['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நூலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நூலகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நூலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காலியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்குச் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.
" என்ன தூக்கக் கலக்கமா " என்றேன்.
" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.
சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.
வ.ந.கிரிதரன் (V.N.Giritharan) பக்கம்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, November 12, 2025
புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -
Tuesday, November 11, 2025
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலின் புதிய அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு!
தமிழகத்தில் 2015இல் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது 'குடிவரவாளன்' நாவலின் புதிய மின்னூற் பதிப்பு அமேசன் - கிண்டில் பதிப்பாக வெளியாகியுள்ளது.
எண்பதுகளில் , நியூ யோர்க் மாநகரில் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் இருப்புக்கான தப்பிப் பிழைத்தலை விபரிக்கும் நாவல்.
அதற்கான இணைப்பு - https://amzn.to/4qYfSUw
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Monday, November 10, 2025
காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.
காலத்தால் அழியாத கானம் - 'நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா!' - பாரதியார்.
எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸ் & வாணி ஜெயராம் குரலில், ரஹ்மான் & அமலா நடிப்பில் உருவான இனிய பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'கண்ணே கனியமுதே'.
[Digiat Art (Google Nano Banana) help: VNG ]
Tamil Song - Ninnaiye Rathi Endru
Singers: K. J. Yesudas,Vani Jairam
Music: M.S.V
Movie: Kanne Kaniyamuthey
Cast: Rahman & Amala
Lyrics: Makakavi Barathiyaar
https://www.youtube.com/watch?v=PF_g8n2OUvA
பாரதியார் சரித்திரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு - செல்லம்மா -
பாரதியார் சரித்திரம் (பாரதி நினைவு நூற்றாண்டு வெளியீடு - செல்லம்மா பாரதி - https://amzn.to/47MBNVF
பாரதி : நினைவுகள் - ம.கோ.யதுகிரி அம்மாள் - https://amzn.to/4oWtPQN
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Sunday, November 9, 2025
வானியற்பியல் அறிஞர் George Gamow இன் புகழ் மிக்க அறிவியல் நூலான One Two Three Infinity தமிழில் அமேசன் - கிண்டில் மின்னூலாக..!
புகழ் மிக்க வானியற்பியல் அறிஞர்களில் ஒருவர் ரஷிய அமெரிக்கரான George Gamow. இவரது மிகச்சிறந்த நூலான One Two Three Infinity ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இத்துறையில் ஆர்வம் மிக்க வாசகர்களுக்கு நிச்சயம் நல்லதொரு வாசிப்புத் தீனியாக அமையும் நூல்.
ஒன்று, இரண்டு, மூன்று, முடிவிலி: அறிவியல் உண்மைகளும் ஊகங்களும் (Tamil Edition) Kindle Edition by ஜார்ஜ் கேமாவ் (Author), Jeyapandian Kottalam (Translator) https://amzn.to/4hPS0OB
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
உலக இலக்கியத்தின் உன்னதப் படைப்புகள் ,சுருக்க, அமேசன் - கிண்டில் மின்னூல்களாக!
வாசகர்களின் பல வகையினர். அவர்களில் ஒரு வகையினர் மென்வாசகர்கள். உலக இலக்கியத்தின்ம் தமிழ் இலக்கியத்தின் உன்னதப் படைப்புகளை வாசிக்க விரும்புவர்கள், ஆனால் விரிந்த, பரந்த பெருநாவல்களை வாசிப்பதில் ஆர்வமற்றவர்கள். இவர்களுக்கு உரியவை உன்னதப் படைப்புகளின் சுருக்கப்பதிவுகள். அவர்களுக்கு உதவக் கூடியவை எழுத்தாளாரும், மொழிபெயர்ப்பாளருமான அனந்தசாய்ராம் ரங்கராஜனின் உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான பெரு நாவல்களின் சுருக்கமான , அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகள்.
உலக இலக்கியத்தின் உன்னதப்படைப்புகளான லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', 'அன்ன கரீனினா' , ஃபியதோர் தஸ்தயேவ்ச்கியின் 'குற்றமும், தண்டனையும்' , 'க்ரமசாவ் சகோதரர்கள்' ஆகியவை தற்போது சுருக்க, அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியாகியுள்ளன.
மென்வாசகர்களுக்கு நிச்சயம் களிப்பைத் தருவன இத்தகைய உன்னதப் படைப்புகளின் சுருக்கப் பதிப்புகள். இச்சமயத்தில் என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டில் விரும்பி வாசித்த 'ராணி முத்து' பிரசுரங்களாக வெளியான சிறந்த தமிழ் நாவல்களின் சுருக்கப்பதிப்புகள் நினைவுக்கு வருகின்றன. அவ்வயதில் ,விரிந்த மூல நாவல்களை வாசிக்கும் பொறுமை அற்ற பருவத்தில், பல நல்ல படைப்புகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவை அச்சுருக்கப் பதிப்புகளே.
