Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Friday, December 17, 2021

அறிமுகம்: வ.ந.கிரிதரனின் நேரம் - யு டியூப் சானல்!


நண்பர்களே! 'வ.ந.கிரிதரனின் நேரம்' என்னும் யு டியூப் 'சான'லொன்றினை ஆரம்பித்துள்ள விடயத்தை ஏற்கனவே அறியத்தந்திருந்தேன். இதுவரையில் அங்கு 15 காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கலை,இலக்கியம், சமூகம், அரசியல் & அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப்பற்றிய எனது எண்ணப்பதிவுகளாக அவை இருக்கும். சிறிய காணொளிகளில் அவை அமைந்திருக்கும்.
ஏற்கனவே அவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் சிலவற்றை இங்கு பகிர்ந்திருந்தேன். இனியும் பகிர்ந்துகொள்வேன்.

Monday, December 13, 2021

(யு டியூப்) வ.ந.கிரிதரனின் நேரம்: மழையும், நானும்


நண்பர்களே! ஒரு பரீட்சார்த்த முயற்சியாக யு டியூப்பில் ஒரு சானலை ஆரம்பித்துள்ளேன். அதில் முதல் முறையாக ஒரு காணொளியை பதிவேற்றம் செய்துள்ளேன். அவ்வப்போது பல்வேறு விடயங்களைப்பற்றிய என் சிற்றுரைகள் இங்கு இடம் பெறும். என் படைப்புகள் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் இங்கு இடம் பெறும். 

https://www.youtube.com/watch?v=INNoa7GEEAA

இக்காணொளியினை நான் எனது ஐபோன் மூலம் உருவாக்கினேன். முதல் முயற்சியென்பதால் குறைகள் நிச்சயமிருக்கும். காலப்போக்கில் அவை குறைந்து நிறைகள் அதிகரிக்கும். காணொளியைப் பாருங்கள். உங்கள் கருத்துகள் எவையாயினும் அவற்றைப் பதிவு செய்யுங்கள். அவை நிச்சயம் எதிர்காலக் காணொளிகளுக்கு ஆரோக்கியமாக உதவும். நன்றி

Wednesday, August 25, 2021

இதுவரை வெளியான வ.ந.கிரிதரனின் நூல்கள் & மின்னூல்கள் (அமேசன் - கிண்டில் வெளியீடு)!

வ.ந.கிரிதரனின் வெளியான நூல்கள்
:

1. அமெரிக்கா (நாவல் & சிறுகதைத்தொகுப்பு. ஸ்நேகா - மங்கை பதிப்பக வெளியீடு)
2. நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு நூல். ஸ்நேகா பதிப்பக வெளியீடு)
3. மண்ணின் குரல் (நாவற் தொகுப்பு. குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடு)
4. குடிவரவாளன் (நாவல். ஓவியா பதிப்பக வெளியீடு)
5. அமெரிக்கா (நாவல். திருத்திய பதிப்பு.  மகுடம் வெளியீடு)
6. எழுக அதி மானுடா (கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக  வெளியீடு)
7. மண்ணின் குரல் (நாவல், கட்டுரை & கவிதைத்தொகுப்பு. மங்கை பதிப்பக வெளியீடு)

Friday, July 23, 2021

கவிதை: மகா புலவரும் மகா கவிஞரும்! - வ.ந.கிரிதரன்


மகாகவிஞர் அவர் என்று கூறுவர்.
சொற்களைத் தேர்ந்துடுத்து
சோகங்களை வடித்தெடுப்பதில்
அவர் வல்லவர்.
அவரது கவிதை வரிகளில்
அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள்
அவரது ஆழ்மனத்து உணர்வுகள்
அல்ல.
அவரது ஆழ்மனத்தை மூடிநிற்கும்
அவரது வெளிமனத்தின் செருக்குகள் அவை. 

அபுனைவிலொரு புனைவோவியம் : 'கமலாம்பாள் சரித்திரம்' நாவற் காட்சி!

அபுனைவொன்றில் குறிப்பிடப்படும் புனைவொன்றில் இடம் பெறும் காட்சிக்கான அட்டை ஓவியம்!
 

