Wednesday, November 20, 2024

தேவகாந்தன் - ஊர் & சதுரக் கள்ளி

- எழுத்தாளர் தேவகாந்தன் -

ஒரு காலத்தில் ஊர் என்றால் அங்கு நிலவிய சமூகப் பிணைப்புகள் நினைவுக்கு வரும், ஊர் பற்றிய நினைவுகளுடன் யுத்தம் முடிந்தபின் செல்லும் ஒருவரின்  ஊர் பற்றிய மனச்சித்திரம் எவ்விதம் சீர்குலைகிறது என்பதை விபரிக்கும் தேவகாந்தனின் சிறுகதையான ஊர் நல்லதொரு சிறுகதை. நீண்ட சிறுகதையல்ல. ஆனால் கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதை. போர்ச்சூழல் புதியவர்களை ஊருக்குப் புலம்பெயர வைத்திருக்கின்றது. அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளைக்கூட கவனிக்காத ஊர் அவருக்கு ஊர்பற்றிய மனச்சித்திரத்தைச் சிதைக்கப் போதுமானது. இங்கு இருவிதமான புலம்பெயர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று புகலிடம் நாடிய வெளிநாட்டுப் புலம்பெயர்வு. இன்னுமொன்று உள்நாட்டுப் புலம்பெயர்வு. ஒரு காலத்தில் ஊரில் சமூக வாழ்வு சிறப்பாக இருந்தது. ஒருவருக்கொன்றென்றால் அது  எல்லோருக்கும் தெரியும். ஓடிச்சென்று உதவுவார்கள். அதை ஊர் திரும்பும் அவரால் காண முடியவில்லை. யுத்தம் அதனைச் சிதைத்து விட்டிருந்தது. இதனை விபரிக்கும் கதைதான் 'ஊர்'.

சதுரக்கள்ளி சிறுகதையும் புலம்பெயர் தமிழர் ஓருவரின் ஊர் திரும்பலையும், அச்சமயம் அடையாளங்கள் இழந்து இருக்கும் அவரது வீட்டையும், அயலவரான பெண் ஒருத்தியுடன் ஏற்பட்ட  பிணக்கு பற்றியும், அதன் விளைவாக குடும்பங்கள் பிரிபட்டதையும், வசியம் செய்து  விட்டாலுமென்ற பயத்தால் அவரின் தந்தையார் வேலிக்கருகில் வளர்த்த சதுரக்கள்ளி பற்றியும், தந்தையின் இறப்பு பற்றியும், விபரிக்கும். வீட்டின் ஜன்னல், நிலை  பாகங்களையெல்லாம் திருடிச் சென்றுவிட்டார்கள். வீடு சென்றவர் அமைதி திரும்பட்டும் வீட்டை என்ன செய்வது என்பது பற்றிச் சிந்திக்கலாம் என்று திரும்புகின்றார்.

அ.முத்துலிங்கத்தின் 'புதுப்பெண்சாதி'


எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொழில் காரணமாக உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றவர்.,அவற்றின் பின்னணியில் கதைகள் எழுதியவர்,. இவ்விதம் அவர் திரிந்துகொண்டிருந்தபோதும் அவரால் பிறந்த மண்ணை மறக்கவே முடியவில்லை. ஊர் பற்றிய , அவரது நெஞ்சில் நிலைத்து விட்ட நினைவுகளையும் அவர் காவிச்சென்றார் என்பதைத்தான் அவரது பெரும்பாலான கதைகள் புலப்படுத்துகின்றன. புலம்பெயர் இலக்கியத்தில் இது ஒரு பொதுவான பண்பு. நினைவுகளைக் காவிச்செல்லும் ஒட்டகங்கள்தாம் புலம்பெயர் மனிதர்கள். அ.முத்துலிங்கமும் அதற்கு விதிவிலக்கானவர். ஊர் நினைவுகளை, ஊர் ஆளுமைகளை மையமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள் பல இதனைத்தான் புலப்படுத்துகின்றன. புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர் அல்லர் அவர். பணி நிமித்தம் புலம்பெயர்ந்தவர். ஆயினும் அவர் நிலத்தின் நிகழ்வுகள் அவரையும் பாதிக்கின்றன.அதன் விளைவுகள், பாதிப்புகள் அவர் கதைகள் பலவற்றில் தெரிகின்றன.