Leo Tolstoy’s Porum Amaithiyum (Abridged) (Ebook): லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (சுருக்கம்) (Tamil Edition) Kindle Edition by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) போரும் அமைதியும் - https://amzn.to/3WJiesz
Leo Tolstoy’s Anna Karenina Surukkam: லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - சுருக்கம் (Tamil Edition) Kindle Edition by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) - https://amzn.to/4oT59IU
Fyodor Dostoevskyin Karamazov Sagothararkal - Abridged: ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்கள் - சுருக்கம் (Tamil Edition) Kindle Edition
by Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Author) - https://amzn.to/4oHI5Ny
Kutramum Thandanaiyum - Abdriged (Ebook): குற்றமும் தண்டனையும் நாவல் சுருக்கம் (Tamil Edition) Kindle Edition by Fyodor Dostoevsky ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி (Author), Ananthasairam Rangarajan அனந்தசாய்ராம் ரங்கராஜன் (Translator) Format: Kindle Edition - https://amzn.to/4nJZ0Oc
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
Saturday, November 8, 2025
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் திருத்திய பதிப்பு அமேசன் - கிண்டில் மின்னூலாக..
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் திருத்திய இரண்டாம் பதிப்பு தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4oOBscJ
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் அமேசன் - கிண்டில் மின்னூலாக....
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/3WIfI5R
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' நாவல் அமேசன் - கிண்டில் மின்னூலாக..
சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' நாவல் தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/482BYxv
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை' அமேசன் - கிண்டில் மின்னூலாக..
எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை' நாவல் தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைய இணைப்பு - https://amzn.to/3Jztgxv
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' மின்னூலாக...
எழுத்தாளர் ஜெயமோகனின் புகழ்பெற்ற நாவலான 'விஷ்ணுபுரம்' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூலாகக் கிடைக்கின்றது.
வாங்குவதற்கான இணைப்பு - https://amzn.to/4nMoIBV
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
ராஜம் கிருஷ்ணனின் எட்டு நாவல்களின் தொகுப்பு மின்னூலாக..
ராஜம் கிருஷ்ணனின் எட்டு நாவல்களின் தொகுப்பு மின்னூலாக..
தொகுப்பிலுள்ள நாவல்கள் -
வேருக்கு நீர்
கரிப்பு மணிகள்
சுழலில் மிதக்கும் தீபங்கள்
குறிஞ்சித் தேன்
வனதேவியின் மைந்தர்கள்
சேற்றில் மனிதர்கள்
கோடுகளும் கோலங்களும்
உத்தரகாண்டம்
மின் நூலை வாங்க https://amzn.to/43VemIL
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்' நாவல் மின்னூலாக...
ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற நாவலான 'கடலும் கிழவனும்' நாவல் தற்போது மின்னூலாகக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ...
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
ஜெகசிற்பியனின் நாவல்கள் அமேசன் - கிண்டில் பதிப்பு மின்னூல்களாக..
எனது மாணவப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர் ஜெகசிற்பியன். அவரது சரித்திரக் கதைகளில் 'நந்திவர்மன் காதலி', 'பத்தினிக்கோட்டம்' ஆகியவை எனக்கு அக்காலகட்டத்தில் பிடித்த நாவல்கள். சமூக நாவல்களைப் பொறுத்தவரையில் கல்கியில் தொடராக வெளிவந்த 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்' ஆகியவை மிகவும் பிடித்திருந்தன. நா.பார்த்தசாரதி, அகிலன் போன்ற வெகுசனப் படைப்புகளை வழங்கிய பலரின் படைப்புகளை அக்காலகட்டத்தில் பிடித்திருந்தாலும், தற்போது வாசிக்கும்போது அன்று என்னைக் கவர்ந்ததைப்போல் இன்று பெரிதாகக் கவர்வதில்லை. ஆனால் ஜெகசிற்பியனின் 'ஜீவகீதம்' நாவலை அண்மையில் வாசித்தபொழுது அன்று என்னைக் கவர்ந்ததுபோல் இன்றும் என்னைக் கவர்ந்திருந்தது எனக்கே ஆச்சரியத்தைத் தந்தது. இதற்குக் காரணமென்னவாகவிருக்குமெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தேன். ஜெகசிற்பியனின் படைப்புகள் இன்றும் என்னைக் கவர்வதற்கு முக்கிய காரணங்களாக அவரது நாட்டுப்பற்று மிக்க, சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்து , பாத்திரப்படைப்பு, படைப்பினூடு அவர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் வர்ணனைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாமென்று நினைக்கின்றேன்.
அவரது 'ஜீவகீதம்' நாவல் இந்திய மொழிகள் பலவற்றில் 'தேசிய புத்தக அறக்கட்டளை' யினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவரது சமூக நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற நாவலாக இதனைக் கூறலாம்.
தற்போது வானதி பதிப்பக வெளியீடுகளான , ஜெகசிற்பியனின் ஜீவகீதம், நந்திவர்மன் காதலி, பத்தினிக்கோட்டம் ஆகியவை அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாகவும் கிடைக்கின்றன. விபரங்கள் வருமாறு:
1. ஜீவகீதம் - https://amzn.to/4oXYZaD
2. பத்தினிக் கோட்டம் (2 பாகங்கள்) -
பாகம் 1 - https://amzn.to/4qGnt9Y
பாகம் 2 - https://amzn.to/4oveLKd
3. நந்திவர்மன் காதலி - https://amzn.to/4oVlAo7
Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.
பெண்களுக்கான உரிமைக்குரல் நடிகை கெளரி கிஷனின் எதிர்ப்புக் குரல்!
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பம் (chatGPT) உதவி; VNG]
நடிகை கெளரி கிஷன் மிகவும் கடுமையாக ஆர்.எஸ்.கார்த்தி என்னும் யு டியூப் ஊடகவியலாளரைச் சாடும் காணொளி இது. யு டியூப் ஊடகவியலாளர் கெளரி கிஷனுடன் நடித்த நடிகரிடம் கெளரி கிஷனின் எடை எவ்வளவு என்று கேட்டிருக்கின்றார்.அது தான் கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அது Body Shaming என்று குற்றஞ் சாட்டியிருக்கின்றார் அவர். அவரது ஆத்திரம் நியாயமானது. அனைவரும் அவருக்காதரவாகக் குரல் கொடுப்பது அவசியம்.