 
இங்குள்ள கல்கி சஞ்சிகையின் ஓவியர் விஜயா வரைந்த அட்டை ஓவியத்துக்குச் சிறப்பொன்றுண்டு. பொதுவாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகும் புனைகதைகளுக்குத்தான் ஓவியங்கள், அட்டை ஓவியங்கள் வரைவார்கள். ஆனால் இங்குள்ள அட்டை ஓவியமோ அபுனைவில் குறிப்பிடப்படும் புனைகதையொன்றில் இடம் பெறும் காட்சிக்காக வரையப்பட்ட ஓவியம்.

மணிமேகலையின் காதல்!


பொன்னியின் செல்வன் நாவலை ஐந்து பாகங்கள் நீட்டிய கல்கி நாவலை எவ்விதம் அனைவரையும் கவரும் வகையில் படைத்தாரோ அவ்விதமே இறுதி அத்தியாயத்தையும் மறக்க முடியாதவகையில் படைத்திருப்பார்.
அதுவரை நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, பெரிய/சின்ன பழுவேட்டைரையர்கள், பூங்குழலி, சேந்தன் அமுதன்., ஆழ்வார்க்கடியான், அருண்மொழிவர்மன், நந்தினி. மந்தாகினி. ஆனால் நாவலின் முடிவு முக்கியப்படுத்துவது வந்தியத்தேவனையும் , அதுவரை அதிகம் முக்கியப்படுத்தப்படாமலிருந்த கடம்பூர் சம்புவரையரின் புத்திரியான மணிமேகலையையும்தாம். 

Tuesday, July 20, 2021

'பதிவுகள்' இணைய இதழின் ஊடகத்தகவற் தொகுப்பு (Media Kit)

எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு , "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரமாகக்கொண்டு 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணையத்தமிழ் இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com என்னும் மின்னஞ்சல் முகவரிகளிலொன்றுக்கு அனுப்பி வையுங்கள்.
 
'பதிவுகள்' இணைய இதழின் ஊடகத்தகவற் தொகுப்பினை (Media Kit) இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
 

 

Wednesday, June 2, 2021

அறிந்து கொள்வோம்: கேலிச்சித்திரக்காரர் அவந்த ஆர்டிகல (Awantha Artigala)! - வ.ந.கிரிதரன் -

இலங்கையின் முக்கிய கேலிச்சித்திரக்காரர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் அவந்த ஆர்டிகலா.  'டெய்லி மிரர்', 'அத்த' ஆகிய பத்திரிகைகளில் வெளியாகும் அவரது கேலிச்சித்திரங்கள் தனித்துவமானவை. முக்கியமானவை. மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. சமூக,அரசியல் நிகழ்வுகளை படைப்புத்திறமையுடன், சமுதாயப்பிரக்ஞையுடன் விமர்சிப்பவை.

இலங்கை பல கேலிச்சித்திரக்காரர்களைக் கண்டுள்ளது. விஜேரூபகே விஜேசோமா (.Wijerupage Wijesoma)  அவர்களில் புகழ்பெற்ற கேலிச்சித்திரக்காரர். அவரது கேலிசித்திரமே அவந்தா ஆட்டிகல முதன் முறையாக , அவர் சிறுவனாகவிருந்த சமயம் எதிர்கொண்ட கேலிச்சித்திரம்.

நிறைய வாசியுங்கள்! நிறைய சிந்தியுங்கள்! நிறைய எழுதுங்கள்! - வ.ந.கிரிதரன் -

பிரபல கலை,இலக்கிய விமர்சகர் இந்திரன் எழுத்தாளர் சு.ரா.வின் பின்வரும் கூற்றினைத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்:

"நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். - --சுந்தர ராமசாமி"

டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, ஜெயகாந்தன், பஷீர், தகழி, ஜானகிராமன், புதுமைப்பித்தன், பாரதியார்..  தனது குறுகிய கால வாழ்வில் இவர்களைப்போல் பலர் நிறைய எழுதியவர்கள். ஜெயமோகன் போன்றவர்கள் நிறைய எழுகின்றவர்கள். சுந்தர  ராமசாமியே சுறுசுறுப்பாய் இயங்கிவர்தான். நிறைய எழுதியவர்தான். எனவே சு.ரா.வின் கூற்றைப் பொதுவானதொரு கூற்றாக எடுக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்விதம் கூறுவது சிலருக்கு வாடிக்கை.  என்னைப்பொறுத்தவரையில்  உண்மையான எழுத்தாளர் பாரதியைப்போல் நிறைய வாசிப்பவர்; நிறைய எழுதுபவர்; நிறைய  சிந்திப்பவர்.  அருந்ததி ராயைப்போல் , மெளனியைப்போன்றவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அரிதானவர்கள்.

சூழல்களை மீறியவர்கள்! - வ.ந.கிரிதரன் -

கார்ல் மார்க்ஸ் வறுமையில் வாடியபோதுதான் மூலதனத்தை எழுதினார். அவரது குழந்தையொன்று இறந்தபோது  கூட வறுமை  அவரை வாட்டியது. இருந்தும் எழுதினார். மூலதனத்தை உலகுக்கு வழங்கினார்.  புகழ் பெற்ற 'முத்து' போன்ற நாவல்களை எழுதி, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜோன் ஸ்டீன்பெக் வறுமையில் வாடியவர்தான். சார்ள்ஸ் டிக்கன்ஸ் குடும்ப வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திப் பல்வேறு வேலைகளைச் செய்தார். மார்க்சிம் கோர்க்கியின் நிலையும் இதுதான். எழுத்தாளர் ப.சிங்காரம் தமிழகத்தில் சிங்கார வாழ்க்கை வாழவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் இருந்தவாறே அவரது புகழ்பெற்ற நாவல்களை எழுதினார்.   இலங்கையில் கூட வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடிய நிலையில்தான் எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் எழுதிக்கொண்டிருந்தார். இறுதியில் வறுமை அல்ல முதுமைதான் அதனை நிறுத்தியது. புதுமைப்பித்தனை வறுமை வாட்டியது. இறுதி வரை எழுதிக்கொண்டேயிருந்தார். அவர் அனுபவித்த வறுமையினை அனைவரும் அறிவர். அவ்வறுமையின் மத்தியிலும் அவர் எழுதியவை, மொழிபெயர்த்தவை வியக்க வைப்பவை. விந்தனையும் வறுமை விட்டு விடவில்லை. ஆனால் அது அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. மகாகவி பாரதியாரையும் வறுமை விட்டு வைக்கவில்லை. கூடவே அரசியல்ரீதியிலான நெருக்கடிகள். இவற்றுக்கு மத்தியில்தான் அவர் எழுதிக்குவித்தார். அதுவும் அவர் வாழ்ந்ததோ முப்பத்தொன்பது ஆண்டுகள்தாம்.

பால்ய பருவத்து நண்பர்களின் துயரம்! - வ.ந.கிரிதரன் -

என் பால்ய , பதின்ம பருவத்துத் தோழர்களில் முக்கியமான இருவரை என்னால் மறக்க முடியாது. அவர்களுடன் என்னால் முடிந்த வரையில் நான் தொடர்பிலிருந்தேன். ஒருவர் என் சிந்தனையாற்றலை வளர்ப்பதற்கு உதவினார். அடுத்தவரோ என்னை எழுதுவதற்கு ஊக்குவித்தார். நான் எழுதுவதற்கு அவர் மிகவும் உதவியாகவிருந்தார். அவர் தந்த ஊக்கமே என்னை மேலும் மேலும் எழுத வைத்தது.  என் பால்ய பருவத்திலிருந்து பதின்ம மற்றும் இளமைப்பருவங்களிலும் அவர் என்னை ஊக்குவித்துக் கொண்டேயிருந்தார். இவர்கள் இருவரையும் என்னால் ஒரு போதுமே மறக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் என் நினைவுகளில் இவர்கள் நிறைந்தேயிருப்பார்கள்.

