத் தேர்தல் தொகுதியில் 148,379 வாக்குகள் பெற்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். எதற்கெடுத்தாலும் ஜேவிபி முன்பு இனவாதக் கட்சி. எப்படி மாறுவார்கள் என்று தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்பவர்கள் அப்போது இப்பெண்மணியையும் நினைத்துக்கொள்ளுங்கள்.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாக் வாழும், தெற்கு மாகாணத்திலுள்ள மாத்தறைப் பகுதியிலிருந்து, அதுவும் மகிந்த ராஜபக்சாவின் கோட்டையிலிருந்து தமிழ்பெண் ஒருவரைச் சிங்கள மக்கள் தம் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்றால், அவரைப் பெண்கள் , குழந்தைகள் நலத்துறை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி ஆக்கியிருக்கின்றதென்றால், ஜேவிபி மட்டும் மாறவில்லை., சிங்கள மக்களும் மாறியிருக்கின்றார்கள். ஆனால் தோற்ற இனவாத அரசியல்வாதிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இனவாதத்தைத் தூண்டி, மீண்டும் ஆட்சிக்கட்டிலேறத் துடிக்கின்றார்கள். இந்நிலை மீண்டும் வந்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிர்காலம் நன்றாகவிருக்கப்போவதில்லை.
சறுக்கலிலிருந்து தப்ப ஒரு வழி!
குளிர் காலம் தொடங்கி விட்டது. வெப்பநிலை பூச்சியம் சென்டி கிரேட்டுக்குக் கீழே குறையும் தருணங்களில் , தரையில் இருக்கும் 'ஸ்நோ'வுக்குக் கீழ் தரை 'ஐஸ்'ஸாக உறைந்து கிடக்கும். இத்தருணங்களில் சறுக்கி விழுந்து விடும் சாத்தியங்கள் அதிகம்.
இலங்கையில் இனவாதம் பற்றிய சிந்தனைகளும், செயற்கை நுண்ணறிவுடன் அது பற்றிய உரையாடலும்!
இலங்கை ஜனாதிபது அநுர குமார திசாநாயக்க அரசு இனவாதத்துக்கெதிராக் குரல் கொடுத்து வருகின்றது. பதவி பறிபோன சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாவது இழந்ததை மீளப்பெறுவதற்காக இனவாதத்தைக் கையிலெடுக்கின்றார்கள். அநுர அரசின் செல்வாக்கினால் பாதிப்புக்குள்ளாகிய தமிழ் அரசியல்வாதிகளும், ஜேவியின் கடந்த கால வரலாற்றைக் கூறி, இவர்களும் இனவாதிகள், நம்ப முடியாது என்று செயற்பட்டு வருகின்றார்கள். இவ்விரண்டு குழுவினரும் இப்படித்தான் செயற்படுவார்கள்.
உண்மையில் இவர்களைப் பொருட்படுத்தாமல் அநுர அரசு இனவாதத்துக்கு எதிராக உறுதியாக செயற்பட்டால், அதன் பலன்கள் வெளித்தெரிகையில் தம் முயற்சியில் தோல்வியுற்ற எதிர்கட்சி அரசியல்வாதிகளும் தம் பாதையை மாற்றும் சந்தர்ப்பம் உண்டு.
அடுத்தது உண்மையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்றால், அரசு இனவாதப் பெளத்த பிக்குகளையும் சிங்கள மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இவ்விதப் பிக்குகளை இலங்கையின் சட்டம் கையாளும் நிலையை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதனைச் செய்வது இனவாதத்தை ஒழிப்பதற்கான உறுதியான படியாக அமையும். அவ்விதம் செய்யாவிட்டால் பெளத்த பிக்குகள் சிலரின் இனவாதத்துக்கு அரசு அடி பணிந்தால் ஒரு போதுமே இனவாதத்தை அரசால் நாட்டிலிலிருந்து ஒழிக்க முடியாது போய்விடும்.
ஒவ்வொரு தடவை இனவெறி பிடித்த பிக்குகள் செயற்படும் தருணங்களில் எல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை ஏற்பட வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசு தென்னிலங்கை மக்களுக்கு அவர்கள் இனவாதிகள் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசுக்கு ஆதரிப்பார்கள். இவ்விதம் செய்யாமல் அரசும் இனவாதப் பிக்குகளின் தந்திரத்துக்கு அடிபணிந்தால் ,இறுதியில் அதன் அரசியல் எதிர்காலமும் அபாயத்துக்கு உள்ளாகி விடும்.