இவ்வளவு நடந்த பிறகு யு டியூப்காரர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் தன் கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியிருக்கின்றார். இந்தக் கூற்று ஒன்றே போதும் அவர் இன்னும் தன் குற்றத்தை உணரவில்லையென்பதற்கு. எல்லோரும் எதிர்ப்பதால் , பயந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார். இவர் தன் குற்றத்தை, தவறினை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்விதத் தவறுகளற்றுத் தனது வேலையைச் செய்வது அவசியம். அதற்கு அவர் இச்சம்பவத்திலிருந்து இத்துறையில் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இவரைப்போன்ற தவறான ஊடகவியலாளர்கள் மலிந்து விட்டதற்குக் காரணமென்ன? இணையத்தொழில் நுட்பம், குறிப்பாகச் சமூக ஊடகத்துறையின் வருகை ஆக்கபூர்வமானது என்றாலும் , கூடவே தீய சக்திகளின் கைகளில் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கும் நிலையினையும் உருவாக்கியுள்ளது. நவீனத் தொழில் நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்றுதான் இவரைப்போன்ற ஊடகவியலாளர்களின் வருகையும்.
எவ்வித ஊடகத்துறை அனுபவங்களுமற்று, அத்துறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவற்று, சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்விதமான ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் வகையில் இணையத் தொழில் நுட்ப விதிகள் மாற்றப்பட வேண்டும், அல்லது உருவாக்கப்பட வேண்டும்.
நடிகை கெளரி கிஷனின் முதலாவது குற்றச்சாட்டு ஏன் நடிகைகளிடம் அவர்கள் எடையைக் கேட்கின்றீர்கள்? ஏன் நடிகர்களிடம் கேட்பதில்லை. சரியான கேள்வி. நியாயமான குற்றச்சாட்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறைகளில் முதலிடத்தில் இருப்பது திரைப்படத்துறைதான். பெண்களைப் போகப்பொருளாகக் கருதும், பாலியல் சுரண்டல் மலிந்த துறை. இத்துறையில் அவ்வப்போது கெளரி கிஷன் போன்ற பெண்கள் தம் ஆளுமை, சுய கெளரவம் பாதிக்கப்படுகையில் துணிந்து குரல் எழுப்புகின்றார்கள். இக்குரல்கள் வரவேற்புக்குரியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை.
கெளரி கிஷனின் அடுத்த குற்றச்சாட்டு - எதற்காக ஆண் நடிகரிடம் இக்கேள்வியைக் கேட்க வேண்டும். இதுவும் மிகவும் சரியான குற்றச்சாட்டே. இவ்விதம் சக நடிகையின் எடை பற்றி அவருடன் நடித்த சக நடிகரிடம் கேட்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. அந்நடிகையை அவமானப்படுத்துவதும் போலத்தான்.
புதுமுக நடிகயாக இருந்தாலும், எவ்வித எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கெளரி கிஷன் குரல் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவரைப் பாராட்டுவோம். அவர் இவ்விதம் உரிமைக் குரலெழுப்பியிருப்பது அவருக்காக மட்டுமல்ல, இத்துறையிலுள்ள பெண்கள் அனைவருக்காகவும்தான்.
கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பிய சம்பவத்தை விபரிக்கும் காணொளி இதுதான் - https://www.youtube.com/watch?v=cVF7ALfCbKs
Friday, November 7, 2025
புகலிடச் சிறுகதை - ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! - வ.ந.கிரிதரன் -
[‘தாயகம்’ (கனடா) பத்திரிகையில் வெளியான இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]
ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை. ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.
புகலிடச் சிறுகதை: யன்னல்! - வ.ந.கிரிதரன் -
Thursday, November 6, 2025
‘குடிவரவாளன்’: வ.ந.கிரிதரனின் மனதைத் தொடும் சுயசரிதைக் குறிப்பு. - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -
முனைவர் ஆர். தாரணி , வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியானது) பற்றி ஆங்கிலத்தில் ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரை. இதனைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பது கூகுளின் நனோ பனானா (Google Nano Banana) செயற்கை நுண்ணறிவு (AI)
"சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை விழுங்க வேண்டும், சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்" - சர் பிரான்சிஸ் பேக்கன் ஆங்கில எழுத்தாளர் (1561 - 1626)
'குடிவரவாளன்' இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புனைகதையில் ஒரு பெரிய பாய்ச்சல். அந்நிய நாட்டில் ஒரு நம்பிக்கைச் சோர்வுற்றிருந்த் ஆன்மாவின் இருத்தலியல் நெருக்கடியைச் சித்திரிப்பதால், இந்தப் புத்தகம் மிகுந்த "கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்" படிக்கப்பட வேண்டியது. கதை ஊக்கமளிப்பதுடன், ஒவ்வொரு உள்ளத்திலும் உற்சாகத்தைப் பற்றவைக்கிறது. இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம், இளங்கோ என்ற கதாபாத்திரத்தின் உயிர்வாழும் போராட்டத்தின் மீது அதிகம் இருந்தாலும், இது இலங்கையின் கொடூரமான இனப்படுகொலைக்கு ஒரு வலுவான சான்றாக நிற்கிறது, இது உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றும் கொதிப்படையச் செய்கிறது. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் சிங்களக் காடையர்களின் கொடூரத்தால் தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது புத்தகத்தில், தனது முதல் அனுபவமாக எழுத்தாளர் வ.ந.கிரிதரன் முன்வைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தில் தங்கள் உயிர்கள், குடும்பங்கள், உடைமைகள், தேசியம் மற்றும் மனிதன் என்ற அடையாளத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு இது ஒரு தனித்துவமான அஞ்சலியாகும். புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில், கலவரத்தில் சிக்கிய இளங்கோ என்ற இளைஞனின் அவலநிலையை எழுத்தாளர் தெளிவாக விளக்குகிறார். தனது சொந்த நாட்டில், இளங்கோ இனவெறியர்களால் சிக்கித் தவிப்பதாக உணர்ந்து, அரக்கர்களிடமிருந்து தப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இளங்கோவின் கண்களினூடாக கலவரத்தைப் பற்றி எழுத்தாளர் மனதை உருக்கும் விதமாக விவரிக்கிறார்.