இவர்களுடன் களிப்புடன் கழித்த நாட்களை நான் அடிக்கடி எண்ணிப்பார்ப்பதுண்டு. மறக்க முடியாத இன்பம் மிக்க நாட்கள் அவை. இவர்களுடன் கழித்த பொழுதுகள் இனியவை.

Tuesday, May 25, 2021

வண்ணநிலவனும் , கி.ராஜநாராயணனும்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் வண்ணநிலவன் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்த தமிழக அரசின் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை சிறிது அதிகமென்று கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கி.ராஜநாராயணின் படைப்புகள் எவையும் ஞானப்பீட விருது பெறும் தகுதி உள்ளவை அல்ல என்றும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வண்ணநிலவனின் மேற்படி கூற்று சிறிது ஏமாற்றத்தினை அளிக்கின்றது. . அவ்விதம் அவர் கூறுவது அவரது உரிமை. ஆனால் அவ்விதம் அவர் கூறிய தருணம் உரிய தருணமல்ல. என்னைப்பொறுத்தவரையில் தமிழ் எழுத்தாளர்கள் இருவருக்குத்தான் இதுவரையில் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை கிடைத்துள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் புதுவை அரசு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குக்களை நடத்தியது. தற்போது தமிழக அரசு எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதையினை நடாத்தியுள்ளது.

Friday, March 19, 2021

வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary) - Witty Garden -

சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத்தில் பல்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. மின்னூல்களாகப் பல படைப்புகளுள்ளன. எனது படைப்புகள் பலவற்றை வாசகர்கள் தாமாகவே இனங்கண்டு அவற்றைப்பற்றி எழுதியுள்ளார்கள். பல்கலைகழகங்களில் ஆய்வுகள் செய்துள்ளார்கள். தற்போதும் மாணவியொருத்தர் முனைவர் பட்டப்படிப்புக்காக ஆய்வுகள் செய்து வருகின்றார். எழுத்தாளர்கள், கலை,இலக்கிய விமர்சகர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் என என்னுடன் தொடர்பு கொண்ட பலரும் இணையத்தில் வெளியான எனது படைப்புகள் வாயிலாக என்னை அறிந்து தொடர்பு கொண்டவர்கள்தாம். நான் ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால்.. இன்னும் எழுத்தாளர்கள் பலர் இணையத்தின் ஆரோக்கியமான பயன்பாட்டினை அறியாமல் , அவற்றைப்பாவிக்காமல் இருக்கின்றார்கள் என்பதனால்தான். மேலும் அவர்கள் தம் படைப்புகளை வெளிப்படுத்துவதற்குக் கலை,இலக்கிய ஆளுமைகளின் அங்கீகாரத்தை எண்ணிச் செயற்படுவதுதான். உங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உங்கள் படைப்புகளை இணையத்தில் வலைப்பதிவுகளில், இணைய இதழ்களில் பதிவேற்றுங்கள். அவை வாசகர்களை நேரில் சென்றடையும். உங்கள் படைப்புகள் தரமாக இருந்தால் நிச்சயம் இன்றோ அல்லது நாளையோ அல்லது என்றோ நிச்சயம் அது உரிய வாசகர்களைச் சென்றடையும் என்பது மட்டும் நிச்சயமானது. 

Friday, February 19, 2021

கவிதை: கவிதை = அறிவுணர்வுப்புரிதல்கள் ->ஆழ்வுணர்வுக்கவி -> கவிதைகள்! - வ.ந.கிரிதரன் -

அண்மைக்காலமாக அடிக்கடி கனவுகள்
வருகின்றன.
சிலவேளைகளில் அவை கனவுகளா
நனவுகளா என்பதில் கூட
என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை.
முன்பெல்லாம் ஆழ்ந்துறங்கையில் வரும் கனவுகள்
இப்போதெல்லாம் அரைத்தூக்கத்திலும் வருகின்றன.
நம்பவே முடியவில்லை. நிஜமா? நிழலா? என்பதை.
ஆனால் கனவுகள் நனவுகள் அல்ல என்பதை
உணர்கையில் ஏற்படும் திருப்தி
இனியதோர் அனுபவம்.
அப்பாடா என்று எத்தகையதோர் நிம்மதி!
ஏன் கனவுகள் எம்மை ஆட்டிப்படைக்கின்றன?
என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு.
அறிவுணர்வின் புரிதல்கள்தமை
ஆழ்வுணர்வுக்கவி
வடித்திடும் கவிதைகளா?
அல்லது
அக்கதாசிரியர் வடித்திடும்
புனைவுக் காட்சிகளா?

கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -

எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய  புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.

கவிதை: நூலகம் நோக்கி! - வ.ந.கிரிதரன் -

அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம்
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன். அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல்.
அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை
நான் வெறெங்கும் கண்டதில்லை.
அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.
அந்தக்கப்பலிலேறி
ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு
என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது.
ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக
பாதுகாக்கவும் செய்கின்றது.
என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி
அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.

கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -


தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால்
எனக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.
பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில்
ஏற்படுத்திய வித்தியாசங்கள்
எங்களுக்கு மிகவும் சாதகமாகவிருக்கின்றன.
அதனால் தட்டையர்கள் உலகு எப்பொழுதும்
எனக்கு உவப்பானதாகவே இருக்கின்றது.
தட்டையர்கள் உலகில் நான் எப்போதுமே உவகையுறுவதற்கு
முக்கிய காரணங்களிலொன்று
என்னவென்று நினைக்கின்றீர்கள்?
மானுடப் படைப்பிலுள்ள பலவீனங்களிலொன்றுதான்.
ஏனெனில் அங்கு நான் அவர்களைவிட
எல்லாவகையிலும் உயர்ந்தவன்.
என்னை மீறி அங்கு எவையுமேயில்லை.

புதிய கட்டமைப்பில் பதிவுகள் இணைய இதழ்!

பதிவுகள் தளம் பார்வைக்குப் பழைய தளத்தைப்போலவே இருந்தாலும், உண்மையில் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்ட புதிய கட்டமைப்புடன் கூடிய தளமாக மாற்றப்பட்டுள்ளது. ஆக்கங்களை மிக இலகுவாகக் காணும்  வகையிலும், அலைபேசியில் வாசிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல வாசிப்பினை இலகுவாக்கும் பயன்மிக்க மாற்றங்களைக் கொண்டு வருவோம்.

விளம்பரதாரர்களுக்கு!

பதிவுகள் இணைய இதழை உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் வாசிக்கின்றார்கள். குறிப்பாக இந்தியா, கனடா, வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய நாடுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், சீனா, பர்மா போன்ற நாடுகளுட்பட மேலும் பல நாடுகளிலிருந்தும் வாசிக்கின்றார்கள்.

பதிவுகள் இணைய இதழில் விளம்பரம் செய்வதன்  மூலம் நீங்கள் மிகுந்த பயனை அடைய முடியும். குறிப்பாக 'ரியல் எஸ்டேட்', 'மோர்ட்கேஜ்', காப்புறுதி, பல்வகைச் சேவைகளை வழங்கும் தனிப்பட்டவர்கள் & நிறுவனங்கள் , பொருட்களை, சேவைகளை விற்பவர்கள் என  அனைவரும் மிகுந்த பயனை அடைய முடியும். அதனால்தான் கூகுள் நிறுவனம்  கூடத் தனது விளம்பரங்களைப் பதிவுகளில் வழங்குகின்றது. 

"பதிவுகள்' இணைய இதழினைப் பின்வரும் இணைய முகவரிகளில் வாசிக்கலாம்:

https://www.geotamil.com  https://www.pathivukal.com

வ.ந.கிரிதரன்: "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்".

Monday, January 18, 2021

வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் 23 - கிண்டில் பதிப்பு மின்னூலாக, அமேசன் தளத்தில் விற்பனை!

 

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக அமேசன் தளத்தில் விற்பனை!


இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல் 'அமெரிக்கா'. தாயகம் (கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். தற்போது கிண்டில் மின்னூலாக விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒரு பதிவுகள்.காம் வெளியீடு. 

'அமெரிக்கா' மின்னூல் : https://www.amazon.ca/dp/B08T6186TJ

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!

கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வை...

பிரபலமான பதிவுகள்