'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Saturday, September 20, 2025
மாக்சிம் கார்க்கியின் தாய்!
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த முகநூற் பதிவொன்றிலிருந்து இந்த அட்டைப்படத்தினைப் பெற்றேன்.
மாக்சிம் கார்க்கியின் "தாய்' நாவலுக்கான அட்டைப்படம்தான்.
பார்த்ததுமே 'தாய்' நாவலுக்குரிய இந்த அட்டைப்படம் பிடித்துப்போனது. இதுவரை நான் பார்த்த தாய் நாவலின் அட்டைப்படங்களில் சிறந்ததாக இதனையே குறிப்பிடுவேன்.
ஏனென்றால் தாயின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியம் இது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துகளில்லை.
ஒரு சாதாரணத் தாயொருத்தி எவ்விதம் மக்கள் விடுதலைக்காகப் போராடும் புரட்சிவாதியான அவளது மகனுக்கும், சக புரட்சியாளர்களுக்கும் உதவுகின்றாள் என்பதை விபரிக்கும் நாவல் என்று சுருக்கமாகத் 'தாய்' நாவலைக் கூறலாம்.
அவ்விதம் உதவுவதால் அவளுக்கு அரசால் ஏற்படும் அபாயங்களையெல்லாம் துச்சமென ஒதுக்கிவிட்டு, புரட்சியாளர்களின் நோக்கங்களை உணர்ந்து செயற்படும் தாய் அவள். அதில்தான் அவளது மகத்துவம் தங்கியுள்ளது.
இவளைப்போன்ற தாய்மார் பலரை எம் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் கண்டிருக்கின்றோம் அல்லவா. அதனால் எம்மால் இத்தாயுடன் மிகவும் நெருக்கமான, உணர்வுரீதியான பிணைப்பினை ஏற்படுத்த முடிகின்றது.
குறிப்பாக , விடுதலைப் போராட்டம் ஆயுதமயப்பட்ட காலகட்டத்தில், மறைமுகமாக , இளைஞர்கள் மக்கள் விடுதலை பற்றிச் சிந்தித்து இயங்கத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்நாவலின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் உளவியல் மிகவும் நெருக்கமானது. உணர்வுபூர்வமானது.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'
"சாவித்திரியின் பெரிய விருப்பம் " என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...

No comments:
Post a Comment