Wednesday, November 5, 2025
ஆய்வுக் கட்டுரை: உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின் (வெண்ணிறக் கடற்பறவை) தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு! - முனைவர் . ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி –
| முனைவர் ஆர். தாரணி | ணி |
உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின் (வெண்ணிறக் கடற்பறவை) தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு! - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி –
இலக்கியம் என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு சமூகத்தின் கண்டறிய முடியாத அனுபவங்களின் வெளிப்பாடாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் மட்டுமே நிகழ்வது சாத்தியமற்றது. உலக இலக்கிய வரலாற்றில், காதல், வீரம் மற்றும் மகிழ்ச்சியான முடிவுகளை விட பேரழிவுகளே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் துயரங்கள் அவர்களுக்கு எப்போதும் உரிய நீதியைப் பெற்றுத்தந்துள்ளன. இனப் பின்னணி காரணமாக அச்சுறுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் துயரங்கள் மேற்கத்திய நாடுகளில் பல சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளன. வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலும், உயிர்வாழ்வதற்கான நெருக்கடியே எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் முதலிடத்தில் நிற்கிறது. மனிதன் இந்த கிரகத்தில் தனக்கென ஒரு இடத்தைக் கண்டறிய போராடுகிறான். தேசியம், பிறப்பிடம், சமூகம், குடும்பம், பாரம்பரியம், கலாச்சாரம், மொழி ஆகியவை ஒரு மனிதனின் உயிர்வாழ்வதற்கான உந்துதலை உறுதிப்படுத்தும் விஷயங்களாகும்.
Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.
Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.
அமெரிக்கர்கள் பெருமையுறும் தருணம். உலகம் அமெரிக்கர்களை விருப்புடனும், வியப்புடனும் நோக்கும் தருணமும் கூட. வாழ்த்துகள்!
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
இலங்கை மலையகத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகள் இரண்டு!
தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை'
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் முக்கிய நாவல்களிலொன்று 'காலங்கள் சாவதில்லை'. மலையகத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்று.
வீரகேசரி பிரசுரமாக வெளியான இந்நாவலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/965/96468/96468.pdf
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'!
தமிழ் இலக்கியத்தில் முக்கிய நாவல்களிலொன்று. குறிப்பாக மலையகத்தமிழ் மக்களின் ஆரம்பக் காலத்தை மையமாகக் கொண்டது. கனவுகள், ஏக்கங்களுடன் நல் வாழ்வுக்காகத் தமிழகத்திலிருந்து மலையகம் கொண்டு வரப்பட்ட மக்களின் இருத்தலுக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த நாவல்.
எனக்கு இந்நாவலை வாசிக்கையில் தகழி சிவசங்கரம்பிள்ளையின் 'தோட்டி மகன்' நாவல் நினைவுக்கு வந்தது. அதில் மூன்று தலைமுறைகளை மையமாகக் கொண்டு அம்மக்களின் வாழ்க்கையை விபரித்திருப்பார் தகழி. அவ்விதமாகவே இந்நாவலும் பின்னப்பட்டுள்ளது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
சிதைந்திருந்த அட்டைப்படம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் சிறிது மெருகூட்டப்பட்டுள்ளது.
நாவலை வாசிக்க - https://noolaham.net/project/1090/108981/108981.pdf
Monday, November 3, 2025
ஆய்வு: ஆன்மாவின் இருண்ட இரவு - கனேடிய தமிழ் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலில் இலங்கைத் தமிழ் அகதிகளின் இருத்தலியல் நெருக்கடி பற்றிய ஆய்வு – முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் கல்லூரி பெண்கள் –
ஆங்கில ஆய்விதழான Scholarly International Multidisciplinary Print Journal’ (ஜனவரி - பிப்ரவரி 2017) இதழில் முனைவர் ஆர்.தாரணி எழுதிய வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான An Immigrant பற்றி (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தது) பிரசுரமான ஆய்வுக் கட்டுரையின் ('The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan' என்னும் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இம்மொழிபெயர்ப்பைச் செய்திருப்பது செயற்கைத் தொழில் நுட்பமான கூகுள் நனோ பனானா (Google Nano Banana). மொழிபெயர்ப்பை இரண்டு நிமிடங்களுக்குள் அது செய்தது.