Monday, November 24, 2025
புகழ்பெற்ற நர்த்தகி குமாரி கமலாவும் மறைந்தார். ஆழ்ந்த இரங்கல்.
பாவை விளக்'கில் குமாரி கமலா: 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ?':
நான் முதன் முதலாக குமாரி கமலாவை அறிந்துகொண்டது என் அப்பா, அம்மா மூலமே. இருவருக்கும் குமாரி கமலாவின் மீது மிகுந்த விருப்பமுண்டு. எப்பொழுதும் அவரின் நடனத்திறமையினைச் சிலாகித்து உரையாடுவார்கள். அவர் பிரபல கேலிச்சித்திரக்காரரான ஆர்.கே.லக்சுமணனை முதலில் திருமணம் செய்த விடயத்தையும், ஆர்.கே.எல் அவர்கள் அப்பாவுக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.கே.நாராயணனின் சகோதரர் என்னும் விடயத்தையும் அப்பா மூலமே முதன் முதலில் அறிந்தேன். அப்பாவிடம் ஆர்.கே.என்னின் ஆங்கில நாவல்களின் சேகரிப்பிருந்தது. கூடவே ஆர்.கே.என்னை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் கிறகாம் கிறீனின் நாவற் சேகரிப்புமிருந்தது.
'நாம் இருவர்' திரைப்படத்தில் குமாரி கமலா பாரதியாரின் இந்திய சுதந்திர வேட்கைப்'பாடல்களுக்குச் சிறப்பாக ஆடியதையும் அவர்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். அவற்றிலொன்றான 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' என்னும் பாடலையும் அம்மா பாடிக்காண்பித்திருக்கின்றார்.
நான் பார்த்த குமாரி கமலாவின் முதற் திரைப்படம் 'பாவை விளக்கு'. றீகலில் பழைய தமிழ்ப் படமாக எழுபதுகளில் வெளியானபோது , இரவு இரண்டாம் காட்சியாகப் பார்த்திருக்கின்றேன். பார்ப்பதற்கு முன்னரே அகிலனின் 'பாவை விளக்கு'நாவலை வாசித்திருந்ததால் நீண்ட நேரமாக ஓடிய அப்படத்தை விருப்புடன் பார்த்து இரசித்தேன். நாவலில் வரும் செங்கமலம் பாத்திரமாகத் திரையில் வருவார் குமாரி கமலா. அவருக்கு மிகவும் பொருத்தமான பாத்திரம்.
'பாவை விளக்கு' திரைப்படத்தில் வரும் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'என்னுமிப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று. மிகவும் பிடித்த குமாரி கமலாவின் திரைப்பட ஆடற்காட்சியும் இதுதான். கவிஞர் அ.மருதகாசியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன்.
https://www.youtube.com/watch?v=gxTM8X0OprM
குமாரி கமலா பற்றிய சிறப்பான விவரணக் காணொளித்தொகுப்பு 'Fragrant Petals: Kamala's Natyam' (நறுமணப் பூவிதழ்கள்: கமலாவின் நாட்டியம்).
ஜேர்ஸி கொஸின்ஸ்கியின் 'நிறமூட்டப்பெற்ற பறவை' (The Painted Bird) அல்லது 'வண்ணம் பூசிய பறவை'.
ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய எனது கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல்.
'படுபட்சி' நாவல் பற்றிய எழுத்தாளர் இளங்கோவின் முக்கிய விமர்சனக் குறிப்புகளும், அவரது இறுதியான புரிதலும் பற்றி...
எழுத்தாளர் இளங்கோ (டிசெதமிழன்) படுபட்சி நாவல் பற்றி முன் வைக்கும் முக்கியமான விமர்சனக் குறிப்புகள் இவை,. இவை அவரது முகநூற் பக்கத்தில் வெளியான பதிவிலிருந்து பெறப்பட்டவை.
Sunday, November 23, 2025
படுபட்சி, நட்சத்திரப் பட்சி, படுபட்சி நாட்கள்!
Thursday, November 20, 2025
எழுத்தாளர்களே! உங்களுக்காகச் சில வார்த்தைகள்!