அவரது புதுப்பெண்சாதி - மறக்க முடியாத கதை. என்னைப்பொறுத்தவரையில் அ.முத்துலிங்கத்தின் மிகச்சிறந்த கதையாக இதையே குறிப்பிடுவேன். கதை இதுதான். பத்மலோசனி என்னும் படித்தவள். கணிதம் ,ஆங்கிலம் எல்லாவற்றிலும் விருதுகள் வாங்கியவள். அழகானவள். அழகிய கண்களுக்குச் சொந்தக்காரி. ஊரில் கடை வைத்திருக்கும் ராமநாதனுக்கு மனைவியாக வருகின்றாள், அன்றிலிருந்து அவள் ஊருக்கு ராமநாதனின் புதுப் பெண்சாதி என்பதைக்குறிக்கப் புதுப்பெண்சாதி என்றழைக்கப்படுகின்றாள். கணவனுக்குத்  துணையாகக் கடையில் வேலை செய்கிறாள். அவளது பெயர் யாருக்கும் தெரியாது. புதுப்பெண்சாதி அம்மா, புதுப்பெண்சாதி அக்கா, புதுப்பெண்சாதி என்றே அழைக்கப்படுகின்றாள்.

மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்'

-எழுத்தாளர் மெலிஞ்சி முத்தன் -

மெலிஞ்சி முத்தனின் 'ஏற்றுக் கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்' - கச்சிதமாக எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்று இச்சிறுகதை,. கூர் 2011. ஆண்டிதழில் வெளியாகியுள்ளது. 
 
ஊர்சோன் ,பாலந்தை போர்த்துக்கல், ஸ்பெயின் பழங்கதைகளின் பாத்திரங்கள். இந்தப்பெயர்கள் வந்ததன் காரணம் காலனிகளைப் பிடிப்பதற்காக இலங்கை வந்த போர்த்துக்கேயர்தான். போர்த்துக்கல், ஸ்பெயின் பழைய கதைகளின்படி ஊர்சோன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன். அரச குடும்பத்தில் நிகழ்ந்த அசம்பாவிதமொன்றால் அரசி காட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுப் போடுகிறாள். இருவரும் ஆண் குழந்தைகள் . ஒருவன் ஊர்சோன். அடுத்தவன் பாலந்தை. ஊர்சோனைக் கரடியொன்று தூக்கிச் சென்று விடுகின்றது. இந்த ஊர்சோன், பாலந்தை கதை பல தலைமுறைகளைக் கடந்து, கலாச்சாரங்களைக் கடந்து கதை சொல்லியின் காலத்தை வந்தடைகின்றது. தென்மோடிக் கூத்துகளில் பாவிக்கப்படுகின்றது. கூத்துக்களில் பாவிக்கப்படும் பெயர்களை ஊரவர்கள் வைப்பது வழக்கம். அவ்வாறாக கதை சொல்லியின் வாழ்வில் எதிர்ப்படும் ஊர்சோசுனுக்கும் அப்பெயர் வைக்கப்படுகின்றது.

நினைவில் நிற்கும் டானியல் ஜீவாவின் 'சந்தியா அப்பு'

- எழுத்தாளர் டானியல் ஜீவா -

கனடாவில் வசிக்கும் டானியல் ஜீவா எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது சிறுகதைகளிலொன்றான சந்தியா அப்பு எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று.  புகலிடத்து எழுத்துகளில் காணப்படும் ஓரம்சம் கழிவிரக்கம். ஊரை விட்டு உயிர்தப்பப் புலம் பெயர்ந்தாலும், ஊர் பற்றிய நினைவுகள், அங்கு பழகிய மனிதர்கள், இயற்கைக் காட்சிகள், அங்கு அனுபவித்த வாழ்வின் நிகழ்வுகள் இவையெல்லாம் தொடர்ந்தும் நினைவில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து வரும். நினைவை வாட்டிக்கொண்டேயிருக்கும். இவ்விதமான ஓர் ஆளுமைதான் கதை சொல்லியைப்பொறுத்தவரையில் சந்தியா அப்புவும். கதை சொல்லியும் ஒரு கடற்றொழிலாளிதான்.

இக்கதையினைக் கதைசொல்லியூடு விபரிக்கும் கதாசிரியர் எடுத்திருக்கும் கதைச்சூழல் இழந்த மண்ணில் நிலவிய சூழல். அச்சூழலில் வாழ்ந்த கதா பாத்திரங்கள். இதற்குரிய காரணங்களில் ஒன்று ஏற்கனவே கூறியிருப்பதுபோல் இழந்த மண் பற்றிய நினைவுகள், கழிவிரக்கம்தாம்.