ஆன்மாவின் இருண்ட இரவு: கனேடிய தமிழ் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின்
'குடிவரவாளன்' நாவலில் இலங்கைத் தமிழ் அகதிகளின் இருத்தலியல் நெருக்கடி
பற்றிய ஆய்வு
– முனைவர். ஆர். தாரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு கலைக் கல்லூரி பெண்கள் –
சுருக்கம்
![]() |
| முனைவர் ஆர். தாரணி |
இந்த ஆய்வுக் கட்டுரை 'குடிவரவாளன்' நாவலின் கதாநாயகனின் இருத்தலியல் இக்கட்டை ஆராய முற்படுகிறது, அவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் உலகெங்கிலும் உள்ள அத்தகைய குடியேறிகளின் உடல், உளவியல், பன்முக கலாச்சார, இன, அரசியல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன.
முக்கிய சொற்கள்: கனேடிய-தமிழ் எழுத்தாளர், வ.ந. கிரிதரன், கட்டாய இடப்பெயர்வு, புலம்பெயர்வு, தமிழ் இனம், அகதிகள், விருப்பமில்லாத குடியேறி, அடையாள நெருக்கடி, அரசியல் புகலிடம்.
Sunday, November 2, 2025
காலனிய எதிர்ப்புச் சிந்தனையாளரும், விடுதலைப்போராட்ட அமைப்புத் தலைவரான அமில்கார் கப்ராலின் ( Amilcar Cabral) 'வர்க்கத்தற்கொலை' (Class Suicide) என்னும் கோட்பாடு மற்றும் போராட்டங்களில் அந்நியப்படுத்தப்படும் மக்கள் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
| அமில்கார் கப்ரால் ( Amilcar Cabral) |
நேற்று 'நந்தலாலா' ஜோதிகுமார் அலைபேசியில் அழைத்து அண்மையில் எழுதிய எம்போராட்டத்தின் தோல்விக்கான காரணங்கள் பற்றிய நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு அமைப்புகள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப்போனமை முக்கிய காரணங்களிலொன்று. அது பற்றியும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்றார். இது பற்றி எம்மவர் யாரும் இதுவரையில் போதிய கவனம் செலுத்தவில்லையென்றார். அது மிகவும் முக்கியமான கூற்று. நம் மத்தியில் யாராவது இவ்விடயம் பற்றி, அதாவது போராட்டத்தில் மக்களின் அந்நியப்படுத்தல் பற்றி, அல்லது மக்களிடமிருந்து அமைப்புகளின் அந்நியப்படுத்தல் பற்றி அதிகமாக எழுதியதாக அல்லது கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
மக்களுக்காகவே எமது போராட்டம் என்று சூளுரைத்து ஆயுதம் தூக்கிய அமைப்புகள் அனைத்துமே , பின்னர் அவற்றின் செயற்பாடுகள் காரணமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயின. மக்களைப் போராட்டத்த்திலிருந்து அந்நியப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டன. ஏன்?
Saturday, November 1, 2025
நவீன விக்கிரமாதித்தன் (பாகம் இரண்டு) - அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்! - வ.ந.கிரிதரன் -
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
அத்தியாயம் இரண்டு: கண்ணம்மாவுடனோர் உரையாடல்: 'காலவெளிச்சுரங்க'மும் அது எழுப்பிய கேள்வியும்!
நான்:
நினைவின் வலிமை என்னை நீ உணர வைக்கும்.
நினைவின் வலிமை உன்னை நான் நினைக்க வைக்கும்.
நினைவின் வலிமையை உன்னைப்போல்
நானும் நம்புவனடி கண்ணம்மா!
அதனால்தான் உதயத்தில் மறைந்து
அந்தியில் முகம் காட்டும் மதியாகி
முறுவலித்தாய். இல்லையா கண்ணம்மா!
ஒளிக்கும் ஒரு வேகமுண்டு!
ஒளி கடக்கும் தூரத்துக்குமொரு நேரமுண்டு.
ஆயின்,
மனவேகத்துக்கு ஓர் எல்லையுண்டா
கண்ணம்மா!
இருப்பின் எல்லையை நிர்ணயிப்பது
ஒளி! இலலையா கண்ணம்மா!
ஒளி எல்லை தாண்டிப் பயணித்தல்
சாத்தியமுண்டாடி!
ஆனால்,
எண்ண வேகத்தைத் தடுக்கும்
எல்லையென்று ஒன்று உண்டா
என் கண்ணம்மா!
பிரபஞ்சங்கள் தாண்டிச் செல்வதை
அனுமதிப்பதில்லை ஒளி.
இல்லையா கண்ணம்மா?
ஆயின்,
எண்ணவேகத்தில் என்னால்
எத்தனை பிரபஞ்சங்களையும் தாண்டிப்
பயணிப்பதைத் தடுப்பவர் எவருமுண்டா?
கண்ணம்மா! பதில் கூறடி
என் செல்லம்மா?
சமாந்தரப் பிரபஞ்சங்களுக்குள் புகுந்து விளையாடும்
சாதனையை என்னால் சாதிக்க முடியுமடி
என்னால் என்றால் நம்புவதில் உனக்கு
ஏதும் தயக்கமுண்டாடி கண்ணம்மா?
'வேர்ல்ட் சீரிஸ்' (World series ) 2025: LA Dodgers vs Toronto Blue Jays
இன்று மாலை எட்டு மணிக்கு பேஸ் பால் விளையாட்டின் 2025 ஆண்டுக்குரிய 'வேர்ல்ட் சீரிஸி'ன் (World Series) இறுதிப்போட்டியான ஏழாவது போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை களத்தில் இருக்கும் குழுக்கள் : லொஸ் ஏஞ்செல்ஸ் டொட்ஜர்ஸ் (Los Angeles) & டொரோண்டோ புளூ ஜேய்ஸ் (Toronto Blue Jays).
இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் இரு குழுக்களும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளதால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் போட்டியாக இந்த ஏழாவது போட்டி நடைபெறவுள்ளதால் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் பரபரப்பும், ஆவலும் பெருகியுள்ளன.
பேஸ் பாலின் முக்கிய அம்சம் அதன் Bases (முதலாவது பேஸ், இரண்டாவது பேஸ், மூன்றாவது பேஸ் & ஹோம் பேஸ்) அதன் காரணமாகவே விளையாட்டு Baseball என்றழைக்கப்படுகின்றது.
அணி ஒவ்வொன்றிலும் 9 வீரர்கள் இருப்பார்கள். 9 இன்னிங்ஸ் நடைபெறும். அதில் அதிக ஓட்டங்களை எடுக்கும் அணி வெற்றி அணி. பந்தடிப்பவை Batterர் என்றும், பந்தைப் பிடிப்பவரை Catcher என்றும் அழைப்பர். இவர் கிரிக்கட் விக்கட் கீப்பரை ஒத்தவர். பந்து வீசுபவரைப் பிட்சர் (Pitcher) என்றழைப்பர். வீரர்களைப் பற்றிய விபரங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. காணொளியிலும் விபரமாக விபரிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டை இரசிப்பதற்கு அது பற்றிய புரிதல் அவசியம். இதுவரை இவ்விளையாட்டு பற்றிஅறியாதவர்களுக்கு அது பற்றிய புரிதலைத் தரும் நல்லதொரு காணொளி இக்காணொளி.
இதனை முழுமையாகப் பாருங்கள். இன்றிரவு இறுதிப் போட்டியை இரசியுங்கள்.
https://www.youtube.com/watch?v=E160D9rEY0M
Friday, October 31, 2025
காலத்தால் அழியாத கானம்: 'காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்."
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கவிஞர் வாலியின் கவித்துவமான வரிகளில் , பாடகர் டி.எம்.எஸ்ஸின் இன் குரலில் , மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் மனத்தை மயக்கும் இசையில் ஒலிக்கும் காலத்தால் அழியாத கானங்களில் ஒன்று. எத்தனை தடவைகள் கேட்டிருப்பேன். இன்னும் அலுக்கவில்லை. சலிக்கவில்லை.
'நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்'
இவ்வரிகள் கேட்கும்போதே இன்பத்தைத் தரும் வரிகள். காற்று வாங்கப் போய் எத்தனை தடவைகள் இயற்கைக் கவிதையை இரசித்து திரும்பியிருப்போம். அனுபவம் உருவாக்கிய வரிகள் இவை.
"நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை"
சங்கப் பாடல்களிலிருந்து ஊர் துஞ்சும் இரவுகளில் துஞ்சாதிருக்கும் காதல் உள்ளங்களின் உணர்வுகளை இரசித்து வந்திருக்கின்றோம். தமிழ்த் திரைப்படப்பாடல்களாகவும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். அதன் ஒரு வடிவம் தானிந்தப்பாடல் வரிகளும்.
"கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை"
காதல் வயப்பட்ட உள்ளங்கள் அனுபவிக்கும் இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்.
"என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை...
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை"
பார்வையை மீனாகவோ அல்லது நீந்துமோர் உயிரினமாகவும், பருவத்தை ஓடையாகவும், உள்ளத்தை ஊஞ்சலாகவும், மேடையாகவும் உவமையாக்கியுள்ள கவிஞரின் கவித்துவம் சிறப்பானது. காதலனொருவன் தன் காதலுக்குரியவளின் நினைவால் விரகதாபத்தால் வாடுவதை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க, அனுபவ முத்திரைகளை உள்வாங்கிய வரிகள்.
Thursday, October 30, 2025
'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva): "சூட மானி கேபலால"
'பைலா' மன்னன் டெஸ்ட்மண்ட் டி சில்வா (Desmond De Silva) பாடிய் பாடல்கள் எப்பொழுதும் பசுமை நிறைந்த நினைவுகளாக எம் நினைவில் நிலைத்து நிற்பவை. குறிப்பாகச் "சூட மானி கேபலால" துள்ளிசைப் பாடலைக் குறிப்பிடலாம்.
'பைலா' போர்த்துக்கேயரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இசை வடிவம். இன்றுவரை உயிர்த்துடிப்புடன் நிலைத்து நிற்கும் இசை வடிவம்.
இப்பாடலைக் கேட்கும் எவரையும் உற்சாகம் பற்றிக்கொள்ளும், துள்ளியெழுந்து ஆட வைக்கும். அப்படித்தான் எம் மொறட்டுவைப் பல்கலைக்கழகக் காலகட்டத்தில் எம்மை ஆட வைத்தது.
அக்காலகட்டத்தில் பல்கலைககழகத்தில் நடந்த பல்வகைக் களியாட்ட இரவுகளிலும் , சுற்றுலாக்களிலும் தவறாது ஒலித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல்.