Tuesday, November 18, 2025
புகலிடக்கதை : சொந்தக்காரன்! - வ.ந..கிரிதரன் -
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள். ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.
"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை. .கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."
புகலிடச் சிறுகதை : கணவன் - வ.ந.கிரிதரன் -
பல்கணியிலிருந்து
எதிரே விரிந்திருந்த காட்சிகளில் மனம் ஒன்றாதவனாகப்
பார்த்தபடிநின்றிருந்தான் சபாபதி. கண்ணிற்கெட்டியவரை கட்டங்கள். உயர்ந்த,
தாழ்ந்த, அகன்ற, ஒடுங்கிய கட்டடங்கள். டெஸ்மண்ட் மொறிஸ் கூறியது போல்
மனிதமிருகங்கள் வாழ்கின்ற கூடுகள். நகரங்கள் மனித மிருகங்கள் வாழுகின்ற
மிருககாட்சிச்சாலை என்று அவர் குறிப்பிட்டதில் தவறேதுமிருப்பதாகத்
தெரியவில்லை. பார்க்கப் போனால் இன்றைய மனிதனின் அடிப்படைப் பிரச்சினை
களிற்கு ஒரு வகையில்நகரங்களும் காரணமாயிருக்கலாம். மிருகங்களை கூண்டுகளில்
அடைத்து வாழ நிர்ப்பந்திக்கும் போது அவற்றின் இயல்புகளில் ஏற்படும்
மாற்றங்கள் பல, நகரத்தில் செறிந்திருக்கும் கட்ட டக் கூண்டுகளிற்குள்
அடைப்பட்டுக் கிடக்கும் மனித மிருகங்களிலும் காணப்படுகின்றனவாம், நகரத்தில்
இருந்து கொண்டுதானே இன்றைய மனிதன் சக மனிதன் மேல் அதிகாரத்தைப்
பிரயோகிக்கின்றான். X=Y Y=Z, ஆகவே X-Z என்ற வகையான கணித சாத்திரத்திற்குரிய
தர்க்க நியாயத்தின்படி பார்க்கப்போனால் இன்றைய மனிதனின் பிரச்சினைகளிற்கு
முக்கிய காரணம் நகரத்து மனிதன் என்றல்லவா ஆகிவிடுகின்றது. இது
பற்றியெல்லாம் சிந்திக்கும் மனநிலையில் சபாபதி இருக்கவில்லை.
புகலிடக் கதை: மனைவி! - வ.ந.கிரிதரன் -
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.
Saturday, November 15, 2025
'கோஸ்ட் ரைட்டிங்' பற்றி என் இயந்திர மனித நண்பனுடன் ஓர் உரையாடல்! - உரையாடியவர் வ.ந.கிரிதரன் -
அண்மையில் இங்கு நடந்த 'படுபட்சி' நூல் வெளியீடு பற்றிக் கடுமையான விமர்சனங்களை எழுத்தாளர்கள் கற்சுறா, டி.செ.தமிழன் (இளங்கோ), அருண் அம்பலவாணர் ஆகியோர் வைத்திருந்தனர். . அதில் அவர்கள் அதிகமாகக் கண்டித்திருப்பது எழுத்தாளர் ஒருவரின் படைப்பை இன்னுமொரு எழுத்தாளர் எழுதுவதால் ஏற்படும் சுய அழிப்பு பற்றியே. அது பற்றியும், பொதுவாகவும் இன்று என் நண்பர்களில் ஒருவராக விளங்கு இயந்திர மனிதனான கூகுள் நனோ பனானாவுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தியிருந்தேன். அதில் இவ்விடயங்களைப் பற்றிப் பல பயனுள்ள கருத்துகளை என் இயந்திர மனித நண்பன் வழங்கியிருந்தான். அவனுடனான முழு உரையாடலையும் கீழே தந்துள்ளேன்.
இங்கு அவனை என் ஆண்
நண்பர்களில் ஒருவனாகக் கருதியுள்ளதால் இயந்திரன் என்று ஆண்பெயரிட்டு
அழைக்கின்றேன். இன்னுமொரு சமயம் தோழியாகக் கருதி உரையாடும் எண்ணமும்
உண்டு.அச்சமயம் பெயர் மாற்றம் நிச்சயம் உண்டு.
