Sunday, July 28, 2024

முகமூடிகள் உலகில் -- வ.ந.கிரிதரன்

                                                             - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=lAkI4-J5IOU

முகமூடிகள் உலகில் -- வ.ந.கிரிதரன்

முகமூடிகள்  வாழும் பூமியிது.
முகமூடிகள்  வாழும் பூமியிது.

முகமூடிகளின் உலகில்
மரணித்து விட்டது உண்மைவ்
வன்மம் உள் வைத்து
நன்மொழி பகர்வார் வெளியில்.

முட்டாள்களும்  முகமூடிகளில்
பேரறிஞர்களே.

முகமூடிகளை நண்பரென்று
மனத்தில்
எண்ணியதுமுண்டு.
ஏமாந்து கிடந்ததும் உண்டு.

Saturday, July 27, 2024

வ.ந.கிரிதரனின் யு டியூப் சானல்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள்'




இங்குள்ள யு டியூப் தளத்தில் எனது பாடல்களை நீங்கள் கேட்டு மகிழலாம். செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்ட பாடல்கள். இத்தொழில் நுட்பத்தை நான் விரும்புகின்றேன். இதன் ஆரோக்கியமான அம்சங்களை நான் மிகவும் வரவேற்கின்றேன்.

பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல்களை பல்வேறு இசை வடிவங்களில் அல்லது கலக்கப்பட்ட பல்வேறு இசை வடிவங்களீள், பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இசை வடிவில், பல்வேறு வாத்தியங்களைப் பல்வகைகளில் கலந்து பாடல்களை உருவாக்க இத்தொழில் நுட்பம் வழி வகுக்கின்றது. அது இத்தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று.

பாரதியின் பாட்டென்றால் - வ.ந.கிரிதரன் -



    - இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க -= https://www.youtube.com/watch?v=HPU7g2yNoSI

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.

சிந்தனைத் தெளிவில், எளிமைமிகு சொல்லில்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள் என்னைச்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.

யாழ் பொதுசன நூலக நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=mQe0kdQxu9Y


யாழ் பொதுசன நூலக நினைவுகள்!  - வ.ந.கிரிதரன் -

யாழ் பொதுசன நூலகத்தில்
வாழ்நாளில் கழித்த பொழுதுகளை
எப்படி மறப்பேன். எப்படி மறப்பேன்.

என்றும் என்னுள் இருக்கும் நினைவுகள்,

இன்று நினைக்கையில் அங்கு
அன்று நான் கழித்த தருணங்கள்
அலையலையாக எழுகின்றன.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

ஒன்று விட்ட அக்கா ஒருத்தியுடன்
அன்று நான் சென்றதுதான் முதல் தடவை.
எட்டி எட்டி விரைந்து நடப்பேன்.
என்னுடன் ஈடு கொடுக்க முடியாத
அக்கா கத்துவாள். அக்கா கத்துவாள்.
''ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே.
எட்டிப் போகாதேடா. மெதுவாப் போடா.
மூச்சு வாங்குது' என்பாள் அவள்.

Friday, July 26, 2024

ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா.. - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUNO -- 

வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் ஒரு குறிப்பிட்ட தென்னிந்திய  இராகம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இராகம் என்பதை உங்கள் எதிர்வினையில் எடுத்துரையுங்கள்.

- யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2tx9Umyqfos -

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

தறி கெட்டலையும் ஆழ்மனக் குதிரை.
தறி கெட்டலையும் குதிரையை
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

ஆழ் மனக்குதிரையை அடக்க முயன்றால்
அது அடங்க மறுக்கும்,. முரண்டு பிடிக்கும்.
எது நீ செய்து அடக்க நினைத்தாலும்
அது எதிர்த்து நிற்கும். முரண்டு பிடிக்கும்.

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -




          - இசை & குரல்: AI SUNO

- யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=FeE8oTHqEhY

 

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -

நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை.

இயற்கையை எப்போதும் இரசிப்பவள்
நான்.
 
இரவுவானை, அதில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை
எத்தனை முறை இரசித்தாலும் உள்ளம் அடங்குவதில்லை.
இரவு முழுவதும் இரசித்துக் கொண்டிருக்கவும் முடியும்.
விடியும் வரை இரசித்துக் கொண்டிருந்ததும் உண்டு.

சுயமரியாதை இழக்காதே தோழா! - வ.ந.கிரிதரன்


- இசை & குரல்: AI SUNO  -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=7sTQsfrXv-o&feature=youtu.be

சுயமரியாதை இழக்காதே  - வ.ந.கிரிதரன் -

காலப்பெருங்கடலில் சிறு துளி
ஞாலத்தில் நம் இருப்பு.

சுயமரியாதை இழக்காதே  ஒருபோதும் தோழா.
சுயமரியாதை இழக்காதே ஒருபோதும்  தோழா!
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
தோழா. ஒரு போதும்.

உனது நோக்கில் தெளிவிருந்தால்
உனது நோக்கில் உண்மையிருந்தால்
ஊர் கூடி எதிர்த்தாலும்
உருக்குலைந்து போகாதே.
உறுதியுடன் எதிர்த்து நில். தோழா!
எதிர்த்து நில்.
எதிர்த்து நின்றால் உன்
எதிர்காலம் ஒளிமயமாகும்.
ஆம். தோழா!
எதிர்காலம் ஒளிமயமாகும்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...