இவர் தென்னிலங்கையின் மாத்தறையில் 13 ஜூலை 1944 பிறந்தவர். பல்வேறு இசைக்குழுக்களில் பாடிப்புகழ்பெற்ற இவர் தனக்கென்றோர் இசைக்குழுவை வைத்திருந்தவர். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர். ஆட்டிசம் ( Autism ) நரம்பு வளர்ச்சிக் குறையுள்ளவர்களுக்காகக் குரல் கொடுத்த பாடகர். அதற்காக ஓர் இசை நிகழ்ச்சியையும் கொழும்பில் நடத்தியவர். திரைப்படப்பின்னணிப் பாடகராக, பைலா இசைப் பாடகராக, சமூகச் செயற்பாட்டாளராக மக்கள் மனத்தில் தன் பாடல்கள் மூலம் நிலைத்து நிற்பவர் 'பைலா' மன்னன் டெஸ்மண்ட் டி சில்வா.
இறுதிக்காலத்தில் தன் மூன்றாவது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த இவர் 9 ஜனவரி 2022 அன்று மாரடைப்பால் மறைந்தார்.
"சூட மானி கேபலால" பாடலைக் கேட்டுத்துள்ளி ஆடிட -
https://www.youtube.com/watch?v=HCG0EBbdgI4
[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப [Google Nano Banana] உதவி:VNG]
இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலையின் 'யாழ்தேவி'ப் பாடல்!
இலங்கைப் பாடகர் அமுதன் அண்ணாமலை யாழ்தேவி பற்றியொரு பாடல் பாடியிருக்கின்றார். அது: "இரயில் ஓடுது யாழ் இரயில் ஓடுது"
பாடகர் ஏ.ஈ.மனோகரனின் 'யாழ்தேவி'ப் பாடல்!
இலங்கைப் பாடகர் ஏ.ஈ.மனோகரனும் 'யாழ்தேவி' பற்றியொரு பாடல் பாடியுள்ளார். அது "உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி"
Tuesday, October 28, 2025
கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!
இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை இப்பெண் பேசுவது போல் காணொளியாகவும் ஆக்க முடியும். நான் தற்போது பாவிப்பது இலவச சேவையென்பதால் அதற்கான வசதிகள் இல்லை.
Monday, October 27, 2025
நினைவில் நிற்கும் வான் பாயும் பட்டாணிச்சுப் புளியங்குளம்!
என் பால்யப் பருவத்து அனுபவங்களைப் பற்றி நிறையவே பதிவுகள் எழுதியிருக்கின்றேன். அவற்றில் வவுனியா பட்டாணிச்சுப் புளியங்குளத்தின் , வான் பாயும் அணைப் பகுதியை என்னால் மறக்கவே முடியாது.
Sunday, October 26, 2025
கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே. இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை.
இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.
எண்ணங்களே வாழ்வு என்பதை எடுத்துக்காட்டும் காணொளி!
* Digiat Art (Google Nano Banana) help: VNG
வாழ்க்கைக்கு ஆரோக்கியமான விளைவுகளைத் தருபவை நேர்மறையான , நம்பிக்கை மிக்க எண்ணங்களே. எண்ணும் எண்ணங்களுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது என்பது உளவியல் நிபுணர்கள் பலரின் கண்டு பிடிப்பு.
வாழ்வில் இன்பமென்பதை உணர்வது மனத்தின் உணர்வுகள் மூலமே. மனிதரின் செயற்பாடுகள் அனைத்தையும் இறுதியில் இன்பத்தை அடைதலையே நோக்கமாகக் கொண்டு அமைகின்றன.
இன்பம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியிருப்பதில்லை. ஒருவருக்குப் பயணத்தில் இன்பம். ஒருவருக்குக் கலைகளில் இன்பம். ஒருவருக்குச் செல்வத்தைப் பெருக்குவதில் இன்பம். ஒருவருக்குச் சேவை செய்வதில் இன்பம். ஒருவருக்கு எழுதுவதில், வாசிப்பதில் இன்பம். இவ்விதம் மனிதரின் செயல்கள் அனைத்துமே அவரவர் அடையும் இன்பத்தை நோக்கியே அமைந்திருக்கின்றன.
இக்காணொளி நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய வேண்டிய இன்பத்தை, இலக்குகளை எப்படி அடையலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் காணொளி. நீங்கள் எண்ணும் எண்ணங்களே உங்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைய உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் காணொளி.
இவ்விதமான நூல்கள் பல உலகின் பல்வேறு மொழிகளிலும், தமிழ் உட்பட, வெளியாகியுள்ளன. காணொளிகளும் அவ்விதம் வெளியாகியுள்ளன. அவற்றில் நல்ல காணொளிகளில் ஒன்று இந்தக் காணொளி.
இறுதிவரை இக்காணொளியைத் திறந்த மனத்துடன் பாருங்கள். நம்பிக்கையுடன் பாருங்கள்.
Saturday, October 25, 2025
காலத்தால் அழியாத கானம்: 'அம்மா என்றால் அன்பு'
கே.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளை, அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடுபவர் ஜெயலலிதா.
கண்களை மூடிக்கொண்டு கேட்டுப் பாருங்கள் கர்நாடக சங்கீதம் நன்கறிந்து பாடும் பாடகியொருவரின் குரலோ என்று பிரமித்துப் போவீர்கள்.
https://www.youtube.com/watch?v=0kZMaWiExME&list=RD0kZMaWiExME&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
காலத்தால் அழியாத கானம்: 'காசிக்குப் போகும் சந்நியாசி'
'சந்திரோதயம்' திரைப்படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில், #கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள் டி.எம்.எஸ் & சீர்காழி கோவிந்தராஜன். நடிப்பு: #எம்ஜிஆர் , நாகேஷ் & மனோரமா.