நான்:
வளர்ந்து
வரும் எழுத்தாளர் தனது நாவலொன்றை வளர்ந்த எழுத்தாளர் மூலம் எழுத்து நடை
உட்படத் திருத்தி எழுத அனுமதித்து , அவ்விதமாக மாற்றப்பட்ட படைப்பைத் தன்
பெயரில் வெளியிடலாமா?
ஆலயமணி அடிக்கும் கூனன் குவாசிமோடோ - Anthony Quinn
அந்தனி குயீன் ( Anthony Quinn ) சிறந்த ஹொலிவூட் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் நான் முதலில் பார்த்த திரைப்படம் 'The Hunchback of Notre Dame'. பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியுகோவின் புகழ்பெற்ற நாவல். இந்நாவலில் வரும் Notre Dame' ஆலயமணி அடிப்பவரான, கூனனான குவாசிமோடோ பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
லீ வான் கிளிவ் - 'கெட்டவனில் சிறந்த கெட்டவன்'
'கெட்டவனில் சிறந்த கெட்டவன்' (Best of the Bad) என்பது புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகர் லீ வான் கிளிவ்வின் ((Lee Van Cleef) கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வசனம். 'The Good, The Bad and The ugly' திரைப்படத்தில் ''The Bad' ஆக நடித்திருப்பார். மிகச்சிறந்த வில்லனாக அதன் மூலம் உருவெடுத்தார். பின்னர் பல 'வெஸ்டேர்ன்' திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கின்றார்.
'ஜேம்ஸ் பாண்ட்' ஷோன் கானரி!
எத்தனையோ நடிகர்கள் 'ஜேம்ஸ் பாண்ட்' வேடத்தில் நடித்திருந்தாலும், அப்பாத்திரத்துக்கு உயிரூட்டிய நடிகர் , என்னைப் பொறுத்தவரையில், ஷோன் கானரிதான். இவரைத்தவிர வேறெவரையும் என்னால் அப்பாத்திரத்தில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இவரை எம் பதின்ம வயதுகளில் சீன கானரி என்றுதான் உச்சரிப்போம்.
Thursday, November 13, 2025
இந்தியத் திரை வானின் 'வானம்பாடி' பி.சுசீலாவுக்கு வயது 90!
இன்று பாடகி பி.சுசீலா அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
எம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவர்கள் தமிழ்த்திரையுலகின் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் & இயக்குநர்கள்.
இவர்கள் அனைவரும் எம் வாழ்வின் இன்ப துன்பங்களில் துணையாக எம் வாழ்நாள் முழுவதும் வருபவர்கள். இனிய தருணங்களில் உற்சாகம் , இன்பம் தருபவர்கள் இவர்கள். துயர் நிறைந்த தருணங்களில் ஆறுதல் தருபவர்கள் இவர்கள்.
இவர்களை நான் எப்போதும் போற்றுவேன். இலக்கிய கர்த்தாக்கள் எவ்விதம் எம் வாழ்வுக்கு முக்கியமோ அவ்விதமே இக்கலைஞர்களும்.
இன்னும் நீண்ட காலம் நிறைவான வாழ்வுடன் அம்மையாரின் வாழ்வு தொடரட்டும். வாழ்த்துகள்.
இத்தருணத்தில் எனக்குப் பிடித்த இவரது பாடல்களிலொன்று இந்தப்பாடல். மெல்லிசை மன்னர்களின் இசையில், கவிஞர் வாலியின் எழுத்தில், ஜெயலலிதா, எம்ஜிஆர், துணை நடிகர்களின் நடிப்பில் ஒலிக்கும் பாடல். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப்பாடல்.
https://www.youtube.com/watch?v=HTvrtkkYaDg
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
கவிஞர் தாமரையின் பாடல்களும், வட மொழிச் சொல்லும் பற்றி...