பா.அ.ஜயகரனின் சிந்திக்க வைக்கும் 'சந்தி'


நாடகவியலாளராக, கவிஞராக, சமூக,அரசியல் செயற்பாட்டாளராக, தேடகம் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக அறியப்படுபவர் எழுத்தாளர் பா.அ.ஜயகரன். அண்மைக்காலமாக முக்கியமான சிறுகதையாசிரியராகவும் உருமாறியிருக்கிறார். பா.அ.ஜயகரன் கதைகள், ஆலோ ஆலோ ஆகிய சிறுகதைத்தொகுப்புகளும், அவனைக்கண்டீர்களா? என்னும் குறுநாவல் தொகுப்பும் வெளியாகியுள்ளன. அனைத்தும் காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள். அவனைக்கண்டீர்களா? தொகுப்பைக் குறுநாவல் மற்றும் சிறுகதைத்தொகுப்பென்று கூறலாம். ஏனென்றால் சில கதைகள் சிறுகதைகள் போல் அமைந்துள்ளன.

எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் 'அவனைக் கண்டீர்களா/" தொகுப்பிலுள்ள  'சந்தி - ஒரு கதைசொல்லியின்  கதை', பற்றிய கருத்துகள் இவை. ஜயகரன் சிறந்த நாடகாசிரியர் என்பதை இக்கதைகளை வாசிக்கையில் உணர முடிந்தது. மிகவும் இலகுவாக அவரால் இக்கதைகளைச் சிறந்த  நாடகங்களாக மாற்றியமைக்க முடியும்.அதற்கேற்ப வகையில் பாத்திரங்கள், சம்பவங்கள், கதைக்களச் சூழல் விபரிப்புகள் எல்லாம் பின்னப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே நடையில் தென்படும் நகைச்சுவையும் என்னைக்கவர்ந்தது. மொழி நடை செறிவானது.

டானியல் அன்ரனியின் 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'.

- டானியல் அன்ரனி -

'டானியல் அன்ரனி' எழுத்தாளர் டானியல் அன்ரனியின் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அடங்கிய தொகுப்பு.ம் கருப்புப் பிரதிகள் வெளியீடாகக் கடந்த ஆண்டு வெளியான தொகுப்பு. இத்தொகுப்பின் முதற் கதை 'பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன'.  தொகுப்பின் முதற் கதை மட்டுமல்ல, முக்கியமான கதையும் கூடத்தான். இக்கதை ஏற்கனவே சமர் இலக்கிய வட்ட வெளியீடான 'வலை' சிறுகதைத்தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.  'வலை' தொகுப்பின் இரண்டாம் பதிப்பு சுரபி பதிப்பக வெளியீடாக வெளியானது. வலையில் வெளியான கதைகளுடன், கவிதைகள் , கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டு வெளியான தொகுப்பே கருப்புப் பிரதிகள் வெளியிட்ட 'டானியல் அன்ரனி' தொகுப்பு.

கதை சம்மாட்டியார் சவிரிமுத்தர், அவரிடம் வேலை பார்க்கும் மலையகத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரை உள்ளடக்கிப் பின்னப்பட்ட கதை.  கதையின் ஆரம்பத்தில் சவிரிமுத்தர் வீடு நோக்கி வருகின்றார். வரும் வழியில் பெருமாளைப் பொலிஸார் ஜீப்பில் ஏற்றிச் செல்வதைக் காணகின்றார். கதையின் இறுதியில் அதற்கான காரணம் மறைமுகமாக வெளிப்படுகின்றது.

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய குறிப்பொன்று!


எனது ஓவியா பதிப்பகம் வெளியிட்ட 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலைப்பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி தன் கருத்தினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அவரது பதிவுக்கு நன்றி. அதனைக் கீழே தந்துள்ளேன். மேற்படி நாவலை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு - https://noolaham.net/project/1139/113857/113857.pdf

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவின் பதிவு கீழே;

"பதிவுகள்' எனும் வலைத்தளத்தை நடாத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்கள் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என பல்வேறு வகையான இலக்கியங்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

'நவீன விக்கிரமாதித்தன்' என்ற இந்த நூலில் உரைநடையும் கவிதைகளும் இணைந்திருக்கின்றன. அவர் இதனை ஒரு நாவல் எனவகைப்படுத்துகிறார். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்ற நூலை எப்படி நாவலா இல்லையா என விவாதிக்கலாமோ, அதேபோல இதனையும் விவாதிக்கலாம். ஆனால், அந்த விவாதங்களுள் நான் செல்லவிரும்பவில்லை. அ. முத்துலிங்கம் அவர்கள் அந்த நூலில் அவரின் சுயசரிதையைப் பதிய விரும்பிருக்கிறார் என்றால் இந்த நூலில் கிரிதரன் தனது லட்சிய/நிஜ வாழ்க்கைத்துணையைப் பற்றியும் அவரின் நண்பர்களைப் பற்றியும் அவரின் தேடல்கள் பற்றியும் பதிய விரும்பியிருக்கிறார் எனலாம்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...