அப்பாவுக்குப் பிடித்த இப்பாடல் எனக்கும் பிடித்தது. பாடகர்களின் குரல்களையும், எம்ஜிஆர், நாகேஷின் நடிப்பையும் கேட்கும்போதெல்லாம் இரசிப்பேன். கூடவே அப்பா பற்றிய நினைவுப்பாம்பும் ஆழ்மனப்புற்றிலிருந்து எழுந்து தலை விரித்தாடும்.
இத்திரைப்படம் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம். இப்பாடலின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் , நாகேசுடன் சிறிது நேரம் உரையாடுவார். அப்போது சுடப்படுவதற்கு முன்பிருந்த எம்ஜிஆரின் இன் குரலையும் கேட்கலாம். கேட்கையில் சுட்டவர்மீது ஆத்திரம் வருவதைத் தடுக்க முடியாது.
https://www.youtube.com/watch?v=UwpvmT6_rvY&list=RDUwpvmT6_rvY&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
Wednesday, October 22, 2025
கரூர் துயரும் , எழுத்தாளர் ஜெயமோகனின் 'சாமான்ய மக்களின் கும்பல்' மனநிலை பற்றிய கருத்தும் பற்றி..
அண்மையில் கரூரில் நடந்த , தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் மக்களுக்கிடையில் நிலவும் கும்பல மனநிலை என்று ஒரு புதிய தத்துவத்தை, ஹிட்லரின் பாசிதத்தை உதாரணமாகக் காட்டி, எடுத்துரைக்கின்றார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்குரிய யு டியூப் காணொளி - https://www.youtube.com/watch?v=VjJ3mJiR4mg
ஜெயமோகன் சொற் சித்தர். சொற்களை வைத்து விளையாடுவதில் வல்லவர். அவரது இவ்வுரையும் அத்தகையதுதான். தனக்கேரியுரிய சொற் சிலம்பமாடும் திறமையினை இங்கு அவர் பாவித்துச் சொற் சிலம்பம் ஆடுகின்றார். நடந்த மக்களின் அழிவுக்குக் காரணம் சாமான்ய மக்களின் கும்பல் மனநிலையே காரணமென்று கூறுவதன் மூலம் உண்மையை மூடி மறைக்கின்றார். அவர் இதனைத் திட்டமிட்டுச் செய்யவில்லை.அவர் தன் சுய தர்க்கச் சிந்தனையின் மூலம் அவ்விதமானதொரு முடிவுக்கு வந்து, அதனடிப்படையில் நடந்த அழிவுக்குக் காரண்மாகப் புதியதொரு தத்துவத்தை அல்லது கோட்பாட்டை முன் வைக்கின்றார். அவ்வளவுதான்.
Tuesday, October 21, 2025
சிறுகதை: சாந்தா அக்கா! - வ.ந.கிரிதரன் -
- இக்கதையில்
வரும் சாந்தா அக்கா போன்ற ஒருவர் என் வாழ்க்கையிலும் இருந்திருக்கின்றார்.
அவர் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த செய்தியினை அறிந்தபோது எழுந்த
உணர்வுகளின் விளைவே இச்சிறுகதை. -
'டேய் கேசவா, சாந்தா அக்கா செத்துப் போய்விட்டாவாம். தெரியுமா?'
சின்னம்மா
வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் அம்மாவின் கடைசிச்
சகோதரி. இன்னும் உயிருடனிருக்கும் சகோதரி. வயது எண்பதைத்தாண்டி விட்டது.
பார்த்தால் ஐம்பதைத்தாண்டாத தோற்றம். மனுசி இன்னும் காலையில் ஒரு மணி நேரம்
நடை , யோகா , மரக்கறிச் சாப்பாடு, நிறைய பழங்கள் என்று வாழும் மனுசி.
'என்ன சின்னம்மா, சாந்தா அக்கா செத்துப் போய் விட்டாவா? எப்ப சின்னம்மா?'
"இன்றைக்குத்தான் விடிய ஜேர்மனியிலை போய்விட்டாவாம்."
"என்ன
அவ ஜேர்மனியிலையா இருந்தவா? இவ்வளவு நாளும் நான்
நினைச்சுக்கொண்டிருக்கிறன் அவ ஊரிலைத்தான் இன்னும் இருக்கிறா என்று. அவ
எப்ப ஜேர்மனிக்குப் போனவா சின்னமா?"
என்னைக் கவர்ந்த வானொலி ஊடகவியலாளர் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' - 'கவரிமா'
நான் தொடர்ச்சியாகச் CMR 101.3 FM தமிழ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்பவன் அல்லன். ஆனால் ,அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. குறிப்பாகச் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சி என்னைக் கவர்ந்த ஒன்று. வெள்ளி இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடக்கும் நிகழ்ச்சி. ஒரு சொல்லைப்பற்றிய பொதுவான விபரத்தைத் தந்து விட்டு , நேயர்களைக் இரண்டு கேள்வி கேட்க விடுவார்கள். நேயர்களின் கேள்விகள் மூலம் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் இறுதியாக வரும் நேயர்கள் பெரும்பாலும் விடையினை ஊகித்து விடுவார்கள்.
Sunday, October 19, 2025
நியூ யோர்க் மாநகரத்தில் 'குடிவரவாளன்'!
புகலிடச்சிறுகதை: ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG] தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...













.png)
.png)



.png)