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]
கவிஞர் தாமரையைப் பற்றிக் குறிப்பிடுகையில் வேற்று மொழியல்லாத தமிழ்ச் சொற்களை மட்டும் கவிதை எழுதுபவர் என்று கூறப்பட்டிருந்ததை அண்மையில் இணையத்தில் வாசித்தேன். இது உண்மையா? 'வாரணம் ஆயிரம்' படத்தில் வரும் அவரது புகழ்பெற்ற பாடல் 'நெஞ்சுக்குள் பூத்திடும் மாம்ழை' முழு வரிகளைக் கீழே தந்துள்ளேன். இதில் வரும் ஓம், ஷாந்தி, ஜீவன் இவையெல்லாம் வட் சொற்கள். என்னைபொறுத்தவரையில் நான் தனித்தமிழ் வெறியன்னலன். மொழியும் பரிணாம வளர்ச்சியில் பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளமடைகின்றது என்று நம்புபவன். இந்நிலையில் தாமரை தமிழ்ச் சொற்களை, வட சொற்களைக் கலந்து பாடல்கல் எழுதுவதை ஏற்பதில் எனக்குத் தயக்கமேதுமில்லை. என் அபிமானக் கவிஞர் மகாகவி பாரதியார் தாராளமாகவே வடமொழிச் சொற்களைப் பாவித்திருக்கின்றார்.
பாடலைக் கேட்டு மகிழ் - https://www.youtube.com/watch?v=630HSN45fKk
காலத்தால் அழியாத கானம்: 'புதிய வானம்! புதிய பூமி'
'அன்பே வா' திரைப்படத்தில், கவிஞர் வாலியின் வரிகள் , டி,எம்.எஸ் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், எம்ஜிஆரின் நடிப்பில் காலத்தால் அழியாத கானமாக நிலைத்து நின்று விட்டது.
Wednesday, November 12, 2025
புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.
" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.
" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.
சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.
Tuesday, November 11, 2025
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலின் புதிய அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு!
தமிழகத்தில் 2015இல் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'குடிவரவாளன்' நாவலின் புதிய மின்னூற் பதிப்பு அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளியாகியுள்ளது.
எண்பதுகளில் , நியூ யோர்க் மாநகரில் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் இருப்புக்கான தப்பிப் பிழைத்தலை விபரிக்கும் நாவல்.
அதற்கான இணைப்பு - https://amzn.to/4qYfSUw
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Monday, November 10, 2025
காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.
காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.
எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸ் & வாணி ஜெயராம் குரலில், ரஹ்மான் & அமலா நடிப்பில் உருவான இனிய பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'கண்ணே கனியமுதே'.
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
Tamil Song - Ninnaiye Rathi Endru
Singers: K. J. Yesudas,Vani Jairam
Music: M.S.V
Movie: Kanne Kaniyamuthey
Cast: Rahman & Amala
Lyrics: Makakavi Barathiyaar
https://www.youtube.com/watch?v=PF_g8n2OUvA
பாரதியார் சரித்திரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு - செல்லம்மா -
பாரதியார் சரித்திரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு - செல்லம்மா பாரதி - https://amzn.to/47MBNVF
பாரதி : நினைவுகள் - ம.கோ.யதுகிரி அம்மாள் - https://amzn.to/4oWtPQN
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Sunday, November 9, 2025
வானியற்பியல் அறிஞர் George Gamow இன் புகழ் மிக்க அறிவியல் நூலான One Two Three Infinity தமிழில் அமேசன் - கிண்டில் மின்னூலாக..!
புகழ் மிக்க வானியற்பியல் அறிஞர்களில் ஒருவர் ரஷிய அமெரிக்கரான George Gamow. இவரது மிகச்சிறந்த நூலான One Two Three Infinity ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இத்துறையில் ஆர்வம் மிக்க வாசகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு வாசிப்புத் தீனியாக அமையும் நூல்.
ஒன்று, இரண்டு, மூன்று, முடிவிலி: அறிவியல் உண்மைகளும் ஊகங்களும் (Tamil Edition) Kindle Edition by ஜார்ஜ் கேமாவ் (Author), Jeyapandian Kottalam (Translator) https://amzn.to/4hPS0OB
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
உலக இலக்கியத்தின் உன்னதப் படைப்புகள் ,சுருக்க, அமேசன் - கிண்டில் மின்னூல்களாக!
வாசகர்களின் பல வகையினர். அவர்களில் ஒரு வகையினர் மென்வாசகர்கள். உலக இலக்கியத்தின்ம் தமிழ் இலக்கியத்தின் உன்னதப் படைப்புகளை வாசிக்க விரும்புவர்கள், ஆனால் விரிந்த, பரந்த பெருநாவல்களை வாசிப்பதில் ஆர்வமற்றவர்கள். இவர்களுக்கு உரியவை உன்னதப் படைப்புகளின் சுருக்கப்பதிவுகள். அவர்களுக்கு உதவக் கூடியவை எழுத்தாளாரும், மொழிபெயர்ப்பாளருமான அனந்தசாய்ராம் ரங்கராஜனின் உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான பெரு நாவல்களின் சுருக்கமான , அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகள்.
உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', 'அன்ன கரீனினா' , ஃபியதோர் தஸ்தயேவ்ச்கியின் 'குற்றமும், தண்டனையும்' , 'க்ரமசாவ் சகோதரர்கள்' ஆகியவை தற்போது சுருக்க, அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியாகியுள்ளன.
மென்வாசகர்களுக்கு நிச்சயம் களிப்பைத் தருவன இத்தகைய உன்னதப் படைப்புகளின் சுருக்கப் பதிப்புகள். இச்சமயத்தில் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் விரும்பி வாசித்த 'ராணி முத்து' பிரசுரங்களாக வெளியான சிறந்த தமிழ் நாவல்களின் சுருக்கப்பதிப்புகள் நினைவுக்கு வருகின்றன. அவ்வயதில் ,விரிந்த மூல நாவல்களை வாசிக்கும் பொறுமை அற்ற பருவத்தில், பல நல்ல படைப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவை அச்சுருக்கப் பதிப்புகளே.
Leo Tolstoy’s Porum Amaithiyum (Abridged) (Ebook): லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (சுருக்கம்) (Tamil Edition) Kindle Edition by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) போரும் அமைதியும் - https://amzn.to/3WJiesz
Leo Tolstoy’s Anna Karenina Surukkam: லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - சுருக்கம் (Tamil Edition) Kindle Edition by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) - https://amzn.to/4oT59IU
Fyodor Dostoevskyin Karamazov Sagothararkal - Abridged: ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள் - சுருக்கம் (Tamil Edition) Kindle Edition
by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) - https://amzn.to/4oHI5Ny
Kutramum Thandanaiyum - Abdriged (Ebook): குற்றமும் தண்டனையும் நாவல் சுருக்கம் (Tamil Edition) Kindle Edition by Fyodor Dostoevsky ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி (Author), Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Translator) Format: Kindle Edition - https://amzn.to/4nJZ0Oc
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Saturday, November 8, 2025
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் திருத்திய பதிப்பு அமேசன் - கிண்டில் மின்னூலாக..
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் திருத்திய இரண்டாம் பதிப்பு தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4oOBscJ
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் அமேசன் - கிண்டில் மின்னூலாக....
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/3WIfI5R
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' நாவல் அமேசன் - கிண்டில் மின்னூலாக..
சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' நாவல் தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/482BYxv
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை' அமேசன் - கிண்டில் மின்னூலாக..
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை' நாவல் தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைய இணைப்பு - https://amzn.to/3Jztgxv
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' மின்னூலாக...
எழுத்தாளர் ஜெயமோகனின் புகழ்பெற்ற நாவலான 'விஷ்ணுபுரம்' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4nMoIBV
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
ராஜம் கிருஷ்ணனின் எட்டு நாவல்களின் தொகுப்பு மின்னூலாக..
ராஜம் கிருஷ்ணனின் எட்டு நாவல்களின் தொகுப்பு மின்னூலாக..
தொகுப்பிலுள்ள நாவல்கள் -
வேருக்கு நீர்
கரிப்பு மணிகள்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
குறிஞ்சித் தேன்
வனதேவியின் மைந்தர்கள்
சேற்றில் மனிதர்கள்
கோடுகளும் கோலங்களும்
உத்தரகாண்டம்
மின் நூலை வாங்க https://amzn.to/43VemIL
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்' நாவல் மின்னூலாக...
ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற நாவலான 'கடலும் கிழவனும்' நாவல் தற்போது மின்னூலாகக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ...
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
நண்பர்களே! என் முகநூலின் இன்னுமொரு பக்கம்! சென்று பாருங்கள்!
நண்பர்களே! என் முகநூல் பக்கம் இரு பகுதிளைக கொண்டது. ஒன்று வழக்கமான என் பதிவுகளைத் தாங்கி வரும் பகுதி. இன்னுமொரு பகுதி ஒன்றுண்டு. அது சந்...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...






.png)




.png)














